
இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் விமர்சனம்
யார் ஆண்டாலும் கவலையில்லாமல் வாழ கெட்டப் பய காளியால் 1978 இல் முடிந்திருக்கலாம். ஆனால் இன்றைய நிலையில், யார் ஆண்டாலும் அவர்களால் ஒரு பயனும் இல்லையென்ற விரக்தியிலேயே மக்கள் வாழ்கின்றனர். படத்தின் மையப்பகுதியாக அந்த விரக்தியே உழல்கிறது.
பூச்சேரி எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த குன்னிமுத்து என்பவர் வளர்க்கும் காளை மாடுகளான வெள்ளையனும் கருப்பனும் காணாமல் போய் விடுகிறது. அவை சமூகத்தில் ஏற்படுத்தும் சலசலப்பைப் பற்றியும், அச்சலசலப்பு, மாடுகள் கிடைக்க எந்த அளவு உதவின என்பதாகப் பயணிக்கிறது படத்தின் திரைக்கதை.
அரசியல் நையாண்டி தான் படத்தின் ஜானர். 'இன்ஜினியரிங் படித்த பரோட்ட மாஸ்டர்கள் தேவை' என ஒரு போர்டின் மூலம் போகிற போக்கில் சமூக அவலத்தை நையாண்டி செய்திருந்தாலும், சில காட்சிகளை வலிந்து திணித்துள்ளனர். உதாரணத்திற்கு, பெட்ரோல் விலை ஏற்றிக் கொண்டே உள்ளனர் என்பதால் மண்திண்ணி என்பவர் தனது டிவிஎஸ் 50-ஐ...


