
மெர்லின் விமர்சனம்
இயக்குநராகும் கனவில் இருக்கும் வெற்றிக்கு ஓர் அரிய வாய்ப்புக் கிடைக்கிறது. அதற்குத் திரைக்கதையை எழுதி முடிக்கக் குறைவான கால அளவே உள்ள காலத்தில், அவரது அறை நண்பர்களால் நிரம்பி ஆராவாரமாகவும் ஆர்ப்பாட்டமாகவும் உள்ளது. அறையில் உள்ளவர்களின் ஆராவாரத்தைக் குறைக்க, 'மெர்லின்' எனும் பேய் இரவுகளில் அச்சுறுத்துவதாகப் பீதியை ஏற்படுத்துகிறார். விளையாட்டு விபரீதம் ஆகி, அக்கற்பனைப் பேய் உண்மையிலேயே வெற்றியை ஆட்கொண்டு விடுகிறது. மெர்லினிடம் இருந்து வெற்றி எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் தொடக்கமே மிரட்டலாய் உள்ளது. நீர் இறைக்கும் விவசாயியை மோகினி பிடித்துக் கொள்கிறது. கிராமப்புறங்களில் மோகினி பற்றிய செவி வழி கதைகள் மிகப் பிரசித்தம். இயக்குநர் கீரா அதை மிக அழகாகக் காட்சிப்படுத்தி அசத்தியுள்ளார்.
மனிதனின் குற்றவுணர்வு தான் அவனைப் பீடிக்குமென இயக்குநர் கோடிட்டுக் காட்டியிருந்தாலும், மோகி...


