Shadow

Tag: பாரதி புத்தகாலயம்

1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்

1729 – மனதைக் கனக்க வைக்கும் நாவல்

புத்தகம்
1729 என்பது ஆயிஷா நடராஜனின் புது நாவல். இந்த எண்ணைப் பற்றிய கதை மிகப் பிரபலமானது. நோய்வாய்ப்பட்டிருந்த கணித மேதை ராமானுஜரை அவரது நண்பர் ஹார்டி மருத்துவமனையில் பார்க்கப் போவார். அப்பொழுது, தான் வந்த டேக்ஸியின் நம்பரான 1729 இல் எந்தச் சுவாரசியுமும் இல்லை என அலுத்துக் கொள்வார் ஹார்டி. நோயுற்று, படுக்கையில் சோர்வுடன் படுத்திருந்த ராமானுஜர், சட்டென உற்சாகமாகி அந்த எண்ணின் சிறப்பைச் சொல்லுவார்.      என்பதே அதே! ஹார்டி இதை வெளியுலகிற்கு விவரித்த பின், 1729 என்பது 'ராமானுஜன் - ஹார்டி எண்' என்ற சிறப்புப் பெயரைப் பெற்றது. இந்த நாவலுக்கு, இந்த எண்ணை விடப் பொருத்தமான தலைப்பு வேறென்ன இருக்க இயலும்!? 80 பக்க நாவல் தான் என்றாலும் படிக்க அவ்வளவு சிரமமாக உள்ளது. முன்னுரை எழுதியுள்ள ச.தமிழ்ச்செல்வன், "பல இடங்களில் கண்களில் நீர் திரையிட வாசித்தேன். சில இடங்களில் மேற்கொண்டு தொடர்ந்து...
கருவியாலஜி – சிறுவர் பொக்கிஷம்

கருவியாலஜி – சிறுவர் பொக்கிஷம்

புத்தகம்
"கருவியாலஜி" - பத்து வயதினைக் கடந்த சிறுவர்களுக்கு அறிமுகம் செய்ய நல்லதொரு புத்தகம். அன்றாட வாழ்வில் நாம் உபயோகிக்கும், நாம் சார்ந்திருக்கும் கருவிகளின் கதையைப் பற்றிச் சொல்கிறது புத்தகம். 1958இல் 17 கிலோவாக இருந்த கால்குலேட்டர் எப்படி இன்று பாக்கெட்க்குள் அடங்குமளவு பரிமாண வளர்ச்சி பெற்றது? முதல் கால்குலேட்டரோ மணல் லாரி சைஸில் இருந்துள்ளது. இப்படியாக இரண்டாம் பக்கத்தில் தொடங்கும் சுவாரசியம் கடைசி பக்கம் வரை நீள்கிறது. செல்ஃபோனுக்கும் ஸ்மார்ட் ஃபோனுக்கும் உள்ள வித்தியாசமென்ன? சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பயன்பாடுகளென்ன? புல்லட் ரயில்களின் வேகமென்ன? அவை எவ்வாறு இயங்குகின்றன எனப் பக்கத்திற்குப் பக்கம் தகவல்கள். ஏ.டி.எம்., மைக்ரோ ஓவன், பேஸ் மேக்கர், டச் ஸ்க்ரீன், ரோபோட் என நீளும் பட்டியலில், பென்சில் சீவும் ஷார்ப்னருக்கும் கோட்டா ஒதுக்கியுள்ளார் ஆயிஷா இரா.நடராசன். தொடக்கத்தில் ஒரு மே...
அங்கீகரிக்கப்பட்ட பால்ய கனவு

அங்கீகரிக்கப்பட்ட பால்ய கனவு

கட்டுரை, புத்தகம்
'ஆமை காட்டிய அற்புத உலகம்' எனும் நல்லதொரு சிறுவர் நூலை எழுதியுள்ளார் எஸ்.பாலபாரதி. கதைக்குள் நுழையும் முன்பே ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. அது, 7 வயதான சமர்சேந்தனின் நூல் பற்றிய மதிப்புரை ஆகும். சிறுவர் நூலொன்றை ஒரு சிறுவன் எப்படி உள்வாங்கிக் கொண்டான் என்று அறிந்து கொள்ள முடிந்தது. அதுவும் அச்சிறுவன் பொறாமைப்பட வைக்குமளவு மிகச் சிறந்த வாசகன். கடையில் வாங்கிய புத்தகத்தை, வீட்டுக்குப் போகும் வழியிலேயே படித்து முடிக்குமளவு அதி தீவிர புத்தகக் காதலன். அவனது மதிப்புரையில் இருந்த ஓர் அட்டகாசமான கேள்வி மிகவும் யோசிக்க வைத்தது. “சுறா மட்டும் ஃப்ரெண்ட்லியா இல்லாமல் ஏன் வயலன்ஸா இருக்குது?” ‘கதையில் ஏன் வில்லன் வேண்டும்?’ என்பதாக அந்தக் கேள்வியைப் புரிந்து கொண்டேன். வில்லன்களைச் சிருஷ்டிப்பது பெரியவர்கள் தானோ? சிறுவர்கள் உலகில் அனைவருமே நண்பர்கள் தான் போலும். ஆக, எழுத்தாளரினுடைய ஜம்பம், பிரயத்தனம்...
சந்துருவுக்கு என்னாச்சு?

சந்துருவுக்கு என்னாச்சு?

புத்தகம்
சுமார் 7 வயது மதிக்கத்தக்க தருண் எனும் சிறுவனின் மனதில் எழும் கேள்வியான "சந்துருவுக்கு என்னாச்சு?" என்பதுதான் புத்தகத்தின் தலைப்பு. குழந்தைகள் உலகம் கேள்விகளால் நிரம்பியது. அவர்களின் கேள்விகளை எதிர்கொள்வது போல் பெரியவர்களைப் பதற்றத்துக்கு உள்ளாக்கும் விஷயம் வேறில்லை. அப்படித்தான், தருணின் கேள்வி அவனது அம்மா சரஸ்வதியை அதிர்ச்சியடைய வைக்கிறது. கொஞ்சம் அதட்டலுடன், அக்கேள்வியை எரிச்சலுடன் கடந்து விடுகிறார் சரஸ்வதி. இதற்கே தருண் தன் தந்தைக்குப் பயந்து, அவர் கொஞ்சம் தள்ளிச் செல்லும்வரை காத்திருந்தே தன் தாயிடம் கேட்கிறான். தந்தை முன் கேள்விகள் கேட்க தருண் ஏன் தயங்க வேண்டும்? "எங்கம்மா போறோம்?" "தொரைக்கு எங்கன்னு சொன்னாத்தான் வருவீங்களோ?" 'உனக்கு கேள்வி கேட்கும் அதிகாரமில்லை' என்ற எண்ணத்தை குழந்தைகள் மனதில் விதைப்பதுதான் அவர்கள் மீது செலுத்தப்படும் உச்சபட்ச உளவியல் வன்முறையாக இருக்கும். இத்த...