Search

யார் ஆயா? யார் காக்கா? யார் நரி?

ஆயா வட சுட்ட கதை Aaya Vada Sutta Kathai

ஆயா வட சுட்ட கதை படத்தின் கதையை மூன்று வார்த்தைகளில் சொல்லவேண்டுமென்றால், ‘முக்கோண ஏமாற்று கதை’ எனச் சொல்லலாம். ஒரு பரபரப்பான நகரத்தில் இருக்கும் ஒரு குடியிருப்புத்தான் படத்தின் களம்.

இந்தக் குடியிருப்பில் வசிப்பவர்கள், அருகில் வசிப்பவர்களை யார் என்று கூட அறியாதவர்கள். ஆனால் இவர்களுக்கு அன்றாட தேவைகளைச் செய்து தருபவர்கள் உதாரணத்துக்கு பேப்பர் போடுபவர்கள், இஸ்திரீ செய்பவர்கள், காவலாளி, கார் டிரைவர் போன்றவர்கள் அங்கு வசிக்கும் அனைவரைப் பற்றியும் நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். அத்தகைய பணியாளர்களக்கும், அங்குப் புதிதாகக் குடிவந்த சட்டவிரோதிகளுக்கும், தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்கப்பட்ட போலிஸ் அதிகாரிக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களால் ஆனது படத்தின் திரைக்கதை.

இதில் யார் ஆயா, யார் காக்கா, யார் நரி என்பதைதான் படத்தின் தலைப்புச் சுட்டுகிறது.