Shadow

“திருப்பாவையில் 30 பாசுரங்கள் என்ன சொல்கிறது” – “பாவையின் திருப்பாவை” நிகழ்ச்சியைக் காணுங்கள்

மார்கழி மாதம் வந்து விட்டாலே, நாடெங்கும் ஶ்ரீமந்நாராயணனின் புகழ் பாட தொடங்கி விடுவார்கள், அந்த வகையில் சூடிக்கொடுத்த சுடர்கொடியான ஶ்ரீ ஆண்டாள் அவர்கள் சாட்சாத் அந்த ஶ்ரீமந்நாராயணனை மனதில் நிறுத்தி பாடிய திருப்பாவையில் 30 பாசுரங்கள் என்ன சொல்கிறது என்பதை விளக்கத்துடன் உபன்யாசம் செய்கிறார் கோழியாலம் ஸ்ரீபரதன் அவர்கள், இந்த நிகழ்ச்சி “பாவையின் திருப்பாவை” என்ற தலைப்பில் டிசம்பர் 17 முதல் காலை 6 மணிக்கு புதுயுகம் யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகிறது…