
“ராபருக்கும் திருடனுக்கும் என்ன வித்தியாசம்?” – இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன்
பத்திரிகையாளனியான கவிதாவின் தயாரிப்பில், பெண்கள் பிரச்னைகளை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ராபர் ஆகும். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், தயாரிப்பாளர் தாணு, நடிகர்கள் தியாகராஜன், பாக்யராஜ், அம்பிகா, ரம்பா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக க் கலந்து கோண்டனர்.
கதாசிரியரும் இயக்குநருமான ஆனந்த கிருஷ்ணன், “மெட்ரோ படத்திற்குப் பிறகு 2 வருடம் எதுவும் அமையவில்லை. ஒரு விஷயம் நடக்கும் நடக்கும் என்று எதிர்பார்த்து ஏமாற்றம் தான் மிஞ்சும். எங்களுக்காவது என்ன நடக்கிறது என்பது தெரியும். ஆனால், உடன் இருப்பவர்களுக்கு எதுவும் தெரியாது. ஆனாலும், அந்த 2 வருடமும் என்னை விட்டுப் போகாமல் ‘கோடியில் ஒருவன்’ படம் வரைக்கும் என்னுடனே பயணித்த பாண்டிக்கு நன்றி. இந்தப் படத்தின் மூலம் அவர் இயக்குநராகியிருக்கிறார். இது தான் என்னுடைய சிறந்த தருணமாகக் கருதுகிறேன்.
என்னிட...