![பீப் பாடலும் டூப் சீற்றமும்](https://ithutamil.com/wp-content/uploads/2015/12/Beep-and-Doop.jpg)
பீப் பாடலும் டூப் சீற்றமும்
நல்ல பொம்பள எவளுமிங்கு இல்லவே இல்ல..
கெட்ட ஆம்பள எவனுமிங்கில்ல..
குட் பொம்பள எவளுமிங்கில்ல..
ஃப்ராட் ஆம்பள எவனுமிங்கில்ல..
ஆளைப் பார்த்துத்தானே பொண்ணு தூண்டில் போடுவா..
அவளோட ஆச தீர,
உன்ன விலகி ஓடு வா
இந்தப் பாடல் வரிகள் இடம்பெற்றுள்ள படம் “நாலுபேரு நாலுவிதமா பேசுவாங்க”. பாடலின் தொடக்க வரி, ‘சரக்கடிச்சும் தானே போதை ஏறல’. பாடியவர் கானா பாலா. எழுதியவர் யுகபாரதி. இசையமைத்தவர் ரிஷால் சாய்.
இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், மூன்று பாடல்கள் ஒளிபரப்பப்பட்டது. அதில் சரக்கு பாட்டும் ஒன்று. இதனைத் தொடர்ந்து பேச வந்த இயக்குநர் களஞ்சியம், யுகபாரதியின் பாடல் வரிகளை மிகவும் சிலாகித்தார். அவர் சிலாகித்தது எந்தப் பாடலை எனத் தெரியவில்லை. ஆனால் எனக்கு மேலே உள்ள பாடல் வரிகள்தான் ஓடிக் கொண்டிருந்தது. அதோடு நில்லாமல், சிலரால் தமிழ்த் திரையுலகமே தமிழ்ச் சமூகம் முன் தலை குனிந்துள்ளது என நரம்பு...