
சட்டி கறி – ஈரோடு ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவகம் | ECR அக்கரை
ஈரோடு பகுதியில் பிரபலமான ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவு வகைகள் இனி சென்னையிலும் கிடைக்கும். அதற்காக, சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள அக்கரை எனும் இடத்தில் 'சட்டி கறி' உணவகம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த உணவகத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து உரிமையாளரும் உணவு ஆர்வலருமான அஷ்வினும் காயத்ரியும், ''உணவே மருந்து! ஆரோக்கியத்தின் ஆணிவேர் உணவு! எங்களுடைய சட்டி கறி உணவகத்திற்கு வருகை தரும் விருந்தினர்களையும் வாடிக்கையாளர்களையும், அவர்களின் வீட்டைப் போல் உணர வைப்பதும், அவர்களுக்கு ஒப்பற்ற சுவையுடன் கூடிய உணவை வழங்குவதும் தான் எங்களுடைய முதன்மையான இலக்கு.
எங்களுடைய உணவகத்தில் தென்னிந்தியப் பாணியில் நாட்டுக்கோழி மற்றும் கடல் சார்ந்த உணவுகளைத் தயாரித்து வழங்குகிறோம். எங்கள...