Shadow

ஆன்‌மிகம்

“திருப்பாவையில் 30 பாசுரங்கள் என்ன சொல்கிறது” – “பாவையின் திருப்பாவை” நிகழ்ச்சியைக் காணுங்கள்

“திருப்பாவையில் 30 பாசுரங்கள் என்ன சொல்கிறது” – “பாவையின் திருப்பாவை” நிகழ்ச்சியைக் காணுங்கள்

ஆன்‌மிகம், இது புதிது
மார்கழி மாதம் வந்து விட்டாலே, நாடெங்கும் ஶ்ரீமந்நாராயணனின் புகழ் பாட தொடங்கி விடுவார்கள், அந்த வகையில் சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஶ்ரீ ஆண்டாள் அவர்கள் சாட்சாத் அந்த ஶ்ரீமந்நாராயணனை மனதில் நிறுத்தி பாடிய திருப்பாவையில் 30 பாசுரங்கள் என்ன சொல்கிறது என்பதை விளக்கத்துடன் உபன்யாசம் செய்கிறார் கோழியாலம் ஸ்ரீபரதன் அவர்கள், இந்த நிகழ்ச்சி "பாவையின் திருப்பாவை" என்ற தலைப்பில் டிசம்பர் 17 முதல் காலை 6 மணிக்கு புதுயுகம் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகிறது......
ராமன், எத்தனை ராமனடி?

ராமன், எத்தனை ராமனடி?

ஆன்‌மிகம், சமூகம்
ஆந்திரத்தில் பயணம் செய்யும் போதெல்லாம் கவனித்திருக்கிறேன். அவர்களுக்கு கோதாவரியின் மீதுள்ள பற்று. அடுத்ததாக ராமனின் மீது அவர்களுக்கு இருக்கிற அபாரமான பிரேமை. வியப்பு. வாத்சல்யம். எனக்கு அது சற்று மிகையாகவே எப்போதும் தோன்றி வந்திருக்கிறது. அவர்கள் எப்போதுமே சற்று அதிகம் உணர்ச்சிவசப் படக் கூடியவர்கள் என்ற பிம்பம் எனக்குள் இருந்ததாலும் இருக்கலாம். ஒரு பக்கம் தெலுங்கானா பிரச்சினை. நக்சலைட் நெருப்பு. இதற்கு நடுவில் ராம பக்தி. எந்த ராமன்? தியாகராஜ சுவாமிகளின் பாடல்களில் நின்றும், நடந்தும், கிடந்தும் என வருகிற ராமன். மனித குல மாணிக்கம் என்று கம்பன் சிலாகிக்கிற ராமன். இந்தியாவில் எங்கு போனாலும் இது ராமர் வில் ஊன்றிய இடம், சீதை இருந்த இடம், அனுமன் தாவிய இடம் என்று குருதிக்கோட்டுடன் வரும் தொன்மங்கள் ஊற்றெடுக்கும் ராமன். நாட்டார் கலைகளில் மீண்டும் மீண்டும் மறுபிறவி எடுக்கும் ராமன். சீதையின் பிரிவுக...
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்திகள் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேத்திகள் பாடிய ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

Songs, ஆன்‌மிகம், காணொளிகள்
கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த மாபெரும் இசைக் கலைஞர், மறைந்த பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி, பக்திப் பாடல்களைப் பாடி நம் கண் முன்னே இறைவனைக் கொண்டு வந்து நிறுத்திய தெய்வீகக் குரலுக்குச் சொந்தக்காரர். இவர், திருமலை கோவிந்தனுக்கு வெங்கடேச சுப்ரபாதத்தைப் பாடிய இசைத்தட்டு 1963 ஆம் ஆண்டு வெளியானது. திருமாலின் புகழைப் பாடும் 'வெங்கடேச சுப்ரபாதம்' திருப்பதி தேவஸ்தானத்தில் ஒலிபரப்பு செய்தது மட்டுமின்றி, 1975 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக எம்.எஸ். சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டார். இத்தகைய சிறப்புமிக்க வெங்கடேச சுப்ரபாதத்தை இன்றைய தலைமுறையினர் மற்றும் எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்லும் நோக்கில், டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் புதிய அத்தியாயத்தைத் தொட்டுள்ளது. ஏற்கெனவே கந்த சஷ்டி கவசத்தை சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா குரலில் வெளியிட்டு 12 மில்...
கர்ணன் | பரசுராமரின் சாபம் பலித்ததா?

கர்ணன் | பரசுராமரின் சாபம் பலித்ததா?

ஆன்‌மிகம்
கர்ணன் | குலம் காட்டி கல்வி மறுக்கப்பட்டதா? பரசுராமர், கர்ணனை ஷத்திரியன் என்று அறிந்து சாபம் அளித்தார். அதனால் அவன் வலிமை குன்றியது, கடைசி நேரத்தில் ஆயுதங்கள் துணை வராமல் போனது என்ற குற்றச்சாட்டு. முதலில் அவன் ஏன் பரசுராமரிடம் பயிலச் சென்றான் ? அவன் துரோணரிடம் பயிலும் போது ஒரு வேண்டுகோள் வைக்கிறான். // http://www.tamilhindu.com/2008/12/mahabharata-discussions-007/ பயிற்சிபெற்ற காலத்தில், அர்ஜுனன் தன்னைப் பார்க்கிலும் அதிகம் தேர்ச்சி பெற்றவனாகவும், பல திவ்ய அஸ்திரங்களை எய்யவும் திரும்பப் பெறுவதற்குமான பயிற்சிகளில் தேறியவனாகவும் இருந்தது கர்ணனால் பொறுத்துக்கொள்ள முடியாததாக இருந்தது. ஆகவே, துரோணரைத் தனிமையில் அணுகினான். அவரிடம் கர்ணன் கேட்டுக் கொண்டதை நாரதர் விவரிக்கிறார்: Beholding that Dhananjaya was superior to every one in the science of weapons, Karna. one day approached Drona in ...
கர்ணன் | குலம் காட்டி கல்வி மறுக்கப்பட்டதா?

கர்ணன் | குலம் காட்டி கல்வி மறுக்கப்பட்டதா?

ஆன்‌மிகம்
கர்ணன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். “பயிற்சிக் காலம் தொட்டு எனது மாணவர்கள் அனைவரிலும் மேம்பட்டவனாக விளங்கியவன் அர்ஜ்ஜுனன் ஒருவனே. இன்று பலர் அறிய அதை நிரூபித்துவிட்டான். வில்லுக்கோர் விஜயன் என்ற சொல்லுக்கே பிறந்தவன் அவன்” என்று துரோணர் சான்று கூற. “பலே அர்ஜ்ஜுனா பலே! என் தம்பி எல்லோரினும் பெரியவன்” என்று தருமன் மேடையில் முழங்க. "சத்தம் வேண்டாம். இது வீண் இறுமாப்பு. மற்றவர்களைக் குறைத்துக் காட்டும் அப்படி ஒரு சொல்லை நான் அப்படியே ஏற்க முடியாது. இந்தப் போட்டியில் என் வில் திறமையைக் கண்ட பிறகு, ‘வில்லுக்கொருவன் எவன்?’ என்று சொல்லிக் காட்டுங்கள் " என்றவாறு அங்கே உள்ளே நுழைகிறான் கர்ணன். ‘யார் நீ? உன் தாய் தந்தையர் எவர்?’ என்ற கேள்வியோடு அவமானப்படுவதாகக் கர்ணன் அறிமுகம் ஆரம்பிக்கிறது. நாம் பச்சாதாபம் பொங்க கர்ணனை அணுகினோம். கர்ணனை குலத்தைச் சொல்லி, அவனை அவமதித்து அவனுக்கு ஆசாரியர்கள் ...
‘பீஷ்மரை இகழ்தல் இலமே!’ – கர்ண சுபாவம்

‘பீஷ்மரை இகழ்தல் இலமே!’ – கர்ண சுபாவம்

ஆன்‌மிகம்
கர்ணன் சிறந்த நண்பனா? கர்ணன் படத்தில் ஒரு காட்சி வரும். களத்தில் பீஷ்மர் வீழ்ந்திருக்கிறார். கர்ணன் ஓடி வந்து  கேட்கிறான். "ஐயகோ, வீர மாமலை சாய்ந்ததா? வீரத்தின் விளை நிலம் தரிசாகிப் போனதா? பகை குணத்தால் உம்மோடு துணை நில்லாமல் நம்முள் புரையோடச் செய்துவிட்டேனே! என்னை மன்னித்துவிடுங்கள்" என பீஷ்மரிடம் கேட்கிறான் கர்ணன். எப்பொழுது? பத்தாவது நாள் போரின் முடிவில். பீஷ்மரும் பெருந்தன்மையாக, "கர்ணா விதி வலியது. சென்றதை மற. வீரனே உன்னை நான் ஒதுக்கியதன் உள் நோக்கம் நீ அறியாய்.  மஹாரதி கர்ணன் என்ற மதிப்புக்கு உரியவன் நீ. உன்னை வெல்ல வல்லவன் யாரும் இல்லை. எத்தனைப்பேர் இறப்பினும் எனக்குக் கவலை இல்லை. ஒரு சூதும் அறியாத இந்தத் துரியோதனனை கடைசி வரை உடனிருந்து காத்துத் தரவேண்டும் என்ற காரணத்திற்காக உன்னைத் தனியாக  ஒதுக்கி வைத்தேன். வீரனல்லவா நான்? வீரத்தை வீரம் அவமதிக்குமா கர்ணா?" ...
கர்ணன் சிறந்த நண்பனா?

கர்ணன் சிறந்த நண்பனா?

ஆன்‌மிகம், கதை
கர்ணன் கொடையாளியா? மைத்தடங்கண் மாதேவி வார்துகிலை யான்பிடிக்க அற்று விழுந்த அருமணிகள் - மற்றவற்றைக் கோக்கேனோ என்றுரைத்த கொற்றவர்க் கென்னாருயிரைப் போக்கேனோ வெஞ்சமத்துப் புக்கு என்று பாரத வெண்பாவில் வருகிறது. இது பாரதம் பாடிய பெருந்தேவனார் என்பவர் எழுதிய நூல். வில்லி புத்தூராரும், 'மடந்தை பொன்-திரு மேகலை மணி உகவே மாசு அறத் திகழும் ஏகாந்த இடம்தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப, "எடுக்கவோ? கோக்கவோ?'" என்றான்; திடம் படுத்திடு வேல் இராசராசனுக்குச் செருமுனைச் சென்று, செஞ்சோற்றுக் கடன் கழிப்பதுவே, எனக்கு இனிப் புகழும், கருமமும், தருமமும்!' என்றான். என எழுதியுள்ளார். இதில் யார் முதல் என்று தெரியவில்லை. அதாவது துரியோதனன் மனைவி கர்ணனுடன் சொக்கட்டான் விளையாடுகிறாள். அப்போது துரியோதனன் உள்ளே வருகிறான். அவன் வருவது கர்ணனின் பின் பக்கம், அவள் பார்த்து எழுந்துவிட, கர்ணன் தோல்வி...
கர்ணன் கொடையாளியா ?

கர்ணன் கொடையாளியா ?

ஆன்‌மிகம்
(Image Courtesy: Quora.com) கர்ணனின் வீரம் மழை கொடுக்கும் கொடையுமொரு இரண்டு மாதம் வயல் கொடுக்கும் கொடையுமொரு மூன்று மாதம் பசு வழங்கும் கொடையுமொரு நான்கு மாதம் பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம் கர்ணன் படத்தில் வரும் பாடல். இப்படி கர்ணனின் வள்ளல் தன்மையைப் புகழ்ந்து வரும் நிறைய கதைகள் உண்டு. புறக்கதைகளை விடுத்துவிட்டு, பாரதத்தில் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கும் முன்பு கொடை, வள்ளல் தன்மை என்றால் என்ன? அதை முதலில் வரையறுத்துவிடலாம். கொடை என்றால் தியாகம் என்று அகராதி சொல்கின்றது. எந்த ஒரு கட்டுப்பாடுகளோ நிபந்தனைகளோ இல்லாமல், மனம் உவந்து பிறருக்கு தானமாகத் தருவது. அப்படித் தொடர்ந்து தன்னிடம் இருப்பதைப் பிறர் நலனுக்காக, பிறர் வாடுவதைக் கண்டு தன் மனம் வாடி வறியோர்க்கு வாரி வழங்குவதே வள்ளல் தன்மை. சீதக்காதி வள்ளல் பற்றிய கதை தெரியும் இல்லையா? படிக்காசு புலவர் தன் வறுமைக்காக அவரிடம்...
கர்ணனின் வீரம்

கர்ணனின் வீரம்

ஆன்‌மிகம்
(Image Courtesy: Quora.com) முந்தைய பகுதி: கர்ணன் துரியோதனன் நட்பு மாவீரன் என்றால் ஏதோ சில தருணங்களில் மட்டும் நல்ல வித்தைகளைக் காட்டிவிட்டு, அல்லது வீரத்தைக் காட்டிவிடுவது அன்று. உதாரணத்திற்கு சிலவற்றைப் பார்ப்போம். பெரும்பாலோர் கூறுவது கர்ணன் துரோணரிடம் பாடம் பயிலச் சென்ற போது அவனை குலம் காட்டி துரோணர் மறுத்தார் என்பது. எவ்வளவு அப்பட்டமான பொய்? கர்ணன் துரோணாச்சாரியாரின் மாணவர்களில் ஒருவன். துரோணர் வேண்டிய குருதட்சணை, துருபதனைச் சிறையெடுத்தலாகும். கவனிக்க, கர்ணன் இங்கே துரோணரின் மாணவனாக, கௌரவர்களின் பெரும்படையுடன் சென்று போரிட்டுப் புறமுதுகிட்டு வருகிறான். ஆனால் பாண்டவர்கள் ஐவராகச் சென்று துருபதனைச் சிறையெடுத்து வருகிறார்கள். ஆக, கர்ணன் வீரன் என்பது இங்கே அடிபட்டுவிட்டது. கூடவே துரோணர் வில் வித்தையை கர்ணனுக்கு சொல்லித் தர மறுத்தார் என்னும் பொய்யும் வெட்டவெளிச்சமாகிவிட்டது. // Vaisam...
கர்ணன் துரியோதனன் நட்பு

கர்ணன் துரியோதனன் நட்பு

ஆன்‌மிகம்
(Image Courtesy: news.indiatimes.com) முதல் பகுதி: "அடிமைக்கு ஏன் மேலாடை?" - கர்ணன் எத்தனை வகையான பாரதங்கள்? ஜைமினி பாரதம் கன்னட பாரத கதாமஞ்சரி பீல் மஹாபாரதம் இந்தோனேஷிய மஹாபாரதம் ஜைன பாரதம் வில்லிபாரதம் என இன்னும் பலவகையில் பரவி இருக்கின்றன. இவை அந்தந்தப் பிராந்திய சூழலுக்கேற்றாற்போல எழுதியவர்களால் கற்பனைக்குட்படுத்தப் பட்டு எழுதப் பட்டிருக்கின்றன. இப்படியானவற்றில் கர்ணனை அதிசூரனாக, வள்ளலாக எல்லாம் காட்டிய பெருமை தென்னிந்திய வகை பாரதங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. பிறந்தான் கர்ணன்! - ஆதிபர்வம் பகுதி 111 பிருதையின் மகளான குந்தி தேவி, துர்வாச முனிவருக்கு பணிவிடை செய்த சமயத்தில், அவர் பணிவிடையில் மகிழ்ந்து ஒரு வரம் தருகிறார். அந்த வரத்தின் படி அவள் எந்த தேவதையை நினைத்து துருவாசர் சொன்ன மந்திரத்தைச் சொல்கிறாளோ, அந்த தேவதையின் அம்சமாக ஒரு மகவு உண்டாகும். அவளும் விளையாட்டாக சூரியன...
“அடிமைக்கு ஏன் மேலாடை?” – கர்ணன்

“அடிமைக்கு ஏன் மேலாடை?” – கர்ணன்

ஆன்‌மிகம்
(Image Courtesy: https://detechter.com/) கர்ணனைப் பற்றி நாம் உருவாக்கிக் கொண்டுள்ள பிம்பத்திற்கு, சிவாஜி கணேசன் நடிப்பில் 1964 இல் வெளிவந்த “கர்ணன்” திரைப்படமே முக்கிய காரணம். அந்தப் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டது போல்தான் இதிகாசங்களும், காவியங்களும் கர்ணனை அடையாளப்படுத்துகின்றதா எனப் பார்ப்போம். பெற்றவர் பிள்ளையை வீதியில் விட்டெறிந்தால் குற்றம் உடையோர் குழந்தைகளா? பெற்ற மக்கள் சுற்றமும் அற்றுச் சுயமதிப்பும் விட்டனரே! அர்ப்பணம் செய்தோம் அவர்க்கு. என்ற வெண்பாவுடன் ஆரம்பிக்கும் படம். கர்ணன் தேர்த்தட்டில் சாய்ந்திருக்க, கிருஷ்ணன் அந்தணனாய் வந்து கையேந்தி நிற்கும் போது, இந்தக் குரலில், ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலைக் கேட்டு கண்ணில் நீர் வழியாதோர் குறைவாகவே இருக்க முடியும். படம் முழுக்க வசனங்கள் அப்படி விளையாடும். “வளர்த்த தந்தையே, வளர்த்த தாய் சொன்னதைக் கேட்டுக் கொண்டு தான் வந்தேன...
ஜெய் பஜ்ரங்பலி: தேவிஸ்ரீ பிரசாதின் அனுமன் சாலிசா

ஜெய் பஜ்ரங்பலி: தேவிஸ்ரீ பிரசாதின் அனுமன் சாலிசா

ஆன்‌மிகம், சினிமா
உலகப் புகழ் பெற்ற கர்நாடக சங்கீத மேதையான பத்மஸ்ரீ மேண்டலின் U.ஸ்ரீனிவாசனின் 50-வது பிறந்த நாள் (ஃபிப்ரவரி 28) நினைவாக அவரது சிஷ்யனும் பிரபல இசையமைப்பாளருமான தேவி ஸ்ரீ பிரசாத் தனது குருவிற்குப் பிடித்த கடவுளான அனுமனைப் போற்றும் அனுமன் சாலிசா பாடலை ஃப்யூஷனாக உருவாக்கியுள்ளார். இந்தப் பாடலுக்கு ஜெய் பஜ்ரங்பலி எனவும் பெயரிட்டுள்ளார். இந்தப் பாடலை தேவி ஸ்ரீ பிரசாத்துடன் இணைந்து இந்தியாவின் புகழ் பெற்ற பின்னணிப் பாடகரான ஷங்கர் மகாதேவன் அவர்களும் பாடியுள்ளார். மேலும் கிராமி விருது பெற்ற பத்ம பூஷன் விக்கு விநாயகரம், ட்ரம்ஸ் சிவமணி, கஞ்சிரா செல்வ கணேஷ், மேண்டலின் U.ஸ்ரீனிவாசன் அவர்களின் சகோதரரான பிரபல மேண்டலின் கலைஞர் U.ராஜேஷ் ஆகியோரும் இந்தப் பாடலுக்காக ஒன்றிணைந்து பணி புரிந்துள்ளனர். இந்தப் பாடலை, ஃபிப்ரவரி 28 அன்று மாலை, சென்னையில் உள்ள மியூசிக் அகாடெமியில் நடைபற்ற 'தி கிரேட் மேண்டலின் ஷோ (T...
நவீன உலகத்தின் நன்னெறி

நவீன உலகத்தின் நன்னெறி

ஆன்‌மிகம், சமூகம்
ஜனவரி 30, 2017 அன்று, மூன்றாம் ஆண்டு திரு. S.V.நரசிம்மன் நினைவுப் பேருரை விழாவை மயிலாப்பூரிலுள்ள ‘பாரதீய வித்யா பவன்’ ஏற்பாடு செய்திருந்தது. ‘உலகம் ஒரு குடும்பம்’ என்ற கருத்தியலையும், ‘உயர்ந்த சிந்தனைகள் எல்லாப் பக்கங்களில் இருந்தும் நம்மிடம் வரட்டும்’ என்ற குறிக்கோளும் உடையது பாரதீய வித்யா பவன். தங்கள் கருத்தியலையும் குறிக்கோளையும் பிரதிபலிக்குமாறு விருந்தினர்களைத் தேர்வு செய்திருந்தனர். அவர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசராகப் பணி புரிந்தவரான மேற்கு வங்கத்தின் முன்னாள் ஆளுநர் திரு.M.K.நாராயணனும், புகழ்பெற்ற புத்த பிட்சுவான திரு. சாம்தாங் ரின்போச்சேவும் ஆவர்.“சீன அரசாங்கம் தவத்திரு தலாய் லாமாவைத் திபெத்தில் இருந்து வெளியேறச் சொன்ன பொழுது, இந்தியா சார்பாக வரவேற்றதில் நானுமொருவன். அவருடன் வந்திருந்த குழுவில், தலாய் லாமாவின் நம்பிக்கைக்குரிய சாம்தாங் ரின்போச்சேவும் ஒருவர். தலாய் லாமா கேட்டுக்...
வியப்பூட்டும் ஆலயங்கள்

வியப்பூட்டும் ஆலயங்கள்

ஆன்‌மிகம்
விருதுநகர் மாவட்டம் சொக்கநாதன் புத்தூரில் தவநந்திகேஸ்வரர் ஆலயத்தில், சிவனுக்கு முன்புறமாக உள்ள நந்திக்கு இடப்பக்கக் காது இல்லாதிருப்பதால் "செவி அறுந்த நந்தி தேவர்'' என்று பெயர். மௌண்ட் அபுவில் (குஜராத்) அச்சல் கட் என்ற இடத்திலுள்ள அஞ்சலேஷ்வர் என்ற கோயிலில் லிங்கத்துக்குப் பதில் ஈஸ்வரனின் வலதுகால் கட்டை விரல் காணப்படுகிறது. மேலும் இந்தக் கோயிலில் உள்ள நந்தி 4320 கிலோ எடை கொண்ட பஞ்சலோகத்தினால் ஆனது. கும்பகோணத்தை அடுத்துள்ள சுந்தரப் பெருமாள் கோயிலிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திரு நல்லூர் திருத்தலம். அத்தலத்தில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் “பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர். உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புனித ஸ்தலமான அஜ்மீர் தர்ஹாவில் உலக அதிசய...
தண்ணீரில் விளக்கெரித்த வள்ளலார்!

தண்ணீரில் விளக்கெரித்த வள்ளலார்!

ஆன்‌மிகம்
வள்ளலார் என்று போற்றப்படும் இராமலிங்க அடிகளார் வகுத்த உயர்நெறியே சன்மார்க்க சங்கமாய் உருவாகியது. அனைத்து உயிகளிடத்திலும் அன்பு செய்தலே சன்மார்க்கத்தின் முக்கியக் கொள்கை. சிறந்த மனிதநேயம் கொண்ட இவர். 'உயிர்களிடத்து இரக்கம் காட்டுங்கள். எல்லா உயிர்களையும் உங்களுடைய உயிர் போலவே எண்ணுங்கள், பாவியுங்கள்' என்று ஜீவ காருண்யத்தைப் போதித்தவர். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்,பசியினால் இளைத்தே வீடு தோறிரந்தும் பசியறாதயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதித்தேன்.. என்கிற பாடல் அவரது ஜீவகாருண்ய கொள்கையை உணர்த்தும். நிலம் வறண்டு போனாலும் மனிதனது மனம் வறண்டு போய்விடக்கூடாது என்பது அவரது எண்ணம். இராமலிங்க அடிகளாரின் பாடல்களில் தாயுமானவர், திருமூலர் போன்றோரின் சாயல் தென்படும். நாயன்மார்களில் ஒருவரான ஞானசம்பந்தரே இவருடைய மானசீக குரு. இராமலிங்கருக்கு இரவில் பாட்டெழுதுவது மிகவும் பிடித்தமான செயல். அருக...