![](https://ithutamil.com/wp-content/uploads/2014/01/Fire-whirl-01.jpg)
காடுகளில் மரங்கள் அல்லது காய்ந்த புற்கள் ஒன்றோடு ஒன்று உரசும் போது தீ பற்றிக் கொள்ளும். இத்தகைய காட்டுத் தீ மிகவும் ஆபத்தான ஒன்று.
![](https://lh3.googleusercontent.com/-nEeKWFHQq7E/Uq32QqQxgEI/AAAAAAAACvA/qWBqlGTC7hg/w283-h327-no/Fire-whirl-02.jpg)
இத்தகைய நெருப்புச் சூறாவளியின் வெப்பம் மிகவும் அதிகமாய் இருக்கும். இதனால் இது பயணிக்கும் பாதையில் உள்ள மரங்கள், செடிகள் எல்லாம் சொற்ப நேரத்தில் தீயில் கருகிப் போகும்.
மிகவும் குறுகிய நேரத்தில் பேரழிவை உண்டாக்கிடும் தன்மையுடையது நெருப்புச் சூறாவளி. மரங்கள் செடிகள் மட்டும் இல்லாமல் காட்டில் வசிக்கும் பறவைகள், விலங்குகள், பூச்சியினங்கள் எல்லாம் கொத்துக் கொத்தாய் செத்து மடிந்து போகும்.
[youtube]http://www.youtube.com/watch?v=G2173580ju0[/youtube]