Shadow

Tag: சுந்தர ராமசாமி

கிருஷ்ணன் நம்பியின் மரண விசாரமும், நீலக்கடலும்

கிருஷ்ணன் நம்பியின் மரண விசாரமும், நீலக்கடலும்

கட்டுரை, புத்தகம்
கிருஷ்ணன் நம்பி எழுதி பிரசுரமான முதல் சிறுகதை “சுதந்திர தினம்” என்கிற பதிவுகள் உள்ளன. இக்கதை 1951இல் வெளிவந்திருப்பதாக ‘கிருஷ்ணன் நம்பி ஆக்கங்கள்’ நூல் மூலம் அறிந்து கொள்ளலாம். ஆனால் இவர் எழுத ஆரம்பித்த முதல் சிறுகதை இதுவல்ல. ‘நீலக்கடல்’ எனும் நீண்ட சிறுகதை தான் நம்பி எழுத ஆரம்பித்த முதல் சிறுகதை. வருடம் 1949. அப்போது நாங்கள் நாகர்கோவிலில் வசித்து வந்தோம். எனக்கு அச்சமயம் வயது ஒன்பது. ஒருநாள் இரவு எங்கள் பாட்டி (அப்பாவின் அம்மா) வசித்து வந்த அழகியபாண்டிபுரம் எனும் கிராமத்திலிருந்து ஒரு நபர் வந்து எங்கள் பாட்டியின் உடல் நிலை மோசமாக இருப்பதாகவும், அப்பாவை உடனேயே அழைத்து வரவேண்டும் என்கிற என் சித்தப்பாவின் வேண்டுகோளையும் தெரிவித்தார். அப்பா பதறியடித்துக் கொண்டு புறப்பட்டார். அக்காலத்தில் பேருந்து வசதிகள் மிகவும் குறைவு. அதோடு இரவு 9:30 மணிக்கு மேல் பேருந்து கிடையாது. தவறவிட்டால் மறுநாள்த...
இறுதியாகச் சிலர்

இறுதியாகச் சிலர்

கட்டுரை, சினிமா
மாயலோகத்தில் தொடரின் இறுதிப் பகுதிக்கு இப்போது வந்திருக்கிறோம். இதுவரை 21 பழம்பெரும் இலக்கியவாதிகள் பற்றிய குறிப்புகள் வெளிவந்தன. இவர்கள் அனைவரும் நமது நினைவில் வாழ்பவர்கள். இவர்களைத் தவிர மேலும் சிலரும் இலக்கியத்தோடு, திரைத்துறைக்கும் பங்களித்துள்ளனர். இந்தப் பகுதியில் அவர்களில் சிலரைப் பற்றிய மிகச் சிறிய குறிப்புக்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். சாண்டில்யன் பாஷ்யம் என்பது இவரது இயற்பெயர். மயிலாடுதுறைச் சார்ந்த கிந்தளூர் எனும் ஊரில் பிறந்தவர். இவர் ஒரு தீவிர வைஷ்ணவ பிராமணக் குடும்பத்திலிருந்து வந்தவர். கதைக்கும், கதை எழுதுபவரின் உருவத்திற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்கிற நியதி என்றும் கிடையாது. என்றாலும் இவரது கதைகளைப் படித்து விட்டு, ஏதோ கற்பனையில் இருந்த சிலர் இவரைப் பார்க்கச் சென்று, பார்த்து வியந்திருக்கிறார்கள் எனும் குறிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன. நெற்றியில் எப்...