

‘மக்கள் தொடர்பாளன்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இந்தப் படத்தை எச்.முருகனின் கிரீன் சேனல் மூவீஸ் தயாரிக்கிறது.
இதில் நாயகனாக விண் ஸ்டார் விஜய் நடிக்க, மும்பை மாடல் அழகி சைத்ரா, பெங்களூருரைச் சேர்ந்த ரீனா உள்பட பதினெட்டு புதுமுகங்கள் உடன் நடிக்கின்றனர். சம்பத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இசை – சந்தோஷ் ராம்; ஒளிப்பதிவு – மணிகண்டன், அகரன். இந்தப் படத்துக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி எச்.முருகன் டைரக்டு செய்கிறார்.
சிறு வயதிலேயே சினிமா மீது ஆர்வம் உள்ள இளைஞன் தொடர்ந்து திரைப்படங்கள் பார்ப்பது, மேடையில் நடிப்பது என்று இருக்கிறான். வேலை செய்யாமல் ஊர் சுற்றுவது, தாயம் விளையாடுவது, அத்தை பெண்களுடன் சுற்றுவது என்று பொழுதைக் கழிக்கிறான். அவன் சினிமாவில் நடிக்க எடுத்த முயற்சி என்ன, அதில் வெற்றி பெற்றானா என்பதுதான் இந்தப் படத்தின் கதை.
மும்பை, பெங்களூரு, திருச்சி, மதுரை, ஏற்காடு, கரூர், சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.


