
ஜெயலலிதா – ஜெயஸ்ரீ – ஜெயவர்தன்
1987 மே 29-ஆம் தேதி அதிமுகவைச் சேர்ந்த மிக முக்கியமான நபருக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. தன்னுடைய குழந்தைக்குக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் பெயர் சூட்ட வேண்டும் என்று விரும்புகிறார் அந்த நபர். தன் மனைவியை அழைத்துக் கொண்டு, கைக்குழந்தையோடு ஜெயலலிதாவைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று தன் குழந்தைக்கு நீங்கள் தான் பெயர் சூட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.
ஜெயலலிதா அப்போது குழந்தையை வாங்கி முத்தம் கொடுத்து, உச்சிமுகர்ந்து, அமைச்சர் ஜெயக்குமாரின் மகனுக்கு ஜெயவர்தன் என்று பெயரிடுகிறார். ஜெயவர்தன் பள்ளிப்படிப்பை முடித்து, மருத்துவக் கல்லூரியில் படிக்கிறார். 22 ஆவது வயதில் மருத்துவத்தில் முதுகலை படிப்பை ராமச்சந்திரா மருத்துவமனையில் முடிக்கிறார் ஜெயவர்தன்.
படித்து முடித்த போது வயது 24 அவருக்கு, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது தமிழகம். 2013 டிசம்பர் மா...


