Shadow

Tag: வசனகர்த்தா பாலமுரளி வர்மா

“காடுவெட்டி குரு என்பவர் யார்?” – பாலமுரளி வர்மா | படையாண்ட மாவீரா

“காடுவெட்டி குரு என்பவர் யார்?” – பாலமுரளி வர்மா | படையாண்ட மாவீரா

சினிமா, திரைச் செய்தி
இயக்குநரும் நடிகருமான வ. கௌதமன் கதையின் நாயகனாக நடித்து, இயக்கியிருக்கும் 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள். வடத்தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையைத் தழுவித் தயாராகி இருக்கும் இந்தத் திரைப்படத்தை வி.கே. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். செப்டம்பர் 19 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிகழ்வில் பேசிய வசனகர்த்தா பாலமுரளி வர்மா, ''ஒரு திரைப்படம் வெள்ளைத்தாளில் தொடங்கி வெள்ளித் திரைக்கு வருகிறது. இந்தத் திரைப்படத்தின் பணிகளைத் தொடங...