Shadow

ஸ்ரீதேவியின் மாம் – சீனாவில் வெளியாகிறது

MOM-in-China

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகையாகப் புகழ்பெற்றவர் ஸ்ரீதேவி. அவர் தனது வழக்கம் போல், 2017 இல் வெளிவந்த மாம் படத்தில் மிகச்சிறந்த நடிப்பைக் கொடுத்திருந்தார். அது அவருக்குத் தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.

அவரது இந்த 300வது திரைப்படமானது மிகச் சிறந்த விமர்சனங்களைப் பெற்றது. அத்துடன் திரைத்துறையில் அவரது 50வது ஆண்டில் தைரியமான மற்றும் அசாதாரணமான கதையைத் தேர்ந்தெடுத்து நடித்ததற்கு மிகப்பெரிய பாராட்டுகளையும் திரைத்துறையில் பெற்றார்.

போலந்து, செக் குடியரசு, ரஷ்யா, அரபு நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட 39 நாடுகளில் Zee Studios வெளியிட்ட இந்தப் படம் தற்போது சீனாவிலும் வெளியாக இருக்கிறது.

சிறந்த பின்னணி இசைக்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்குத் தேசிய விருதைப் பெற்றுத் தந்த இந்தப் படம், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி சீனாவில் வெளியிடப்பட உள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் கூறும்போது, “மாம் படம் ரிலீஸ் ஆன எல்லா நாடுகளிலும், தாய்மார்களுக்கும், பார்வையாளர்களுக்கும் படத்துடன் ஒரு பிணைப்பை உண்டாக்கியது. இது தான் ஸ்ரீதேவியின் கடைசி படம் என்பதால், இந்த அழகிய கதையை முடிந்தவரை அதிகமான மக்களுக்குக் கொண்டு சென்று, இதயத்தைத் தொடும் இந்தத் திரைப்படத்தை, மற்றொரு மிகப்பெரிய நாட்டிற்கும் எடுத்துச் செல்வதில் பெருமைப்படுகிறோம்” என்கிறார் ஜீ ஸ்டுடியோஸ் இன்டர்நேஷ்னல் (Zee Studios International)-இன் மார்க்கெட்டிங் மற்றும் விவிநியோகத்துறைக்கான தலைமை அதிகாரி விபா சோப்ரா.

ரவி உத்யாவார் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த மாம் திரைப்படம், இந்தியாவில் ஏற்படுத்திய தாக்கத்தைத் தவிர்த்து, சர்வதேச அளவிலும் மிகப்பெரிய தாக்கத்தைத் தந்திருக்கிறது.