Shadow

Tag: NGK movie

NGK விமர்சனம்

NGK விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயற்கை விவசாயத்தில் ஈடுபடும் நந்தகோபால குமரனுக்கு உரக்கடை முதலாளிகளால் பிரச்சனை எழுகிறது. அச்சிக்கலில் இருந்து எம்.எல்.ஏ.வின் உதவியோடு தப்பித்த குமரன், அரசியல் எனும் சாக்கடையில் இறங்கி சுத்தம் செய்து, அதன் மூலம் நல்லது செய்ய நினைக்கிறான். அரசியலைச் சுத்தம் செய்தானா அல்லது அரசியலால் அசுத்தம் அடைந்தானா என்பதுதான் படத்தின் கதை. கட்சியின் அடிமட்ட தொண்டன் கிரியாக நடித்துள்ள பாலா சிங், கறை வேட்டியின் மகத்துவம் பற்றி குமரனுக்கு எடுக்கும் பாடம் மிகவும் அசத்தல். 'செல்வராகவன் இஸ் பேக்' எனத் துள்ளத் தொடங்கிய மனம், இரண்டாம் பாதியில் அப்படியே சொய்ங் எனத் துவண்டு விடுகிறது. குறிப்பாக, கீதா குமாரியாக நடித்திருக்கும் சாய் பல்லவி, தன் கணவன் குமரன் மீது சந்தேகப்படும் காட்சிகளை எல்லாம் பொறுத்துக் கொள்ள அதீதமான மனோசக்தி தேவைப்படுகிறது. ஏன் எடிட்டிங்கில் அந்தக் காட்சிகளை எல்லாம் தூக்காமல் விட்டார்களோ? மிகச் ...
‘செல்வராகவனின் 3 நொடி விதி’ – ரகுல் ப்ரீத் சிங்

‘செல்வராகவனின் 3 நொடி விதி’ – ரகுல் ப்ரீத் சிங்

சினிமா, திரைத் துளி
NGK படத்தில் செல்வராகவனின் இயக்கத்தில் அனுபவம் குறித்து நடிகை ரகுல் ப்ரீத் சிங், "செல்வராகவன் மற்ற இயக்குநர்களிலிருந்து வேறுபட்டவர். அவர் நமக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிகொண்டு வருவதில் வல்லவர். ஒரு காட்சியில் வசனம் பேசுகிறோம் என்றால், இத்தனை முறை கண்சிமிட்டக் கூடாது, மூச்சு விடும்போது தோள்பட்டை அசையக் கூடாது என்பது போன்ற சிறு சிறு விஷயங்களிலும் கவனமாக இருப்பார். அதேபோல் கார் டிரைவர் போன்ற சிறிய பாத்திரத்திரத்தில் கூட அவரின் உடல்மொழி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார். பாடல் காட்சிகள் என்றால் கூட இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவரே நடித்துக் காட்டுவார். படப்பிடிப்புத் தளத்தில் யாரும் யாருடனும் பேச முடியாது. அவரவர் நடிக்கக் கூடிய வசனங்களையும், இங்கு நிற்க வேண்டும், இப்படி நடக்க வேண்டும் என்று அனைவரும் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பார்கள். அதேபோல், 3 ந...
‘செல்வராகவன் இயக்கத்தில் நான்’ – சாய் பல்லவி

‘செல்வராகவன் இயக்கத்தில் நான்’ – சாய் பல்லவி

சினிமா, திரைத் துளி
NGK படத்தில் செல்வராகவனின் பட்டறையில் நடிக்கும் பொழுது கிடைத்த அனுபவத்தைக் குறித்து நடிகை சாய் பல்லவி, "முதல் நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வரும்போதே, 'இது கோவில் மாதிரி, ஆகையால் கோவிலுக்கு  செல்லும்போது எப்படி பக்தியோடு செல்வோமோ அப்படிதான் வரவேண்டும்' என்று கூறிவிட்டார் செல்வராகவன். நானும் முதலில் மிகக் கண்டிப்போடு இருப்பார் என்று நினைத்தேன். ஆனால் அவருடைய சினிமா என்ற பள்ளிக்கூடத்தில் எளிமையாக கற்றுக் கொள்ளலாம் என்று 2, 3 நாட்களில் புரிந்துகொண்டேன். பொதுவாகப் படப்பிடிப்புத் தளங்களில் செல்ஃபோன் உபயோகிப்போம், மற்ற படங்களைப் பற்றிப் பேசுவோம். ஆனால், செல்வராகவன் படப்பிடிப்புத் தளத்தில் 100 சதவீதம் அப்போது நடிக்க வேண்டிய காட்சியைப் பற்றிய வசனங்களை வைத்துக் கொண்டு ஆளுக்கொரு இடத்தில் நின்று கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருப்போம். ஒழுக்கம் என்றால் என்ன என்று அங்குதான் கற்றுக் கொண்டேன். மேலு...