
புத்தி – குழந்தைகளும், குழந்தைகள் நலனும்
புத்தி இம்மர்ஷன் (Buddhi Immersion) ஒருங்கிணைத்த “ப்ராப்ளம் சைல்ட் (Problem Child)” என்ற கருத்தரங்கை ஆளுநர் திரு. பன்வரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார்.
ஆளுநர், “இந்திய மக்கள் தொகையில் சுமார் 39% இருக்கும் 50 கோடி குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்துவது மிக முக்கியமான செயலாகும். பல திட்டங்களை வகுத்து முனைந்து முன்னெடுத்தாலும், பேறுகால மற்றும் குழந்தைகளின் ஊட்டக்குறைவு, தொற்று நோய்கள் போன்ற பிரச்சனைகள் இந்தியாவின் மனசாட்சியை இன்னும் உலுக்கிக் கொண்டே தான் உள்ளன.
சமூகத்தைப் பாதிப்புக்குள்ளாக்கும் குழந்தைகளின் கற்றல், மற்றவருடன் தொடர்பு கொள்ளல் போன்ற குறைபாடுகளைக் குறித்து இந்தக் கருத்தரங்கில் விவாதிக்க உள்ளனர். அரசாங்கம் குழந்தை நலனில் அக்கறை காட்டி வந்தாலும், சமூக நலனில் அக்கறை கொண்டு இத்துறை வல்லுநர்களும் மற்ற தனியார் நிறுவனங்களும் குழந்தைகள் பிரச்சனையைக் கலைவதைக் கையிலெடுத்திருப்பது வரவேற்...


