
எட்டுத்திக்கும் பற விமர்சனம்
சாதி, இனம், மதம் என குறுகிய பரப்பில் கிணற்றுத் தவளையாய்ச் சிக்கித் தவிக்காமல், அதிலிருந்து மீண்டு, விடுதலை பெற்று, பரந்த விரிந்த உலகத்தை எட்டுத் திசைகளிலும் சுதந்திரமாய்ப் பறக்கவேண்டும் என்ற பொருளில் தலைப்பைச் சூட்டியுள்ளார் இயக்குநர் வ.கீரா.
திரெளபதி படத்திற்கு நேர் எதிரான அரசியலைப் பேசியுள்ளது இப்படம். அரசியலில் எதிரெதிர் துருவம் என்றாலும் இரண்டு படத்திற்கும் பல ஒற்றுமைகள் உண்டு. எப்படி திரெளபதி படத்தில், வில்லனாக ஓர் இயக்கத் தலைவரைச் சித்தரித்திருந்தார்களோ, அப்படியே இந்தப் படத்திலும். அதே போல், ஒரு வழக்குரைஞரும், சார்பதிவாளர் அலுவலகமும், அப்படத்தில் எப்படிச் சித்தரித்திருந்தனரோ, இங்கே அப்படியே உல்டாவாகக் காட்டப்பட்டுள்ளது.
வயதான இணையின் காதல், சாலையோரம் வாழும் இணையின் காதல், சாதி மாறி காதலிக்கும் இணையின் காதல் என படத்தில் மொத்தம் மூன்று காதல்கள். சமூக நீதிக்காகப் போராடும் வழக்கு...


