
வில்லியாகும் ஷகிலா
பொய், ஊழல், பவர் (அதிகாரம்) தான் மக்களை ஆட்டுவிக்கும் சங்கதிகள்.
நம் நாட்டில் நடந்த, நடந்து கொண்டிருக்கும் ஓர் உண்மைச் சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டு கதையமைத்துள்ளார் இயக்குநர். தான் முற்றிலும் அழித்துக் காட்டுகிறேன் என்று கட்டை விரலை உயர்த்தி சவால் விடும் அரசியல்வாதி பதவிக்கு வந்தபின், தனது வார்த்தைகளை மறந்துவிட்டு அவர்களின் ஆடம்பர வாழ்க்கைக்குச் செய்யும் 'ஊழல்'தான் உண்மை படத்தின் கதை. ஊழலால் பாமர மக்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதை விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக எடுத்துள்ளனர்.
கேமிராக்கு முன் அசிஸ்டெண்ட் கமிஷ்ணர், கமிஷ்ணரின் தங்கையாக ஒரு திருநங்கை வேடன், மனநிலை பாதிக்கப்பட்டவராக மூன்று வேடமேற்று நடித்துள்ளார் P.ரவிக்குமார். கேமிராக்கு பின் கதாசிரியர், இயக்குநர், தயாரிப்பாளர் என மூன்று வேலைகளையும் அவரே செய்துள்ளார். சென்னைவாசியான ரவிக்குமார் சினிமா கனவுகளில் மும்பைக்குச் ச...
















