
செத்தும் ஆயிரம் பொன் விமர்சனம்
ஏப்ரல் 1 அன்று, நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் வெளியாகியுள்ள படம்.
சிறு வயதிலேயே ஊரை விட்டுப் போய்விடும் மீரா, தன் பாட்டி கிருஷ்ணவேனியைப் பார்க்க வேண்டாவெறுப்பாக ஆப்பனூர் எனும் கிராமத்திற்கு வருகிறாள். அவர்கள் உறவுக்குள் என்ன சிக்கல், அது எப்படி நகர்கிறது என்பதுதான் படத்தின் கதை. என்றாலும், ஒருவரின் மரணத்தை ஆப்பனூர் மக்கள் எப்படி அணுகுகின்றனர் என்பது கதையோடு பின்னிப் பிணைந்த இழையாக வருகிறது. இந்த இழை தான் படத்தின் தனித்துவத்திற்கும் சிறப்பிற்கும் காரணம்.
ஜில் ஜங் ஜக் படத்தில், ஜக்-காக நடித்திருந்த அவினாஷ் ரகுதேவன், ஒப்பனைக் கலைஞன் குபேரனாக நடித்துள்ளார். இறந்தவர்களைக் குளிப்பாட்டி, அரிதாரம் (சாயம்) பூசி, நாற்காலியில் இறந்தவரைஅலங்காரத்துடன் ஜம்மென்று உட்கார வைக்கும் கலைஞன். இறந்தவர்களுக்கு இறுதி மரியாதை செய்யும் ஓர் ஆத்மார்த்தமான கர்வம் குபேரனிடம் எப்பொழுதும் இருக்கும். தான் செய்த தவறைப் பொதுவி...


