
அரும்புகளுக்கு பூக்களின் பெயர்களைச் சூட்டிய கலைஞர்
AVA புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக ஏ.வி.அனூப் தயாரிக்கும் படம் “என்ன சத்தம் இந்த நேரம்”. இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக அல்லயன்ஸ் பிக்சர்ஸ் புரொடக்சன்ஸின் கிருஷ்ண பலராம ராஜா பணியாற்றியுள்ளார்.
அறிமுக இயக்குநர் குரு ரமேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். பிரபல இயகுநர் ராஜா, மானு நிதின் சத்யா, மாளவிகா மற்றும் பலர் நடித்து விரைவில் வெளிவரவிருக்கிறது.
இப்படத்தின் சிறப்பம்சம் யாதெனில், ஒரு பிரசவத்தில் பிறந்த நான்கு பெண் குழந்தைகளான அதிதி, அக்ரிதி, ஆப்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
திராவிட முன்னேற்ற கழக தலைவரான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்திற்கு நான்கு குழந்தைகளையும் அழைத்து தனது வாழ்த்தினைத் தெரிவித்தார்.
மேலும், குழந்தைகளின் பெயர்களைக் கேட்டறிந்த கலைஞர் அவர்களுக்கு அழகு தமிழில் பெயர் சூட்ட விரும்பி முறைப்படி அதிதிக்கு மல்லி என்றும், அக்ரிதிக்கு...















