Shadow

மருத்துவம்

காவேரி மருத்துவமனை | ENT சிகிச்சைக்கான தனிப் பிரிவு தொடக்கம்

காவேரி மருத்துவமனை | ENT சிகிச்சைக்கான தனிப் பிரிவு தொடக்கம்

இது புதிது, மருத்துவம்
சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில், சர்வதேச தரத்திற்கு இணையான விரிவான நோயறிதல் மற்றும் சிகிச்சைகளுக்கான மேம்பட்ட வசதிகளுடன் கூடிய அதிநவீன காது மூக்கு தொண்டை பிரிவு, மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் பத்மஸ்ரீ முனைவர் மருத்துவர் மோகன் காமேஸ்வரன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. தூங்கும் பொழுது ஏற்படும் குறட்டை மற்றும் பிறப்பிலேயே ஏற்படும் காது கேளாமை போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிப்பது இந்த ENT பிரிவின் சிறப்பு அம்சமாகும். நுண் காது அறுவை சிகிச்சைகள், சைனஸ் அறுவை சிகிச்சைகள் மற்றும் தலை மற்றும் கழுத்து அறுவை சிகிச்சைகள் ஆகியவற்றைச் செய்வதற்கான அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தனிப்பட்ட உள்நோக்குமானி அறைகள், ஆடியோலஜி ஆய்வகம், தலைச்சுற்றல் ஆய்வகம் மற்றும் அறுவை சிகிச்சை அறைகள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையின் காது ம...
உலக MS தினம் 2024 | இளைஞர்களை ஊனமாக்கும் நோய்

உலக MS தினம் 2024 | இளைஞர்களை ஊனமாக்கும் நோய்

இது புதிது, மருத்துவம்
MSSI என்பது ‘மல்டிபிள் ஸ்க்ளிராசிஸ் சொசைட்டி ஆஃப் இந்தியா (Multiple Sclerosis Society of India)’ -வைக் குறிக்கும். உடலின் பல்வேறு இடங்களில் திசுக்கள் கடினமாகி, தண்டுவட மரப்பு நோய் (MS) ஏற்படும். மூளை மற்றும் முதுகு தண்டுவடத்து திசுக்களை மூடியுள்ள காப்புப் பொருளான மையீலின் (Myelin) கடினமாவதால் ஏற்படும் வடுக்கள், மூளை நரம்பணுக்கள் மற்றும் முதுகுத்தண்டுக்கிடையே உள்ள தொடர்பினைத் துண்டித்து, நோயாளியை ஊனமாக்குகிறது. இந்த நோய் ஏற்படுவதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆதலால், இதற்கான மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இது, 14 முதல் 40 வயதுக்குள் உள்ளோரைத் தாக்குவதால், ‘இளைஞர்களை ஊனமாக்கும் நோய் (Crippler of the Young Adult)’ என்றும் அழைக்கப்படுகிறது. MS ஒரு நரம்பியல் சிதைவு ஒழுங்கின்மைக் கோளாறாகும். இது, மூளை, முள்ளந்தண்டு வடம் மற்றும் பார்வை நரம்புகளைப் பாதிக்கிறது. மேலும் பல நரம்பியல் க...
KISC | Be Fast – பக்கவாதத்திற்கான ஒருங்கிணைந்த மையம்

KISC | Be Fast – பக்கவாதத்திற்கான ஒருங்கிணைந்த மையம்

மருத்துவம்
சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவனை, பக்கவாதம் மற்றும் பெருமூளையின் இரத்த நாளங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண, நவீன ஒருங்கிணைந்த பக்கவாதம் மையத்தைத் (KISC – Kauvery Integrated Stroke Centre) தொடங்கியுள்ளது. பக்கவாதம், அல்லது மூளை தாக்குதல், என்பது உடல் இயக்கமின்மைக்கும், மரணத்திற்குமான பொதுவான காரணங்களில் ஒன்றாகும். சராசரியாக நான்கு பேரில் ஒருவர் என்ற சதவிகிதத்தில், ஏதோ ஒரு கட்டத்தில் இந்நோயால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று உலக பக்கவாதம் அமைப்பு கூறுகிறது. ஒவ்வொரு 40 நொடிகளுக்கும் ஒருவர் மூளை தாக்குதலால் பாதிக்கப்படுகின்றனர். பக்கவாதத் தாக்குதலுக்கு ஆட்பட்டு, அதன் பின்விளைவுகளால் 10 கோடியே 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வருடத்திற்கு 1 கோடியே 22 லட்சம் பேர் புதிதாகப் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 14 கோடியே 30 லட்சம் பேர் பக்கவாதத்த...
Aim For SEVA | ஆட்டிச நிலையாளர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவை

Aim For SEVA | ஆட்டிச நிலையாளர்களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ சேவை

மருத்துவம்
சர்வதேச ஆட்டிசம் விழிப்புணர்வு மாதத்தைக் குறிக்கும் 6 ஏப்ரல் 2024 அன்று, மாண்புமிகு தமிழக ஆளுநர் ஸ்ரீ ஆர்.என்.ரவி அவர்கள், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள Aim for Seva - சுவாமி தயானந்த க்ருபா இல்லத்தின் (கிருபா) வளாகத்திற்குச் சென்று குடியிருப்புகள், மருத்துவ நிலையம், பயிற்சிக் கூடம் உள்ளிட்ட பல புதிய வசதிகளைத் திறந்து வைத்தார். அவருடன், நிர்வாக அறங்காவலரான திருமதி ஷீலா பாலாஜி, ஸ்வாமி சாக்ஷாத்க்ருதானந்த சரஸ்வதி மற்றும் திரு. ரவீ மல்ஹோத்ரா (அறங்காவலர்கள்- Aim for Seva), புத்தி கிளினிக் நிறுவனரும் மருத்துவருமான எண்ணபாடம் எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் உடனிருந்தனர். மாண்புமிகு ஆளுநர் தனது உரையில், நீண்ட கால பராமரிப்பின் அவசியத்தை எடுத்துரைத்து, அத்தகைய குழந்தையின் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் மனதில் எழுப்பும் கேள்வி, "எனக்குப் பிறகு என்ன?" என்பதைச் சுட்டிக் காட்டினார். இந்தச் சூழலில், இந்த வசதியை முன்...
காவேரி மருத்துவமனையின் முதல் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை

காவேரி மருத்துவமனையின் முதல் சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை

மருத்துவம்
ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனை தனது முதல் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சையை பிப்ரவரி 21ஆம் தேதி அன்று வெற்றிகரமாகச் செய்தது. நாற்பத்திரண்டு வயதான பெண், இறுதி நிலை சிறுநீரக செயலிழப்பு காரணமாக நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக டயாலிசிஸ் (கூழ்மப்பிரிப்பு/ சிறுநீர் பிரித்தல்) செய்து வந்தார். அவர், குடும்ப சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவரது சகோதரருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்காக அவரது தாய் ஒரு சிறுநீரகத்தை வழங்கியிருந்தார். அவரது குடும்பத்தில், தானம் கொடுக்க வேறொருவர் இல்லாததால், அவர் மருத்துவமனையின் இறந்த நன்கொடையாளர் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தார். ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில் இறந்தவரின் சிறுநீரகம் நன்கொடையாக வழங்கப்பட்டதன் காரணமாக, நோயாளிக்கு கடந்த மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர் முத்துக்குமார்...
மா காவேரி கருத்தரிப்பு மையம் – குழந்தை வரம் வேண்டுவோருக்கான வரப்பிரசாதம்

மா காவேரி கருத்தரிப்பு மையம் – குழந்தை வரம் வேண்டுவோருக்கான வரப்பிரசாதம்

மருத்துவம்
சென்னையின் பல்லாவரம் – துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள காவேரி மருத்துவமனையில், கருத்தரித்தல் மற்றும் கருவுறுதல் தொடர்பான பிற சிக்கல்களை எதிர்கொள்ளும் தம்பதிகளுக்கு, சிறந்த மருத்துவ ஆலோசனை வழங்குவதற்காக “மா காவேரி கருத்தரிப்பு மையம்” தொடங்கப்பட்டுள்ளது. அனுபவம் வாய்ந்த நிபுணர் மருத்துவக் குழுவுடன் அதிநவீன உபகரணங்கள் உட்பட உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன், இந்த மேம்பட்ட கருத்தரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கப்பாண்டியன், புதிய அதிநவீன மையத்தை திறந்து வைத்து, ‘மா காவேரி கருத்தரிப்பு மையம், குழந்தை பெற விரும்பும் தம்பதிகளுக்கு சிறந்ததொரு வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்துள்ளது’ எனப் பாராட்டினார். கருத்தரிப்பு மையமானது முழு வசதியுடன் கூடிய கரு ஆய்வகம், அதிநவீன அறுவைச் சிகிச்சை அரங்குகள், மேம்பட்ட நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் பரந்த அ...
”நான் இந்தியனாக பெருமைப்படுகிறேன்” ‘அப்போலோவின் கதை’ புத்தகம் வெளியிட்டு பிரதாப் சி.ரெட்டி பேச்சு

”நான் இந்தியனாக பெருமைப்படுகிறேன்” ‘அப்போலோவின் கதை’ புத்தகம் வெளியிட்டு பிரதாப் சி.ரெட்டி பேச்சு

இது புதிது, மருத்துவம்
காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக  அப்போலோ நிறுவனரான பிரதாப் சி. ரெட்டியின் பிறந்தநாளன்று, ‘அப்போலோவின் கதை’ எனும் பெயரில்  வெளியிடப்பட்டது.இந்திய மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி, மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ சேவையை வழங்கி வரும் அப்போலோ மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் 91 ஆவது பிறந்த நாள் இன்று கோகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை கீரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அவரின் பிறந்த நாள் விழாவின் போது, அவரின் பேத்தியும், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரணிண் மனைவியுமான உபாசனா காமினேனி கொனிடேலா கலந்து கொண்டார். இதன் போது எழுத்தாளர் நிம்மி சாக்கோ எழுதி, அமர் சித்ரா ...
”இப்புத்தகம் தந்தை தன் மகள்கள் மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடு” – பிரதாப் சி.ரெட்டியின் பேத்தி பேச்சு

”இப்புத்தகம் தந்தை தன் மகள்கள் மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடு” – பிரதாப் சி.ரெட்டியின் பேத்தி பேச்சு

இது புதிது, மருத்துவம்
காமிக்ஸ் வடிவில் அப்போலோ மருத்துவமனையின் வரலாறு புத்தகமாக  அப்போலோ நிறுவனரான பிரதாப் சி. ரெட்டியின் பிறந்தநாளன்று, ‘அப்போலோவின் கதை’ எனும் பெயரில்  வெளியிடப்பட்டது.இந்திய மருத்துவதுறையில் புரட்சியை ஏற்படுத்தியவரும், மருத்துவத்துறை ஆற்றிய சேவைக்காக பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் போன்ற உயரிய விருதுகளை வென்றவரும், உலகம் முழுவதும் கிளைகளை நிறுவி, மில்லியன் கணக்கிலான மக்களுக்கு இடையறாத மருத்துவ சேவையை வழங்கி வரும் அப்போலோ மருத்துவமனையின் நிறுவனருமான டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் 91 ஆவது பிறந்த நாள் இன்று கோகலமாகக் கொண்டாடப்பட்டது. சென்னை கீரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற அவரின் பிறந்த நாள் விழாவின் போது, அவரின் பேத்தியும், ‘குளோபல் ஸ்டார்’ ராம்சரணிண் மனைவியுமான உபாசனா காமினேனி கொனிடேலா கலந்து கொண்டார். இதன் போது எழுத்தாளர் நிம்மி சாக்கோ எழுதி, அமர் சித்ரா ...
“அறுவைச் சிகிச்சைக்கு வயது ஒரு தடையில்லை” – மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர்

“அறுவைச் சிகிச்சைக்கு வயது ஒரு தடையில்லை” – மருத்துவர் கிரிஷ் ஸ்ரீதர்

மருத்துவம்
சென்னை ரேடியல் சாலையிலுள்ள காவேரி மருத்துவமனையில், நுண்ணிய இரத்தநாளங்களில் ஏற்படும் அழுத்தத்தை அகற்றும் மைக்ரோவாஸ்குலர் டிகம்ப்ரஷன் (MVD – Microvascular Decompression) எனும் ஒரு வெற்றிகரமான அறுவைச் சிகிச்சையைச் செய்து, நான்கு ஆண்டுகளாகப் பேசாத 85 வயது நோயாளியின் பேச்சை மீட்டெடுத்துள்ளனர். மேலும், முகத்திலுள்ள பாதிக்கப்பட்ட நரம்பினால் ஏற்படும் ட்ரைஜெமினல் நியூரால்ஜியா (Trigeminal Neuralgia) எனும் பயங்கரமான வலியில் இருந்தும் நிவாரணம் அளித்துள்ளனர். இந்த அறுவைச் சிகிச்சை, வயது முதிர்ந்த நோயாளிகளுக்கு பாதுகாப்பான விரைவான சிகிச்சை அளிக்கும், இன்ஸ்ட்யூட் ஆஃப் ப்ரெயின் & ஸ்பெயினின் நுட்பமான அறுவைச் சிகிச்சை திறனிற்கும், மேம்படுத்தப்பட்ட உணர்வகற்றும் (Anaesthesia) திறனிற்கும் சிறந்த சான்றாக விளங்குகிறது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, தனது முகத்தின் இடது பக்கத்தில் மின்னதிர்வைப் போன்றதொரு வலியா...
பாதுகாப்பான பிரசவம் – RCOGஇன் மருத்துவக் கருத்தரங்கம்

பாதுகாப்பான பிரசவம் – RCOGஇன் மருத்துவக் கருத்தரங்கம்

மருத்துவம்
 யு.கே.வில் உள்ள 'தி ராயல் காலேஜ் ஆஃப் ஆப்ஸ்டட்ரிஷன் அண்ட் கைனகாலஜிஸ்ட் (RCOG)' என்பது உலகம் முழுவதும் உள்ள பெண்களின் உடல்நலத்தை மேம்படுத்த உருவாக்கப்பட்ட சர்வதேச நிறுவனமாகும். யு.கே.விற்கு வெளியே, மகப்பேறு மருத்துவர்கள், மகளிர் நோய் மருத்துவர்கள் என அதிக RCOG உறுப்பினர்களைக் கொண்ட நாடு இந்தியாவே! AICC ROCG இன் தெற்கு மண்டலத்து வருடாந்திர கருத்தரங்கு, ROCG தமிழ்நாடு கூட்டமைப்புடன் (ATNROCG) இணைந்து, ஜனவரி 20, 21 ஆகிய நாட்களில் சென்னையில் நிகழ்பெற்றது. இந்தக் கருத்தரங்கில், சென்னையிலுள்ள சீதாபதி க்ளினிக் & ஹாஸ்பிட்டலின் சீனியர் OBGYN-ஆன மருத்துவர் உமா ராம் அவர்களை, AICC RCOG இன் அகில இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சீனியர் OBGYN-ஆன அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் சுமனா மனோகர் அவர்கள் தெற்கு மண்டலத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். RCOGஇன் தலைவரான மருத்துவர் Ranee ...
மிக்ஜாம் சூறாவளியில் ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்

மிக்ஜாம் சூறாவளியில் ஒரு நெகிழ்ச்சியூட்டும் சம்பவம்

மருத்துவம்
சென்னை மாநகரத்துக்குப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ளது மிக்ஜாம் புயல். மாநகரம் எங்கும் வெள்ள நீர் சூழ்ந்திருக்க, அடிப்படை வசதிகளைப் பாதிப்படைந்தவர்களுக்கு வழங்க இயலாத நிலை இருந்து. தாழ்வான பகுதிகளான வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. மடிப்பாக்கம் குபேரன் நகரில் வசித்து வரும் திருமதி கற்பகம் கண்ணன் என்ற பெண் தனது கர்ப்ப காலத்தின் இறுதிக் கட்டத்தில் இருந்த சமயத்தில் அவரது வீடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. இது குறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்து வந்து அவரைப் பத்திரமாக மீட்டனர். அவர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் தெருக்களில் படகு மூலம் சவாரி செய்து, அவரைச் சரியான நேரத்தில் பாதுகாப்பாக மீட்டெடுத்தனர். பிறகு 45 நிமிடங்கள் படகு சவாரி செய்து நேரத்தை வீணாக்காமல் அருகி...
காவேரி மருத்துவமனையின் அசத்தலான மூளை ஆப்ரேஷன்

காவேரி மருத்துவமனையின் அசத்தலான மூளை ஆப்ரேஷன்

இது புதிது, மருத்துவம்
எண்பத்தொரு வயதான திருமதி கே.எஸ். தனது மகளுடன் அமெரிக்காவின் பாஸ்டனில் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறார். கடந்த மூன்று மாதங்களில், அவருக்கு நடப்பதிலும், அறிவாற்றல் செயல்பாட்டிலும் சிரமம் ஏற்பட்டு, அது அதிகரித்தவண்ணமும் இருந்தது. இதனால் தள்ளாட்டம் ஏற்பட்டு அடிக்கடி கீழே விழும்படியான நிலை ஏற்பட்டது. இதுவும் அவள் வீழ்ச்சிக்கு ஆளாக நேரிட்டது. இரண்டு முழங்காலிலும் மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவ வரலாற்றினைத் தவிர்த்து, வேறு எந்த தொந்தரவும் இல்லாமல் அவரது வாழ்க்கை சாதாரணமாகவே இருந்தது. அமெரிக்காவில் அவர் கலந்தாலோசித்த மருத்துவர்கள், மேற்கூறிய நடைத்தள்ளாட்டத்தோடு, திருமதி கே.எஸ். அவர்களின் வலது காதின் கேட்கும் திறன் குறைவையும், வலது கையைப் பயன்படுத்தும் போது உண்டான ஒருங்கிணைப்புக் குறைபாட்டையும் கவனித்தனர். மேலும் பரிசோதணையில், அவருக்கு மூளையில் பெரிய கட்டி இருப்பதைக் கண்டறிந்தனர். அந்தக் கட்...
சினாப்ஸ் பிஆர்பி & ஸ்டெம் செல் மருத்துவகம் திறப்பு விழா

சினாப்ஸ் பிஆர்பி & ஸ்டெம் செல் மருத்துவகம் திறப்பு விழா

மருத்துவம்
சினாப்ஸ் பிஆர்பி மற்றும் ஸ்டெம் செல் மருத்துவகம் திறப்பு விழா நடைபெற்றது. சினாப்ஸ் முதுகு மற்றும் மூட்டு வலி மையம் சென்னை பெசன்ட் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற வலி நிவாரண மருத்துவகம் ஆகும். இங்கு முக்கியமாக முதுகு வலி, கழுத்து வலி, மூட்டு வலி (முழங்கால், தோள் பட்டை, கணுக்கால்), விளையாட்டினால் ஏற்படும் காயங்கள் ஆகியவற்றுக்கு சிகிச்சை அளிக்கக்கப்படுகிறது. இந்த மையத்தின் நிறுவுனர்கள் டாக்டர் கார்த்திக் நடராஜன் மற்றும் டாக்டர் V. வான்மதி ஆகிய இருவரும் அறுவை சிகிச்சை இல்லாத வலி நிவாரணத்தில் நிபுணர்கள். இவர்கள் முதுகுத் தண்டு பிரச்சனைகளுக்கும் டிஸ்க் ஹெர்னியேஷன், கழுத்து வலி, தோள் வலி, ஸியாடிகா, ஆர்த்ரைடிஸ் ஆகிய நோய்களுக்கும் இதர முதுகு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட சிக்கல்களுக்கும் அறுவை சிகிச்சை இல்லாத தீர்வுகள் தருகின்றனர். இவர்கள் இப்பொழுது சினாப்ஸ் ரீஜெனெரேட்டிவ் கிளினிக் என்னும் பிரிவைப் ...
நரம்பியல் மனநலமருத்துவம் வட்டமேசை 2022

நரம்பியல் மனநலமருத்துவம் வட்டமேசை 2022

மருத்துவம்
சர்வதேச நரம்பியல் மனநலமருத்துவக் கூட்டமைப்புடன் (INA) இணைந்து புத்தி க்ளினிக் & அப்போலோ மருத்துவமனை, நரம்பியல் மனநலமருத்துவம் வட்டமேசை 2022 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர். குறிப்பாக, கோவிட் காலத்திற்குப் பிறகு மனநலம் தொடர்பான பிரச்சனைகள் ஓர் அலை போல் அதிகரித்துள்ளது. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் நலனை மேம்படுத்துவதற்கான புதியமுறைகளைக் கண்டறிய வேண்டிய கட்டாயம் உலகிற்கு எழுந்துள்ளது. இந்தக் கருத்துக்களம், மூளை மற்றும் மனதின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. நரம்பியல் மருத்துவத்தையும், மனநல மருத்துவத்தையும் இருவேறு மருத்துவப் பிரிவுகளாக நினைத்துக் கொள்கின்றோம். ஆனால், மருத்துவர்களுக்கும், பொது சுகாதாரத்தில் ஈடுபட்டுள்ளோர்களுக்கும், இவ்விரண்டு மருத்துவமும் வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தது இல்லை என்றும், இவ்விரண்டிற்கும் இடையே பரவலான ஓர் இடைத்தளம் உள்ள...