
காமமா? காதலா? – ‘பூம்பூம் காளை’யின் தேநிலவுச் சண்டை
ஒளிமார் சினிமாஸ் சார்பாக J.தனராஜ் கென்னடி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘பூம் பூம் காளை’. இந்தப் படத்தை R.D.குஷால் குமார் இயக்கியுள்ளார்.காதல் பொய், காமம் தான் நிஜம் என்று சொன்னால் உடனே பல பேர் எதிர்ப்புக்குரல் எழுப்புவார்கள். ஆனால் நிதானமாக யோசித்துப் பார்த்தால், இக்கூற்றிலுள்ள உண்மையின் சதவிகிதம் அதிகம் என்பது புரியும் என்கிறார் இயக்குநர் R.D.குஷால் குமார். ‘பூம் பூம் காளை’ படத்தின் மையக்கருத்தாக இவர் முன் வைத்திருப்பதும் இந்த விஷயத்தை தான்.நாயகன், நாயகி இருவரும் திருமணம் முடித்து தேநிலவு செல்கிறார்கள். நாயகியோ கணவனுடன் அன்பாகப் பழகி, அதன் பின்னரே தாம்பத்ய உறவில் ஈடுபட விரும்புகிறாள். நாயகனோ திருமணம் முடிந்தபின், இனி அடுத்தது கலவியின்பம் தானே, அது நடப்பது எப்போது என ‘பூம் பூம் காளை’யாக அலைபாய்கிறான்.
இப்படி எதிர் கருத்து கொண்டவர்களின் தேநிலவு நடந்ததா இல்லையா என்பதை நகைச்சுவ...


