
பரிமளா அண்ட் கோ விமர்சனம் | Parimala and Co review
கோடை விடுமுறையைக் குறிவைத்துக் குடும்பப்படமாகப் பரிமளா அண்ட் கோ திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பட்டினப்பாக்கம் ஏரியாவில் மிடில் கிளாஸ் வாழ்வில் கலந்து நிறைந்துள்ளார் நாயகன் ஜெயராம். அவரது மனைவி ஊர்வசி, மகள்கள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார் ஆவர். இவர்கள் மூவரும் தான் அவருக்கு உலகம். ரொம்பவும் ஜாலியாக வாழ்ந்து வரும் இந்தக் குடும்பத்திற்குள் லோக்கல் தாதாவான சாண்டி நுழைகிறார். ஜெயராம் மகள்களுக்குத் தொந்தரவு கொடுக்கிறார். இதனால் கடுப்பாகும் ஜெயராம் ஃபேமிலி சாண்டியைத் தீர்த்துக்கட்ட முடிவெடுக்கிறது. அதன்பின் நடக்கும் சாண்டி மரணமும், அது சார்ந்த விசாரணையும் தான் மீதிப்படம்.
எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை முழுமையாக உள்வாங்கி நடிக்கும் திறன் படைத்த ஜெயராம் இப்படத்தில் வீணடிக்கப்பட்டுள்ளார். அவர் பாத்திரத்துக்கான எழுத்தில் துளியும் அழுத்தமில்லை. இருப்பினும் சில காட்சிகள...

