
ரத்த சரித்திரம் விமர்சனம்
மண்ணில் குருதி படாமல் எந்த சரித்திரமும் முழுமை அடைவதில்லை.
எல்லைகளை விரிவுபடுத்துதல், இளைத்தவர்களை ஏய்த்தல், தலைமைப் பதவிக்கு விழைதல், ஆளைத் திணறடிக்கும் அழகியப் பெண்களிடம் மயங்குதல் என ஒவ்வொரு சரித்திரத்திற்குப் பின்னும், தனி மனிதன் ஒருவனின் ஆழ்ந்த அக வேட்கையே அடிநாதமாக இருக்கும். நட்பு, துரோகம், காதல், சூழ்ச்சி போன்ற சகல தந்திரங்களையும் கையாண்டு அவ்வேட்கையை தணித்துக் கொள்ள முயலும் பொழுது அடுத்த தலைமுறையினர்களுக்கு ஒரு படிப்பினையாக சரித்திரம் அங்கே உருவாகிறது. அப்படி ஐந்தாண்டுகளுக்கு (2005) முன் ஆந்திர மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய ஓர் உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு 'ரத்த சரித்திரம்' என்னும் படத்தினை இயக்கியுள்ளார் ராம் கோபால் வர்மா.
ஏழைப் பங்காளனான வீரபத்ராவும், அவரது மூத்த மகனும், ஆனந்தபுர மாநில அரசியல் பிரமுகர்களான நாகமணி மற்றும் நரசிம்ம தேவன் ஆகியோரால் கொல்லப்படுகின்றனர்...


