
சிவசக்தி – சென்னையின் ‘பாடி’யில் அதிநவீன திரையரங்கம்
சென்னையின் அண்ணா நகர், பாடி, திருமங்கலம், அம்பத்தூர் சுற்று வட்டார மக்களுக்காக, நகரின் மத்தியில் அதிநவீன தொழில்நுட்பங்களோடு உருவாக்கப்பட்டுள்ளது பாடி சிவசக்தி திரையரங்கம். சிறப்பான ஒளி, ஒலியமைப்பு, கண்ணைக் கவரும் அரங்க அமைப்பு, விசாலமான பார்க்கிங் எனக் காலத்திற்கேற்ற மாற்றங்களோடு தயாராகியிருக்கும் இந்தத் திரையரங்கை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் இளைஞர் அணி தலைவர் கோ.ப.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ரிப்பன் கத்தரித்துத் திறந்து வைத்தார்.
"அண்ணா நகருக்கும், பாடிக்கும் இடையில் சிறப்பான இடத்தில் அமைந்திருக்கிறது எங்களின் சிவசக்தி திரையரங்கம். அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறப்பான, தரமான, நிறைவான பொழுதுபோக்கினை நியாயமான கட்டணத்தில் வழங்கிடும் வகையில் இந்தத் திரையரங்கை – இரண்டு திரைகள் கொண்டதாக உருவாக்கியிருக்கிறோம். இளம் ரசிகர்கள் விரும்பும் வகையில் அனைத்து மொழி படங்கள...