
டிஜிட்டல் தமிழ் சினிமாவிற்கு வித்திட்ட வெற்றிப்படம் ‘சிலந்தி’
காலங்காலமாகப் படச்சுருளில் எடுக்கப்பட்டு வந்த திரைப்படங்கள் இன்று முழுமையாக டிஜிட்டல் திரைப்படங்களாக மாறிவிட்டன. இதற்கு வழிகாட்டியதுடன் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் நம்பிக்கையைத் தந்த முதல் தென்னிந்திய சினிமாவான "சிலந்தி", 2008ஆம் ஆண்டு மே 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் டிஜிட்டலில் ரிலீஸ் ஆகிப் பெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிதான் அதன் பின், எல்லோரும் டிஜிட்டல் திரைப்படங்களைத் தயாரிப்பதற்கு நம்பிக்கையையும் துணிச்சலையும் கொடுத்தது.
இந்தப் படத்தைத் திருப்பூரைச் சேர்ந்த சங்கர் பழனிச்சாமி ஜி கம்பெனி சார்பில் தயாரித்திருந்தார். சினிமா பத்திரிகையாளராக "மாலை முரசு" நாளிதழில் பணியாற்றிய ஆதிராஜன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி இயக்குனராக அறிமுகமானார் (இவர் கன்னடத்தில் ‘ரணதந்த்ரா’, தமிழில் ‘அருவா சண்ட’, ‘நினைவெல்லாம் நீயடா’ படங்களை இயக்கியவர்). முன்னாவு...


