
சூஃபியும் சுஜாதயும் விமர்சனம்
ஒரு சூஃபிக்கும், சுஜாதா எனும் வாய் பேசா முடியாத பெண்ணுக்கும் காதல் மலர்கிறது.
“சூஃபிகள், ஆடவும் பாடவும் தெரிந்த துறவிகள்” என்பார் சுஜாதாவின் பாட்டி. சூஃபியை, இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவராகப் பார்ப்பார் சுஜாதாவின் அப்பா.
உண்மையில், சூஃபிகள் மதங்களைக் கடந்தவர்கள். சூஃபிகளை, இறைச் சிந்தனையில் வாழும் ஞானிகள் என்று சொல்லலாம். பொதுவாகத் துறவு மனநிலை கொண்டவர்களாக இருப்பார்களே அன்றி, கட்டாயமாகத் துறவியாக இருந்தே ஆகவேண்டிய கட்டாயமில்லை. மதத்தை மீறிக் கலைகளின் வாயிலாக இறைவனின் ஏகத்துவத்தை விசாலப்படுத்துவதே சூஃபிகளின் தன்மை. கலையின் வழியே எதிலும் கடவுளைக் காணும் எவருமே சூஃபிகள்தான்.
படம் மிகச் சிறந்த பேரானுபவத்தை அளிக்கிறது. வீல் சேரில் அமர்ந்திருக்கும் அபூப் இசைக்க, சுஜாதா நடனமாடும் காட்சி மிக அற்புதமாக உள்ளது. அக்காட்சியைப் பின்னுக்குத் தள்ளும் வகையில், சூஃபியின் கட்டை விரல் நடனம் அசத்துகிறது. இசை...

