Shadow

சினிமா

இறைவி விமர்சனம்

இறைவி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
பெண்களை, குறிப்பாக மனைவியை ஆண்கள் எப்படி நடத்துகிறார்கள்? கணவனின் சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் மனைவி எனும் இறைவிகளுக்கு இருக்கும் பொறுமை, அனுசரணை, விட்டுக் கொடுக்கும் மனோபாவம் போன்றவை ஆண்களுக்கு உண்டா என்ற கேள்வியை முன் வைக்கிறது படம். பள்ளி மாணவி பொன்னி, புதிதாகத் திருமணமாகும் ஐ.டி. துறை ஊழியை யாழினி, மூத்த மகனின் திருமணத்தில் களைத்திருக்கும் மீனாக்ஷி ஆகிய மூன்று பெண்களைப் பற்றியும், அவர்களைச் சார்ந்திருக்கும் ஆண்களையும் பற்றிய கதை இது. தயாரிப்பு நிறுவனங்களின் லோகோ போடும்பொழுதே எழும் மழையின் பின்னணி இசை, நம்மை ஏதோ ஓர் அனுபவத்திற்காகத் தயார்ப்படுத்துகிறது. பொன்னி, யாழினி, மீனாக்ஷி ஆகிய மூவருக்கும் மழையில் இறங்கி நனைய ஆசை இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத சூட்சமத் தளைகள் அவர்கள் நனைவதைத் தடுத்து கையை மட்டும் நீட்டி மழையைத் தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதிக்கிறது. இம்மூவரில், ஒருவரை மட்டும...
‘மாயா’ அஸ்வின் சரவணின் புதிய படம்

‘மாயா’ அஸ்வின் சரவணின் புதிய படம்

சினிமா, திரைச் செய்தி
மோமன்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக G.A.ஹரி கிருஷ்ணன் மற்றும் "தி ஹிந்து" ரங்கராஜன் அவர்களின் பேரன் ரோஹித் ரமேஷின் WTF எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த "மோ" படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மோமன்ட் என்டர்டெயின்மென்ட் சார்பாக G.A.ஹரி கிருஷ்ணன் புதிய படமொன்றை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கவுள்ளார். நயன்தாரா நடிப்பில் வெளிவந்து அனைவரின் பாராட்டையும் பெற்று வசுலில் சாதனை படைத்த மாயா படத்தின் இயக்குநர் அஸ்வின் சரவணன் இந்த படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தயாரிப்புத் தரப்புக் கூறியுள்ளது. தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் என்பதால், அவரது அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்பவே ரசிகர்களிடம் கூடியுள்ளது. தயாரிப்ப...
ரசிகர்கள் மனதில் நிற்கப் போகும் தென்றல்

ரசிகர்கள் மனதில் நிற்கப் போகும் தென்றல்

சினிமா, திரைத் துளி
‘குற்றம் 23’ திரைப்படம் தனது கலைப்பயணத்திற்கு அமைந்த ஒரு சிறந்த தூண் எனவும், தமிழ் சினிமாவில் தன்னுடைய நிலையை ஒரு படி மேலே எடுத்து செல்லும் படமாகவும் அமையும் என்கிறார் மகிமா. படத்தில் அவரது கதாபாத்திரம் பெயர் தென்றல். 'மெளன ராகம்' திவ்யா, 'வேட்டையாடு விளையாடு' ஆராதனா, 'காக்க காக்க' மாயா, 'அலைபாயுதே' சக்தி போல மகிமா ஏற்று நடிக்கும் தென்றல் பாத்திரமும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்குமென அடித்துச் சொல்கின்றனர் படக்குழுவினர். "முதன் முதலில் எனக்கு அறிவழகன் சார் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்ததும், நான் சற்றே படப்படப்பானேன். அதன் பின்பு காலையில் எனக்கு நடைபெற்ற நடிப்பு தேர்வில் தேர்ச்சி பெற்று, அன்று மாலையே படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டேன். முதன் முதலில் அருண் விஜய் சாருடன் நடிக்கப் போகிறோம் என்ற பயம் எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஆனால் அவரின் சுமுகமான பண்பும், நட்பு ரீதியாகப் ...
பிரபு தேவாவுடன் இணையும் பாரா கான்

பிரபு தேவாவுடன் இணையும் பாரா கான்

சினிமா, திரைத் துளி
தற்போது தமிழ் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல், தெலுங்கு, ஹிந்தி என பல தரப்பு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று கொண்டிருக்கிறது, பிரபு தேவா - தமன்னா - சோனு சூட் நடிப்பில் விஜய் இயக்கும் DEVI(L) திரைப்படம். பல வருடங்கள் கழித்து மீண்டும் ஹீரோவாக நடிக்கும் பிரபு தேவா, ஹாலிவுட்டின் சிறந்த கதாசிரியர் பவுல் ஆரோன் இந்தப் படத்திற்கு விஜயுடன் இணைந்து கதை எழுதுவது, என பல சிறப்பு அம்சங்களைக் கொண்ட இந்த நட்சத்திரக் கூட்டணியின் DEVI(L) திரைப்படம், தனது முதல் நாளில் இருந்தே பலரின் ஆர்வத்தைத் தூண்டி கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்தப் படத்தை பற்றிய தகல்வல்கள் யாவும் காட்டுத்தீ போல் அனைவரிடத்திலும் பரவிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவின் முன்னணி நடன இயக்குநரான பாரா கான், இவர்களுடன் இணைந்திருப்பது படத்தின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. நடன இயக்குநராக மட்டுமில்லாமல் படத...
தமிழின் இன்றைய நிலை – கவிஞர் மனுஷ்யபுத்திரன்

தமிழின் இன்றைய நிலை – கவிஞர் மனுஷ்யபுத்திரன்

சினிமா, புத்தகம்
தமிழ்த்திரை உலகின் முன்னணி கதை வசனகர்த்தாக்களில் ஒருவரான கண்மணி ராஜாமுகமது எழுதிய, "பால்யகால சொர்கவெளி (கவிதைத் தொகுப்பு)”, "நீங்கள் அறைவதற்கு அவனிடம் மூன்றாவது கன்னம் இல்லை (சிறுகதைத் தொகுப்பு)” நூல்கள் வெளியீட்டு விழா, நேற்று மாலை சென்னை மைலாப்பூர் கவிக்கோ அரங்கில் நடைபெற்றது. கவிஞர் மனுஷ்யபுத்திரன் நூல்களை வெளியிட ராஜ் டிவி ரவீந்திரன் பெற்றுக் கொண்டார். கவிஞர் இசாக், விழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க, M.M.அப்துல்லா வரவேற்றுப் பேசினார். கவிஞர் மனுஷ்யபுத்திரன் பேசுகையில், "பேச்சு வழக்கில் தமிழ்ச் சொற்களின் பயன்பாடு சுருங்கி, நாம் ஏறத்தாழ அவற்றை இழந்து வருகிறோம். இப்போதெல்லம் நல்லவற்றைக் குறித்து சொல்லும் போது 'செம' என்றும் சரியில்ல என்பதற்கு 'மொக்கை' என்றும் சாதரணமாக அனைவரும் சொல்லப் பழகிவிட்டனர். நம் பண்பாடு, கலாச்சாரத்தின் இனிய சொற்களை இழந்து வருவது, தமிழ்ச் சமூகத்தின் முக்கிய பிரச்சனை...
வெற்றிப் பூரிப்பில் சக்தி

வெற்றிப் பூரிப்பில் சக்தி

சினிமா, திரைத் துளி
சின்னத்தம்பி, ரிக்ஷா மாமா, செந்தமிழ் பாட்டு உள்ளிட்ட படங்களில் குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, பின்னர் தனது தந்தை பி.வாசு இயக்கத்தில் ‘தொட்டால் பூ மலரும்’ படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமாகி அனைவரின் பாராட்டையும் பெற்றவர் சக்தி வாசு. தனது ஜனரஞ்சகமான நடிப்பாலும், நடனம் சண்டைபயிற்சி என அனைத்து துறைகளிலும் தனித்துவமாக விளங்கியதாலும் சக்தி வாசு தனக்கென்று மக்களின் மனதில் இடத்தை தக்கவைத்து கொண்டார். சமீபத்தில் பி.வாசு இயக்கத்தில் சிவராஜ்குமாருடன் இவர் இணைந்து நடித்த சிவலிங்கா திரைப்படம் பல திரையரங்குகளில் 100 நாட்களைத் தாண்டி வெற்றிகரமாக ஓடுகின்றது. தமிழை அடுத்து கன்னடத்திலும் தனது தனித் திறமையால் ஒரு கதாநாயகனாக உருவானதை நினைத்து சந்தோஷப் பூரிப்பில் இருக்கிறார் சக்தி வாசு. சிவலிங்காவின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தை விரைவில் தமிழில் அனைத்து ரசிகர்களும்...
தி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி விமர்சனம்

தி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
‘தி ஆங்க்ரி பேர்ட்ஸ்’ என்ற வீடியோ கேமை, சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் திரைப்படமாகத் தயாரித்துள்ளது. பறக்க இயலாத பறவைகளுக்கு, பச்சை நிறப் பன்றிகள் மேல் அப்படியென்ன கோபம்? ஏன் வெஞ்சினம் கொண்டு பன்றிகளைத் தாக்குகிறார்கள் என்பதே படத்தின் கதை. ரெட் (Red - Hot head) எனும் சிவப்பு நிறப் பறவைக்கு பெரிய புருவங்கள்; நண்பர்களும் கம்மி. ஊருக்கு ஒதுக்குபுறமாக வீடு கட்டி வாழ்கிறது. கோபம் அதிகமாக வருகிறதென, கோபத்தைக் குறைக்கும் வகுப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கே ரெட்-க்கு இரண்டு நண்பர்கள் கிடைக்கிறார்கள். ஒன்று மஞ்சள் நிற சக் (Chuck – Speed Demon); மற்றொன்று பாம் (Bomb – Short Fuse). சக்-கிடம் அபிரிதமான வேகம் இயல்பிலேயே இருக்கும். எள் என்றால் எண்ணெயாய் இருத்தல் என்பது என்னவென்று அறிய நீங்கள் கண்டிப்பாக இப்படத்தைப் பார்க்கணும். பாம்-க்கு கோபம் வந்தால் அவ்விடத்தைத் தீக்கனல்களால் தெறிக்க விட்டுவிட...
இது நம்ம ஆளு விமர்சனம்

இது நம்ம ஆளு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிவாவிற்கு காதல் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால், அவனால் ‘தன்னுடைய ஆள்’ எனக் காதலிக்க ஒருவரையும் தீர்மானம் செய்து கொள்ள முடியவில்லை. அவரது காதலின் ஸ்டார்ட்டிங் நல்லாயிருந்தாலும் ஃபினிஷிங்கில் சிக்கலாகிக் கொண்டேயிருக்கிறது. சிவா தன்னுடைய ஆளைக் கண்டடைந்தானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை. ‘எனக்கு லவ் பண்றதுன்னா ரொம்ப பிடிக்கும்’ என்ற ஒற்றைப் பரிமாணக் கதைக் கருவை எடுத்துக் கொண்டு பேசிப் பேசியே மாய்கின்றனர் கதாபாத்திரங்கள். சூரி: அந்தப் பொண்ண பார்த்ததுமே உனக்குப் புடிச்சிப் போனதுக்கு என்ன காரணம் தெரியுமா? சிம்பு: என்ன? சூரி: ஒன்னு உன்னோட பருவம். இன்னொன்னு அந்த பொண்ணோட புருவம். நயன்தாராவுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ஒரே மாதிரியான புருவங்கள் என்பதால் நயன்தாராவைப் பார்த்ததுமே சிலம்பரசனுக்குப் பிடித்துப் போய் விடுகிறதாம். அப்படின்னு சூரி சொல்றார். இப்படி இலக்கற்ற கதைப் போக்கினாலும், கடியான வசனங்...
உறியடி விமர்சனம்

உறியடி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கண்கள் கட்டப்பட்ட நிலையில், கம்பைச் சுழற்றி ஊசலாடும் பானையை குறி வைக்க வேண்டிய விளையாட்டின் பெயர் உறியடி. அப்படி மறைந்திருந்து அரசியல் செய்யும் ஆட்களை நாயகர்கள் குறி வைக்கிறார்கள் என்ற குறியீடுதான் படத்தின் தலைப்பு. மனதை உலுக்கும் ரத்தமும் சதையுமுமான கதை. சமூகத்தின் மீது அச்சத்தையும் நம்பிக்கையின்மையும், அதீதமான பயத்தையும் ஏற்படுத்துகிறது. சாதீய நஞ்சு ஊறிப் போன மனங்களையும், அம்மனங்களை முதலீடு செய்ய நினைக்கும் முதலாளிகளும், அவர்கள் தம் குயுக்திகளையும் பற்றிப் படம் பேசுகிறது. அத்தனையையும், படிப்பதை விட சந்தோஷமாக இருப்பது முக்கியமென நினைக்கும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களைச் சுற்றி நடப்பதே படத்தின் சிறப்பு. மிகுந்த விறுவிறுப்புடன் படம் பயணித்து சட்டென இடைவேளை வந்துவிடும் பிரமையை ஏற்படுத்தி விடுகிறது. அதற்கு முக்கிய காரணம், இடைவேளையில் வரும் சண்டைக்காட்சியே! மயிர்கூச்செறிய வைக்கும் காட்சி அ...
ஜெயகாந்தன்

ஜெயகாந்தன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை ஜெயகாந்தன். 1950 - 60 கால கட்டத்தில் தமிழில் தோன்றிய இரண்டு மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர்.இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு ஜெயகாந்தன் பற்றிய அறிமுகம் அனேகமாகத் தேவைப்படாது என்றுதான் தோன்றுகிறது.  பாரதியாரையும் புதுமைப்பித்தனையும் ஆதர்சமாகக் கொண்டு ஐம்பதுகளில் ஆரம்பத்திலிருந்து பல எழுத்தாளர்கள் தோன்றினார்கள். ஜெயகாந்தனும் அப்படித்தான்.ஒரு கால கட்டத்தில் ஜெய காந்தனை ஆதர்சமாகக் கொண்டு எழுதத் தலைப் பட்டவர்களும் உண்டு. ஜெய காந்தனின் இயற்பெயர் டி.முருகேசன். தண்டபாணிப் பிள்ளை முருகேசன்.1934 ல் கடலூரை அடுத்த மஞ்சக் குப்பம் என்கிற ஊரில் பிறந்தவர். படிப்பில் அதிக நாட்டமில்லாமல் சிறு வயதிலேயே சென்னை வந்து சேர்ந்தார்.சென்னையில் அடித்தட்டு மக்களிடையே வாழவும்,அவர்களுடைய வாழ்க்கையைத் தானும் அனுபவிக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது...