Shadow

கட்டுரை

The voice of Hind Rajab – நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிறுமியின் குரல்

The voice of Hind Rajab – நடுக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிறுமியின் குரல்

அயல் சினிமா, அரசியல், இது புதிது, சமூகம், சினிமா, திரை விமர்சனம்
யாரோ ஒருவர் யாருக்கோ அழைத்த சில நொடி தொலைபேசி உரையாடல், உங்கள் மனதைக் கனக்கச் செய்துவிடும் என்று சொன்னால் நம்புவீர்களா? ஜெர்மனியில் இருந்து வரும் அப்படிப்பட்ட ஓர் அழைப்பு, எமர்ஜென்சி ரெட் கிரெஸென்ட் கால் சென்ட்டரில் பணி புரியும் ஓமரைப் பாதிப்பது போலவே படம் பார்ப்பவர்களையும் பாதிப்படையச் செய்கிறது. பின், மறுபடியும் ஒரு தொலைபேசி அழைப்பு. துப்பாக்கிச் சூடு ஒலிகளுக்கு நடுவில், ஆறு வயது பெண் குழந்தை ஒன்று, தன்னை வந்து அழைத்துச் செல்லும்படி இறைஞ்சுகிறது. தன்னுடன் காரில் வந்த ஆறு பேரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் உடம்பெல்லாம் ரத்தம் என்கிறது அக்குழந்தை. ஆறு பிணங்களுக்கு மத்தியில் காருக்குள் ஒரு ஆறு வயது குழந்தை மட்டும் கால் சென்ட்டர் ஆட்களுடன் பேசிக் கொண்டிருக்கிறது என படம் தொடங்கிய 25 ஆவது நிமிடத்தில், நம் மொத்த உலகத்தையும் காலுக்கடியில் நழுவ வைத்து விடுகிறது. சுமார் இரண்டரை மணி நேரம...
நாங்க இருக்கோம் – தேர்தல் விழிப்புணர்வுக் குறும்படம்

நாங்க இருக்கோம் – தேர்தல் விழிப்புணர்வுக் குறும்படம்

Short Film, காணொளிகள், சமூகம், சினிமா
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு பொதுமக்களுக்குத் தேர்தல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ‘நாங்க இருக்கோம்’ என்கிற குறும்படம் தற்போது வெளியாகி உள்ளது. லைட்ஸ் ஆன் மீடியா சார்பில் அதன் பங்குதாரர்களில் ஒருவரான வெங்கி சந்திரசேகர் இதன் கதையை எழுதி இயக்கியிருக்கிறார்.  தமிழ் சினிமாவில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை மேற்கொள்ளும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றான லைட்ஸ் ஆன் மீடியா நிறுவனம் ஏற்கெனவே ‘பருந்தாகுது ஊர்க்குருவி’ என்கிற படத்தைத் தயாரித்துள்ளது. அது மட்டுமல்ல ‘திரெளபதி 2’, ‘அடியே’, ‘பீனிக்ஸ்’, ‘நந்தன்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களின் போஸ்ட் புரொடக்சன் பணிகளில் இந்த நிறுவனம் தனது பங்களிப்பைக் கொடுத்துள்ளது. தேர்தல் நேரத்தில் மக்களுக்கு வாக்களிக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இதை உருவாக்கியுள்ளதாகக் கூறும் இயக்குநர் வெங்கி சந்திரசேக...
“ஒரு புதிய அரசியல் நாகரீகத்தின் விதை” – கமல்ஹாசன்

“ஒரு புதிய அரசியல் நாகரீகத்தின் விதை” – கமல்ஹாசன்

அரசியல்
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முடிவு என்பது வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பேட்டரி டார்ச் சின்னத்தில் போட்டியிடுவது. பேட்டரி டார்ச் எங்களுக்கு வெறும் சின்னமல்ல. அது எங்களின் அடையாளம். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடவில்லை என்றும், மதம் சார்ந்த பிரிவினைகளில் இருந்து தமிழகத்தைக் காக்கவும், தமிழக மக்களின் முன்னேற்றம் கருதியும், திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம். இது தியாகம் அல்ல; கடமை. சுய நலம் அல்ல; பொறுமை. அரசியல் களத்தில் தேர்தல் ஒரு பகுதிதான். அதுவே இறுதி என்று ஆகாது, முற்றுப்புள்ளி என்பதும் கிடையாது. சுயநலமற்ற அரசியலுக்கு, மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெஞ்சின் ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முடிவு உங்கள் உணர்வுக்கும், உங்கள் நம்பிக்...
மகிஷாசுரமர்த்தன ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில்

மகிஷாசுரமர்த்தன ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில்

ஆன்‌மிகம், இது புதிது, சமூகம்
சென்னைக்கு அருகில் திருவள்ளூர் மாவட்டம் புதிய எருமைவெட்டிப் பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் பிப்ரவரி 8 (தை 25) அன்று காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. இந்த ஆன்மிக வைபவத்தில் திருமலை திருப்பதி பெரிய கேள்வியப்பன் சடகோப ராமாநுஜ பெரிய ஜீயர் ஸ்வாமிகளும், திருமலை திருப்பதி சிறிய கேள்வியப்பன் கோவிந்த ராமாநுஜ சின்ன ஜீயர் ஸ்வாமிகளும் கலந்து கொண்டு மங்களாசாஸனம் செய்யவுள்ளார்கள். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இத்திருக்கோயிலில் திருமலை அனந்தாண்பிள்ளை வம்சாவளியினரால் கடந்த ஐந்து தலைமுறைகளாக நித்ய பூஜைகள், உற்சவங்கள் முறைப்படி செய்யப்பட்டு வருகின்றன. அருள்மிகு ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோயில் மஹா ஸம்ப்ரோக்ஷணம் வைபவத்திற்கான ஏற்பாடுகளை தக்கார்/உதவி ஆணையர் திரு. மு. சிவஞானம், பரம்பரை அர்ச்சகர்...
4000 கோடி ரூபாய் முதலீடு – தமிழ்நாடு அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம்

4000 கோடி ரூபாய் முதலீடு – தமிழ்நாடு அரசுடன் ஜியோ ஹாட்ஸ்டார் ஒப்பந்தம்

சமூகம், சினிமா, திரைத் துளி
தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறையின் வளர்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டு, ஜியோ ஹாட்ஸ்டார் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ₹4,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு கடிதத்தில் இன்று கையெழுத்திட்டது. சென்னையில் நடத்தப்பட்ட இந்தப் பிரம்மாண்ட நிகழ்வில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் பத்ம பூஷன் கமல்ஹாசன், தமிழ்நாடு செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், மோகன்லால், நாகார்ஜுனா, விஜய் சேதுபதி, மற்றும் தென்னிந்தியத் திரை உலக பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். ஜியோ ஹாட்ஸ்டார்-இன் SVOD மற்றும் தலைமை மார்கெட்டிங் அதிகாரி சுஷாந்த் ஸ்ரீராம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் தெற்கு பொழுதுபோக்கு கிளஸ்டர் தலைவர் கிருஷ்ணன் குட்டி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தக் கூட்டாண்மை தமிழ்நாட்டின...
Durgotsav – சென்னையில் ஜொலிக்கும் வங்காளக் கிராமப்புறம் | SMCA

Durgotsav – சென்னையில் ஜொலிக்கும் வங்காளக் கிராமப்புறம் | SMCA

ஆன்‌மிகம், இது புதிது, சமூகம்
“ஷரதோத்சவ்” எனும் இலையுதிர்காலத் திருவிழாவைச் சென்னையில் 47 ஆவது ஆண்டாகக் கொண்டாடுகிறது SMCA. நந்தனத்திலுள்ள மந்திரா கார்டனஸில், செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 2 வரை இவ்விழா கோலகலமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, முதல்முறையாகக் கிராமப்புற வங்காளம் போலவே வடிவமைக்கப்பட்ட குடில்களுக்கு மத்தியில் நவராத்திரியைச் சென்னையில் கொண்டாடுகின்றனர். சக்தியின் தேவி – துர்கா மாதாவை வணங்கித் தொடங்கப் பெறும் இந்த விழா, இசைக் கச்சேரிகள், புகழ்பெற்ற கலைஞர்களின் மேடை அரங்கேற்றங்கள், உணவுத் திருவிழா, பல்வேறு போட்டிகள், குலுக்கல் முறை பரிசுகள் என பிரம்மாண்டமாய் ஐந்து நாட்கள் நிகழ்கின்றன. பல்வேறு சிறப்புமிக்க வணிக அரங்குகளும் நிறுவப்பட்டுள்ளன. SMCA - நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக அன்னதானம், கல்வி, சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகளில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு ஆதரவைச் சிறப்பாக வழங்கி வழங்குகி...
Tata Harrier EV | Off roading இல் மாஸ் மஹாராஜா

Tata Harrier EV | Off roading இல் மாஸ் மஹாராஜா

சமூகம்
டாடா நிறுவனத்தின் புதுவரவு எலெக்ட்ரிக் கார் ஹரியர் EV ஆகும். சமீபத்தில் வெளியான இந்த ஃபுல் சைஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தக் கார் வாங்கப் பலரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், சென்னையில் உள்ள லக்ஷ்மி டாடா டீலர்ஷிப்பில் இதன் வெளியீடு இன்று நடைபெற்றது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள மெட்ராஸ் ஆஃப்-ரோடு அகாடெமியில் முற்றிலும் புதிய ஹரியர் EV-இன் செயல்திறன் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதற்கான நிகழ்வில் லக்ஷ்மி டாடா சார்பில் வல்லுநர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். வந்தவர்கள் டாடா ஹரியர் EV கரடு முரடான பாதையில் செய்த சம்பவங்களைப் பார்த்து வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தனர். முற்றிலும் புதிய ஹரியர் EV இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களுடன் வருகிறது. இவை இரண்டும் இணைந்து அதிகபட்சமாக 504 நியூட்டன் மீட்டர் ட...
அனிருத்தின் Hukum – முன்னுதாரணமாகும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

அனிருத்தின் Hukum – முன்னுதாரணமாகும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி

சமூகம்
'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார். பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத், ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் இதற்கு முன் இசை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதிய இசை அனுபவத்தை வழங்குவதற்காகத் தயாராகிறார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி (Marg Swarnabhoomi) எனும் இடத்தில் நடைபெறுகிறது. பல்லாயிரக்கணக்கில் திரளும் இசை ரசிகர்களின் பாதுகாப்பு, பார்க்கிங் என ஏராளமான வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சி நடைபெறும் வகையில் விரிவான ஏற்பாடுகளை இசை நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்...
முனைவர் பட்டம் பெற்ற Pad Man பத்மஸ்ரீ அருணாசலம் முருகனந்தம்

முனைவர் பட்டம் பெற்ற Pad Man பத்மஸ்ரீ அருணாசலம் முருகனந்தம்

சமூகம்
பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் மதிப்புக்குரிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. பெண்கள் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் மனிதநேய சேவையில் ஈடுபட்ட அபூர்வமான பங்களிப்புகளுக்காக, “பேட் மேன் (Pad Man)” என அனைவரும் அன்புடன் அழைக்கும் பத்மஸ்ரீ அருணாசலம் முருகநந்தம் அவர்களுக்கு கீதம் பல்கலைக்கழகம் இலக்கியத்தில் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளது. மாநிலங்களின் புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மாதவிடாய் சுகாதாரத்தை மாற்றியமைத்த அவர், உலகளவில் பெண்களின் நலனுக்காகப் போராடும் இயக்கங்களுக்கு தூண்டுதல் அளித்துள்ளார். உலகிலேயே மிகவும் தாக்கம் செலுத்தும் 100 பேரில் ஒருவராக, Time பத்திரிகை அவரைத் தேர்ந்தெடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்திய அரசால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. அவருடைய வாழ்க்கைக் கதை அடிப்படையாக கொண்டு, தேசிய விருதுபெற்ற ஹிந்தித் திரைப்படமான “P...
ஆகஸ்ட் 16 | சென்னை நேரு விளையாட்டரங்கில் Himesh Reshammiya Capmania Tour

ஆகஸ்ட் 16 | சென்னை நேரு விளையாட்டரங்கில் Himesh Reshammiya Capmania Tour

சமூகம், சினிமா
இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாகத் தயாரித்து, உருவாக்கி நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ரசிகர்களின் பேராதரவு பெற்று சாதனை படைத்த 'யுவன் 360', 'சோனு நிகம் லைவ்', 'விஜய் ஆண்டனி 3.0', 'டைம்லெஸ் மெலோடிஸ் ஆஃப் எ லைஃப்டைம்: கே.எஸ். சித்ரா லைவ் இன் கான்செர்ட்' உள்ளிட்ட மாபெரும் வெற்றி பெற்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து, பிரபல இசைக் கலைஞர் ஹிமேஷ் ரேஷாமியா சென்னையில் முழுக்கப் பங்குபெறும் நிகழ்ச்சியை நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் முன்னணி இசை நிறுவனமான சரிகம உடன் இணைந்து வழங்க உள்ளது. பாலிவுட்டில் தனக்கெனத் தனி முத்திரை பதித்துள்ள ஹிமேஷ் ரேஷாமியா, தமிழில் கமல் ஹாசன் நடித்த 'தசவாதாரம்' வெற்றிப் படத்திற்கு இ...
AKB Pavilion IIT Enclave – பாதி விலையில் வீட்டு மனைகள் விற்பனை #Chennai

AKB Pavilion IIT Enclave – பாதி விலையில் வீட்டு மனைகள் விற்பனை #Chennai

சமூகம்
  AKB டெவலப்பர்ஸ் & ப்ரோமோட்டர்ஸ் பெருமையுடன் வழங்கும் 'AKB பெவிலியன் ஐஐடி என்க்ளேவ் (AKB Pavilion IIT Enclave)', ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி வளாகத்திற்கு நேர் எதிரே உள்ள தையூரில் 6.20 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள ஒரு பிரீமியம் கேட்டட் சமூகமாகும். AKB இன் 93 ஆவது திட்டமாகும். தனது தனித்துவமான சிந்தனைமிக்க திட்டமிடலாலும், முதலீட்டு திறனுக்காகவும் தனித்து நிற்கிறது. ரூ.17 லட்சம் முதல் ரூ.34 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இந்தத் திட்டம், 19000+ சதுர அடி பிரத்தியேக பூங்கா, பிளாக்டாப் சாலைகள், தெரு விளக்குகள் மற்றும் பசுமையான இடங்களைக் கொண்ட பாதுகாப்பான, முழுமையாக உருவாக்கப்பட்ட அமைப்பிற்குள் 600-1200 சதுர அடியில் நன்கு அமைக்கப்பட்ட நிலங்களை வழங்குகிறது. குடியிருப்பாளர்களுக்கு அமைதியான மற்றும் தன்னிறைவான சூழலை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. தென் சென்னையின் வேகமாக வளர்ந்த...
சாமானியர்களுக்கான சட்ட வகுப்பறை | புதுயுகம்

சாமானியர்களுக்கான சட்ட வகுப்பறை | புதுயுகம்

சமூகம்
நீதிமன்றம், சட்டம், தண்டனை போன்ற வார்த்தைகள் இன்றும் பலருக்கு அச்சம் தருவதாக இருக்கிறது. அதோடு இன்றைய ஏஐ உலகில் நாளுக்கு நாள் சைபர் க்ரைம் குற்றங்களும், பணம் பறிக்கும் மோசடிகளும் அதிரிகரித்து வருகின்றன. இந்த நிலையில் மக்களுக்குச் சட்டம் பற்றி எளிமையாகச் சொல்லித் தரும் வகையில் புதுயுகத்தில் சட்டம் ஒரு வகுப்பறை எனும் புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. சட்டப்படி பாதுகாப்பாக இருப்பது எப்படி, பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது எப்படி என்பது போன்ற சட்டம் சார்ந்த கேள்விகளுக்குப் பிரபல வழக்கறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள். புதுயுகம் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது....
சட்டி கறி – ஈரோடு ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவகம் | ECR அக்கரை

சட்டி கறி – ஈரோடு ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவகம் | ECR அக்கரை

இது புதிது, சமூகம்
ஈரோடு பகுதியில் பிரபலமான ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவு வகைகள் இனி சென்னையிலும் கிடைக்கும். அதற்காக, சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள அக்கரை எனும் இடத்தில் 'சட்டி கறி' உணவகம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த உணவகத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து உரிமையாளரும் உணவு ஆர்வலருமான அஷ்வினும் காயத்ரியும், ''உணவே மருந்து! ஆரோக்கியத்தின் ஆணிவேர் உணவு! எங்களுடைய சட்டி  கறி உணவகத்திற்கு வருகை தரும் விருந்தினர்களையும் வாடிக்கையாளர்களையும், அவர்களின் வீட்டைப் போல் உணர வைப்பதும், அவர்களுக்கு ஒப்பற்ற சுவையுடன் கூடிய உணவை வழங்குவதும் தான் எங்களுடைய முதன்மையான இலக்கு. எங்களுடைய உணவகத்தில் தென்னிந்தியப் பாணியில் நாட்டுக்கோழி மற்றும் கடல் சார்ந்த உணவுகளைத் தயாரித்து வழங்குகிறோம். எங்கள...
“கோபத்தின் தந்திரமான வழி” – திரு. கோபால்கிருஷ்ண காந்தி | Dr. B.Ramamurthi Oration

“கோபத்தின் தந்திரமான வழி” – திரு. கோபால்கிருஷ்ண காந்தி | Dr. B.Ramamurthi Oration

இது புதிது, சமூகம்
ஆசிய – ஆஸ்திரலேசியன் நரம்பியல் அறுவைச் சிகிச்சை (AASNS - Asian Australasian Neurosurgery) கருத்தரங்கின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டு, வருடத்திற்கு இருமுறை நடத்தப்படும் டாக்டர் B. ராமமூர்த்தி சொற்பொழிவில், முன்னாள் ஆளுநரும், இராஜதந்திரியும், சிறந்த நிர்வாகியுமான திரு. கோபால்கிருஷ்ண காந்தி அவர்கள் உரையாற்றினார். இந்நிகழ்வு, 23 ஃபிப்ரவரி 2025, ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னையில் நடைபெற்றது. காவேரி மருத்துவமனையின் வழிகாட்டியும், நரம்பியல் இயக்குநரும் மருத்துவருமான கிரிஷ் ஸ்ரீதர், “டாக்டர் B. ராமமூர்த்தி இந்தியாவின் முன்னோடி நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர், இந்திய நரம்பியல் சங்கம் (NSI – Neurological Society of India) & ஆசிய – ஆஸ்திரலேசியன் சங்கத்தின் நிறுவன உறுப்பினராவர். அவர் குருவாகவும், வழிகாட்டியாகவும், நண்பராகவும் பலருக்கு வழிகாட்டியுள்ளார்” என்றார். மேலும், ‘கோபத்தின் தந்திரமான...
அப்போலோ மருத்துவமனை | மாதிரி அங்கன்வாடி மையம் – உபாசனா

அப்போலோ மருத்துவமனை | மாதிரி அங்கன்வாடி மையம் – உபாசனா

சமூகம்
அப்போலோ மருத்துவமனையின் துணை தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, பிதாபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவி, பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணிக்காக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையைத் துவங்கி வைத்தார் . ஒரு புதிய சுகாதார முன்முயற்சியில், தலைவர் டாக்டர் பிரதாப் சி. ரெட்டியின் 93 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அப்போலோ மருத்துவமனையின் துணை தலைவர் உபாசனா காமினேனி கொனிடேலா, சமீபத்தில் பிதாமபுரத்தில் மாதிரி அங்கன்வாடி மையத்தை நிறுவுவதாக அறிவித்தார். இந்தப் புதிய முயற்சி, சுத்தம், சுகாதாரம், மற்றும் ஊட்டச்சத்தை மேம்படுத்துவதன் மூலம் பெண்களுக்கான முன்னேற்றத்தையும் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகிறது. இந்த அங்கன்வாடி பணிகள் முக்கியமான முதல் 1000 நாட்களுக்கு தாய் மற்றும் குழந்தை சுகாதாரத்தை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. மேலும் ஊட்டச்சத்து குறைபாட்டைப் பூஜ்ஜியமாக உறுதிப...