Shadow

சினிமா

ஜம்புலிங்கம் 3டி விமர்சனம்

ஜம்புலிங்கம் 3டி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஜப்பானில் கடத்தப்படும் பேபி ஹம்சியைத் தமிழக இளைஞனான ஜம்புலிங்கம் எப்படி மீட்டு அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கிறான் என்பதே படத்தின் கதை. கதை ஜப்பானில் நிகழ்வதால், ரஜினிக்கு ஜப்பானில் இருக்கும் புகழைப் படத்தில் காட்டியுள்ளனர். அதை இன்னும் சுவாரசியமாக்கியிருக்கலாம். சிட்டி 'தி ரோபாட்'டாக லொள்ளு சபா ஜீவா வருகிறார். சகுனம் எனும் பாத்திரத்தில் ஈரோடு மகேஷ் நடித்திருக்கிறார். டான் டேவிட் சகுனத்தைத் தன்னுடன் கை விளங்கால் பிணைத்துக் கொண்டு குளியலறை, படுக்கையறை என இழுத்துக் கொண்டு போகிறார். கலை ஆர்வலர் டான் டேவிடாக ஒகிடா எனும் ஜப்பானியர் நடித்துள்ளார். ஐரீன் எனும் பாத்திரத்தில் அஞ்சனா கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். ஜம்புவால் கவரப்பட்டு, அவனைக் காதலிக்கும் பாரம்பரிய பாத்திரத்தில் வருகிறார். பரதநாட்டியக் கலைஞராகவும், ஹம்சிகாவின் அம்மாவாகவும் நடித்துள்ளார் சுகன்யா. ஓர் இரவு, அம்புலி, ஆ ஆகிய படங்களைத் ...
உன்னோடு கா விமர்சனம்

உன்னோடு கா விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐந்து தலைமுறைக்கு முன், இரண்டு குடும்பங்களுக்குள் மூண்ட பகை, சிவலிங்கபுரம் எனும் ஊரையே வடக்கு, தெற்கு என இரண்டு ஊராகப் பிளவுபடுத்தி விடுகிறது. சிவலிங்கபுரம் மீண்டும் எப்படி ஒன்றிணைகிறது என்பதுதான் படத்தின் கதை. நகைச்சுவைப் படத்தின் பலம் அதன் கதாபாத்திரங்களே! இப்படத்தின் கதாபாத்திரத் தேர்வுகள் கச்சிதமாகக் கதையோடு பொருந்துவதோடு நகைச்சுவௌக்கும் உத்திரவாதமளிக்கிறது. தன் கதையை, இயக்குநர் ஆர்.கே.-விடம் தந்து படத்தைத் தயாரித்துமுள்ளார் அபிராமி ராமனாதன். ஆர்.கே.வின் திரைக்கதையும் வசனங்களும் நகைச்சுவைக்கு உத்திரவாதமளிக்கிறது. தேசத்தின் அடையாளமாகவும், சிலை கடத்தல்காரர் காசியாக வரும் மன்சூர் அலிகானும், ஆள் கடத்தல்காரர் 'யோகா மாஸ்டர் மார்த்தாண்ட'மாக வரும் எம்.எஸ்.பாஸ்கரும் அதற்கு உதாரணங்கள். தங்களது மகனும் மகளும் ஊரை விட்டு ஓடி விட்டார்கள் என அறிந்ததும் அதைக் கொண்டாடுகின்றனர் ஐந்து தலைமுறை பகையாளிகள...
100+ ஜப்பான் கலைஞர்கள் இன் ஜம்பு 3டி

100+ ஜப்பான் கலைஞர்கள் இன் ஜம்பு 3டி

சினிமா, திரைத் துளி
அம்புலி 3டி, ஆ ஆகிய படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஹரி - ஹரீஷ் இரட்டை இயக்குநர்கள் இயக்கும் 'ஜம்புலிங்கம் 3டி' படத்தில் 100க்கும் மேற்பட்ட ஜப்பானிய நடிகர்களும் நடனக் கலைஞர்களும் படத்தில் நடித்துள்ளனர். “தயாரிப்பாளர் திரு. ஹரி ஜப்பான் கலாச்சார மையத்தின் தலைவராக இருப்பதாலோ என்னவோ இந்தப் படத்தில் பங்கேற்க, ஜப்பானியக் கலைஞர்களின் ஆர்வம் மிக அதிகமாக இருந்தது. ஆர்வம் ஒரு பக்கம் இருப்பினும், அவர்களுடன் எங்களது சம்பாஷனைகள் பெரும்பாலும் ஊமை மொழியில் தான் இருந்தது. அதை படமாக்கி இருந்தாலே, அதுவே ஒரு பெரிய நகைச்சுவைப் படமாக இருந்திருக்கும். இந்தப் படத்தின் கதை ஓர் இந்திய கிராமத்தில் துவங்கி ஜப்பானில் சென்று முடிகிறது. நமது ஊரில் குழந்தைகளுகான படங்களே வெளி வருவதில்லை என்ற குறையை ஜம்புலிங்கம் 3டி தீர்க்கும். இந்தப் படத்தை திரையிடத் திரையரங்கு உரிமையாளர்கள் இடையே இருக்கும் ஆர்வம், இந்தக் கோடைக்...
கோபமும் ஆதங்கமுமாக கோ-2 பாபி சிம்ஹா

கோபமும் ஆதங்கமுமாக கோ-2 பாபி சிம்ஹா

சினிமா, திரைத் துளி
ஆர்.எஸ்.இன்ஃபோடெய்ன்மென்ட் தயாரிக்கும் கோ – 2 படத்தின் பாடல்கள் ரசிகர்களின் மனதைக் கவர்ந்துள்ளது. பாபி சிம்ஹாவிற்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார். இயக்குநர் விஷ்ணுவர்தனின் ‘பில்லா’, இயக்குநர் சக்ரி டோலேட்டியுடன் ‘பில்லா’ 2 முதலிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றியுள்ள சரத் ,இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 'இந்தப் படத்தில் நான் ஒரு துடிப்புள்ள, உணர்ச்சிகரமான பத்திரிகையாளன் வேடத்தில் நடிக்கிறேன். அந்த மாநிலத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஒருவருடன் என் சுயநலம் அப்பாற்பட்ட ஒரு விஷயத்தில் நான் போராடும் காட்சிகள் மிக அழகாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. தப்பென்று பட்டால் யாரென்று பாராமல் போராடும் இந்தக் கதாபாத்திரம் ஏறக்குறைய என்னுடைய குணத்தை ஒட்டியிருப்பது எனக்குப் பெருமைதான். 'கோ 2' படத்தில் என்னுடைய இந்தக் கதாபாத்திரம் இன்றைய இளைஞர்களின் கோபத்தையும் ஆதங்கத்தையும் தெள்ளத் தெளிவாக...
ஜம்புலிங்கம் 3D – படக்குழுவினர்

ஜம்புலிங்கம் 3D – படக்குழுவினர்

சினிமா
நடிகர்கள்:>> கோகுல் நாத் >> அஞ்சனா >> சுகன்யா >> பேபி ஹம்சிகா >> யோக் ஜபீ >> ஈரோடு மகேஷ் >> கும்கி அஸ்வின்பணிக்குழு:>> தயாரிப்பு - G.ஹரி & K.ஒகிடா >> இயக்கம் - ஹரி & ஹரீஷ் >> ஒளிப்பதிவு & 3D ஸ்டீரியோகிராஃபி - G.சதிஷ் >> இசை (பாடல்கள்) - ஸ்ரீவித்யா >> பின்னணி இசை - K.வெங்கட் பிரபு ஷங்கர் >> கலை - ரெமியன்...
ஃபேண்டசியா விழாவில் மிருதன்

ஃபேண்டசியா விழாவில் மிருதன்

சினிமா, திரைத் துளி
இன, மொழி, தேசிய பேதமற்று உலக மக்கள் அனைவரையும் கவரும் கண்ணியாக இருக்கும் விஷயங்களில் பிரதானமானது சினிமாவே! சமீபமாக தமிழ் சினிமாக்களும் உலகளாவிய அளவில் கவனம் பெறுவது குறிப்பிடத்தக்கது. அப்படிக் கவனம் பெறும் பட்டியலில், ஜெயம் ரவி நடிப்பில் வெளியான மிருதன் திரைப்படமும் சேர்ந்துள்ளது. கனடாவில் நடைபெறும், ‘ஃபேண்டசியா சர்வதேசத் திரைப்படா விழா 2016’ -இற்கு மிருதன் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் முதல் ஜோம்பி படமான மிருதன், அதன் பிரம்மாண்டட்தாலும் நேர்த்தியான திரைக்கதையாலும் இப்பொழுது உலகளாவிய ரசிகர்களையும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. திரையில் மட்டுமன்று நிஜ வாழ்விலும் சிறந்த மகனான ஜெயம் ரவி தன்னுடைய மகிழ்ச்சியை, அன்னையர் தினத்தன்று அனைத்து அம்மாக்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், இத்தகைய அங்கீகாரங்கள் தன்னை மேலும் நன்றாக உழைக்கணுமென உந்துகிறது எனச் சொன்னார் ஜ...
ஜம்புலிங்கம் 3D – குழந்தைகள் சினிமா

ஜம்புலிங்கம் 3D – குழந்தைகள் சினிமா

சினிமா, திரைச் செய்தி
“குழந்தைகளுக்கான சினிமா என்பது தமிழில் அருகிவிட்டது அல்லது இல்லவே இல்லைன்னு சொல்லலாம். அந்த வகையில், ஜம்புலிங்கம் 3D எனும் படத்தை நான் ‘தமிழ் ஹாரி பாட்டார்’ எனச் சொல்வேன். மிகச் சுவாரசியமான படம்” எனப் புகழ்ந்தார் Y.G.மகேந்திரன். இந்தத் திரைப்படம் வெளிவருவதற்கு, எஸ்.வி.சேகர் உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜப்பான் வாழ் தமிழரான ஹரி இப்படத்தைத் தயாரித்துள்ளார். நாடகம், இசை என தமிழ்க்கலை சார்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் பொறுப்பேற்பெடுத்து ஜப்பானில் அரங்கேற உதவி செய்து வருபவர். அதனால்தான் நாடகக் கலைஞர்களான க்ரேசி மோகன், எஸ்.வி.சேகர், Y.G.மகேந்திரன் போன்றோர்களும், இசைக் கலைஞர்களான கங்கை அமரன் முதலியவர்களும் ஹரியின் நட்பிற்காகவும் நற்குணத்துக்காகவும் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்து சிறப்பித்தனர். விழாவிற்கு வந்திருந்த ஜப்பானியர் ஒருவரின் அழகு தமிழ் கொஞ்சும் உரை மனதிற்கும் காதிற்கும் இனிமையா...
நீயும் பொம்மை நானும் பொம்மை

நீயும் பொம்மை நானும் பொம்மை

சினிமா, திரைத் துளி
போகிற போக்கில் அடித்தட்டு மனிதர்களின் மன வேதனையையும் குமுறல்களையும் மட்டுமல்ல; மனித வாழ்வையும் மாபெரும் தத்துவங்களையும் சொல்லிவிடக் கூடிய தன்மை கானா பாடல்களுக்குண்டு. வாழும்போது வைக்காதடா சேத்து - ஏதும் அனுவிக்காம போய்டுவேடா செத்து! மரண கானாவின் சில வரிகள் இவை. வேறெந்த இசைவடிவத்திலும் சாத்தியமில்லாத ஒன்று கானா பாடலில்தான் அமைந்திருக்கிறது. இசைக் கருவிகள் என்று எதுவுமில்லாமல் மேஜை, பஸ்ஸின் ஏறுமிடம், பஸ்ஸின் உச்சி, டிஃபன் பாக்ஸ், கரவோசை, ஷூ சத்தம் என எதுவேண்டுமானாலும் செட்டாகுமாறு இருப்பதே கானா பாடல்களின் தனிச் சிறப்பு. அந்த கானா எனப்படும் உலகில் அரசர்களாகத் திகழும் கானா பாலாவும் மரண கானா விஜியும் முதல் முறையாக இணைந்து, விகோசியா மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிக்கும் 'பாண்டியோட கலாட்டா தாங்கல' திரைப்படத்தில் காதல் பற்றிப் பாடல் எழுதிப் பாடி நடித்துள்ளனர். சுகுமாரின் இசையில் உருவாகியுள்ள இவர...
ஐ.டி. துறை பற்றிய இயக்குநர் ராமின் படம்

ஐ.டி. துறை பற்றிய இயக்குநர் ராமின் படம்

சினிமா, திரைத் துளி
கற்றது தமிழ், தங்க மீன்கள் என்று தரமான படங்கள் கொடுத்து தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அரங்கிலும் தமிழ்ப் படங்களுக்கு மிகப் பெரிய அந்தஸ்தை வாங்கித் தந்த இயக்குநர் ராம், பல்வேறு வெற்றிப் படங்களைத் தயாரித்து விநியோகித்து தரமான படங்கள் தயாரிக்கும் நிறுவனம் என்று தன் பட நிறுவனமான ஜே.எஸ்.கே பிலிம் corporation நிறுவனத்துக்கு பெயர் ஈட்டித் தந்த ஜே .சதீஷ் குமாருடன் இணைந்து தமிழ் ரசிகர்களுக்கு அடுத்துக் கொடுக்கவிருக்கும் படைப்பு 'தரமணி'. தரமான வித்தியாசமான கதைக் களம், நேர்த்தியான திரைக்கதை, தெளிவான படப்பிடிப்பு என்று தனக்கென்று தனிப் பாணியைக் கையாளும் ராம் இந்தப் படத்திலும் அவரது ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்றுகிறார். தரமணியின் ஆத்மா- The soul of Taramani என்று துவங்கும் ஒரு சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடம் ஏற்கெனவே மிகப் பிரபலமானது. யுவன் ஷங்கர் ராஜா, இயக்குநர் ராம், ஜ...
கோவக்காரப் பறவைகள்

கோவக்காரப் பறவைகள்

அயல் சினிமா, சினிமா, திரைத் துளி
சோனி பிக்சர்ஸின், ‘The Angry Birds Movie’ ஆங்கிலத்திலும் தமிழிலும் (தமிழ்த் தலைப்பும் அதுவே) மே 27 ஆம் தேதி வெளிவர உள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னோடியாக, 3 D அனிமேஷன் கார்டூன் படமான இதில் இடம் பெற்றுள்ள கதாபாத்திரங்கள் தத்தம் உடை அலங்காரங்களோடு, சமீபத்தில், சென்னை நகரில் உள்ள முக்கிய மால்கள் (Malls) மற்றும் பன்னடக்கு அரங்குகளில் உலா சென்று வலம் வந்தார்கள்! கோடை கால விடுமுறை தொடங்கும் நேரமாகையால், அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் படை சூழ வந்து, தங்களுக்கு மிகவும் பிடித்த ஆங்ரி பேர்ட்ஸ் கதாபாத்திரங்களுடன் கொஞ்சி விளையாடுவது, புகைப்படம் எடுத்துக் கொள்வதென பல விதமான செயல்பாட்டில் எடுபட்டார்கள்! Red, Chuck & Bomb ஆகிய மூன்று பறவை கதாபாத்திரங்களே படத்தில் பிரதான வேடத்தில் தோன்றுகின்றன. அமைதியாக ஒரே குடும்பமாக இப்பறவை இனம் ஒரு தீவில் வாழ்ந்து வர, எதிர்பாராத விதமாக ஒரு பன்றிக் கூட்டம்...
மயில்சாமி பேயின் கலாட்டா.!

மயில்சாமி பேயின் கலாட்டா.!

சினிமா, திரைத் துளி
‘விகோசியா மீடியா நிறுவன’த்தின் மூலம் மணிகண்டன், நாகேஸ்வரன் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் பாண்டியோட கலாட்டா தாங்கல. ‘நிதின் சத்யா’ நாயகனாக நடிக்கும் இப்படத்தில், ரக்க்ஷா ராஜ் ஹீரோயினாக நடித்திருக்கிறார். மேலும், சிங்கம் புலி, யோகிபாபு, மயில்சாமி, இமான் அண்ணாச்சி, மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு – சுரேஷ், இசை – சுகுமார், இயக்கம் – T.குணசேகரன். படம் பற்றிப் பேசிய இயக்குநர் டி.குணசேகரன், “புறா கூண்டு’ போல் தோற்றமளிக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் மூன்று நண்பர்கள் வாடகைக்குத் தங்கியுள்ளனர். சோத்துக்கே பஞ்சப்பாடு பாடும் அவர்களால் வாடகை பணத்தைச் சரியாகக் கொடுக்க முடியாமல் தவிக்கிறார்கள். இதனால் பல முறை, பல வழிகளில் இவர்களிடமிருந்து பணத்தை வசூலிக்க முயலும் குடியிருப்பின் உரிமையாளருக்குத் தோல்விதான் கிடைக்கிறது. ‘இனி என் வழி இவர்களுக்கு சரிப்படாது; நமது காவலாளிய...
களம் விமர்சனம்

களம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லாஜிக்கல் த்ரில்லர் என எதிர்பார்ப்பைத் தூண்டியது இப்படத்தின் டீசரும் ட்ரெயிலரும். ஒரு பாழடைந்த வீட்டை வாங்கிப் புணரமைத்து உபயோக்கின்றனர். அவ்வீட்டில் அமானுஷ்யமான நிகழ்வுகள் நடக்கின்றன. அமானுஷ்யத்தின் பின்னாலுள்ள லாஜிக் என்னவென்பதே படத்தின் கதை. ஜீவாவின் சி.ஜி. படத்திற்குப் பலம். செந்தில் ராகவனின் கலை இயக்கத்தில், படத்தில் வரும் வீடு பல பரிமாணங்களைப் பெறுகிறது. படத்தின் மிக முக்கியமான பாத்திரமாக வருகிறது வீடு. படத்தின் களமான இவ்வீடே நாயகனுமாகும். ‘ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கதையுண்டு’ என்று படத்தின் டீசரில் வரும் வரி படத்தின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டியது. முகேஷின் ஒளிப்பதிவும், பிரபாகரின் படத்தொகுப்பும் அதற்கொரு முக்கிய காரணம். அந்த வீட்டின் கதையாக வரும் உப கதையும் அற்புதமாகவே இருந்தது. குறிப்பாக, அனிமேஷனில் அதைப் பிரமாதப்படுத்தியிருந்தார்கள். கணினி வரையியல் (CG) செய்துள்ள ஜீவாவின் உழைப்...
மனிதன் விமர்சனம்

மனிதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சாமானியர்களுக்கு சட்டத்துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தும் படம். குடிப்போதையில் காரோட்டி, நடைப்பாதையில் படுத்திருப்பவர்கள் மீது காரேற்றிக் கொல்லும் பணக்கார வீட்டுப் பையனின் வழக்கை மையமாகக் கொண்டு நகர்கிறது கதையின் களம். பொள்ளாச்சியில் கிடைக்கும் ஒன்றிரண்டு வழக்குகளிலும் சொதப்பும் வக்கீல் சக்தியாய் அறிமுகமாகிறார் உதயநிதி. தான் ஓட்டப்படுகிறோம் என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல், அவர்களோடு இணைந்து சிரிக்கும் அப்பாவி வேடத்திற்குப் பொருந்துகிறார். பணத்துக்கு விலை போய், பின் காதலியின் உதாசீனத்தால் 'ஏழைப் பங்காளன்' ஆகிறார். வெள்ளைத் தோலினரைக் காதலிப்பதே தம் பிறவி நோக்கமென்ற கதாபாத்திரங்களில் இருந்து முற்றிலும் வெளிவந்து கெத்து காட்டுகிறார் உதயநிதி. அவரது கேரியரில் இது மறக்க முடியாததொரு படமாக அமையும். மதியின் ஒளிப்பதிவில் ஹன்சிகாவை விட உதயநிதி கூடுதல் பொலிவோடு தெரிகிறார். அதே போல், நிருபர் ஜெனிஃபராக ...
சர்வதேச நாய்க் கடத்தல்

சர்வதேச நாய்க் கடத்தல்

சினிமா, திரைத் துளி
ரீச் மீடியா சொல்யூஷன் என்னும் புதிய பட நிறுவனம், சஹானா ஸ்டுடியோஸுடன் இணைந்து, “ஜூலியும் நாலு பேரும்” என்ற படத்தைத் தயாரிக்கிறது. இளம் இயக்குநரான சதீஷ்.R.V-க்கு இது முதற்படம். இப்படத்தைக்குறித்து இயக்குநர் சதீஷ்.R.V கூறுகையில், “இப்படம் சர்வதேச அளவில் நடக்கும் நாய்க் கடத்தலைப் பற்றிய படம். அது மட்டுமின்றி முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட காமெடிப் படம்”என்கிறார். தமிழ் சினிமா ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது இப்படத்தின் “ஃபர்ஸ்ட் லுக்”. இப்படத்தின் மூலம், பேய் சீஸனைப் போல் நாய் சீஸனைத் துவங்கி வைத்துவிடுவார் போல் தெரிகிறது. படத்தைப் பற்றி இயக்குநர் சதீஷ் கூறுகையில், “விஜய் டி.வி. புகழ் அமுதவானன் மற்றும் ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜம்முவைச் சேர்ந்த ரீனா என்ற பெண் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். இப்படத்தின் ஹீரோ அமெரிக்காவிலிருந்து கொ...