Shadow

சினிமா

அரும்புகளுக்கு பூக்களின் பெயர்களைச் சூட்டிய கலைஞர்

அரும்புகளுக்கு பூக்களின் பெயர்களைச் சூட்டிய கலைஞர்

சினிமா, திரைத் துளி
AVA புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக ஏ.வி.அனூப் தயாரிக்கும் படம் “என்ன சத்தம் இந்த நேரம்”. இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக அல்லயன்ஸ் பிக்சர்ஸ் புரொடக்சன்ஸின் கிருஷ்ண பலராம ராஜா பணியாற்றியுள்ளார். அறிமுக இயக்குநர் குரு ரமேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். பிரபல இயகுநர் ராஜா, மானு நிதின் சத்யா, மாளவிகா மற்றும் பலர் நடித்து விரைவில் வெளிவரவிருக்கிறது. இப்படத்தின் சிறப்பம்சம் யாதெனில், ஒரு பிரசவத்தில் பிறந்த நான்கு பெண் குழந்தைகளான அதிதி, அக்ரிதி, ஆப்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திராவிட முன்னேற்ற கழக தலைவரான கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்திற்கு நான்கு குழந்தைகளையும் அழைத்து தனது வாழ்த்தினைத் தெரிவித்தார். மேலும், குழந்தைகளின் பெயர்களைக் கேட்டறிந்த கலைஞர் அவர்களுக்கு அழகு தமிழில் பெயர் சூட்ட விரும்பி முறைப்படி அதிதிக்கு மல்லி என்றும், அக்ரிதிக்கு...
கோச்சடையான் விமர்சனம்

கோச்சடையான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இந்தியாவின் முதல் முழு நீள மோஷன்-கேப்ச்சர் படம், அதற்கே உரிய மழலை நடையோடு திரையில் அழகாய்த் தத்தித் தாவிப் பிரேவசித்துள்ளது. ராணா எனும் கோச்சடையான் ரணதீரன், தனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதோடு அவரது மரணத்திற்கும் பழிவாங்குதுதான் படத்தின் கதை. கதையை எழுதியவர் கே.எஸ்.ரவிக்குமார். அதுவும் ராஜா காலத்துக் கதை என்பதால், அவரது வழக்கமான பாணியில் அப்பா ரஜினி, அண்ணன் ரஜினி, தம்பி ரஜினி என ரஜினிகளை வரிசையாகக் கதையில் இறக்கியுள்ளார். திருப்பங்கள் பல நிறைந்த மிகச் சுவாரசியமான திரைக்கதை. ஆனால் அதை உள் வாங்கிக் கொள்ள முடியாமல், புது விதமான காட்சி அனுபவம் நம்மை ஆக்கிரமித்துக் கொள்கிறது. ரஜினி, நாகேஷ், ஜாக்கி ஷெராஃப், நாசர், ஷோபனா, ஆதி தவிர வேறு எவரையும் சட்டென்று அடையாளம் காண முடியவில்லை. படத்தில் வரும் வீரர்கள், ஊர் மக்கள் என இதர கதாபாத்திரங்கள் அனைவரின் முகமும் மெழுகு பூசினாற்போலவே உள்ளது. ராணா...
“சச்சின் டெண்டுல்கரை நான் வியக்கேன்”

“சச்சின் டெண்டுல்கரை நான் வியக்கேன்”

சினிமா, திரைத் துளி
‘எக்ஸ்-மேன் - கடந்த காலத்தின் எதிர்காலம்’ திரைப்படத்தின் விளம்பரத் தூதராக உள்ளார் ஹுக் ஜாக்மன். அவர் படத்தின் பிரதான பாத்திரங்களுக்கு ஏற்படும் நெருக்கடியை, கிரிக்கெட் விளையாட்டுடன் ஒப்பிட்டுப் பேசினார். “கிரிக்கெட் ஒரு மைண்ட் கேம். மன உறுதியை சோதனை செய்யும் ஒரு விளையாட்டு. சச்சின் டெண்டுல்கர் அதில் கரை கண்ட மிகத் திறமையான வீரர். அவரது மனவுறுதியும், அதை அவர் மிகச் சுலபமாக களத்தில் பயன்படுத்துவதையும் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன். ஆக சச்சினைப் போன்றே மனோபலம் கொண்ட ப்ரொஃபசர் சேவியர், எனக்கு கேப்டனாக இருப்பதையே நான் விரும்புகிறேன். ஆனா வோல்வரின் மிக மோசமான கிரிக்கெட் வீரர். கொஞ்சம் கூட பொறுமையே இல்லாதவர். ஆடு களத்தில் என்ன, எப்போது, எப்படி நடக்கும் என்பதை கிரகிப்பது சுலபமானது அல்ல. அதில் நிரந்தரமாக ஜெயிப்பது என்பது மன உறுதி மிக்க சச்சின் போன்றவர்களால் தான் முடியும்” என்றார் வோல்வரினாக நடிக்கு...
சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF)

சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF)

சினிமா, திரைத் துளி
'சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா (CWIFF)' முதல் முறையாக இவ்வருடம் மே 20 ஆம் தேதி முதல் மே 25 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. சென்னை பெண்கள் சர்வதேச திரைப்பட விழா, சினிமா துறையில் பெண்களின் முன்னேற்றத்திற்காக நல்ல ஒரு மேடையையும், சிறந்த வாய்ப்புகளையும் உரிய திறமை உள்ளவர்களுக்கு வழங்கி அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வரும். 20-5-2014 அன்று மாலை ஆறு மணியளவில் வாணி மகாலில் நடைபெற உள்ள தொடக்க விழாவுடன் CWIFF 2014 துவங்கும். இவ்விழாவிற்கு 177 திரைப்படங்கள் உலக அளவில் 26 நாடுகளில் இருந்து வந்து குவிந்தன. இவை அனைத்தும் RKV திரையரங்கம், வடபழனியில் மற்றும் PVR திரையரங்கம், அமிஞ்சிக்கரையிலும் 20 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை திரையிடப்படும் . மொத்தம் நான்கு பிரிவுகளில் திரைப்படங்கள் வகுக்கப்பட்டன. அவை,           1) குறும்படம் (short film )           2) விளம்பரப்படம் (ad film )           3) ஆ...
வெற்றிடத்தை நிரப்பும் திரைப்படம்

வெற்றிடத்தை நிரப்பும் திரைப்படம்

சினிமா, திரைச் செய்தி
நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற ‘ஆதாமிண்ட மகன் அபூ’ எனும் மலையாளப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரபி மொழியில் டப் செய்யப்படும் முதல் தென்னிந்தியப் படமென்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு. மேலும் டர்க்கீ (துருக்கி), ஈரான், மலேசியா நாட்டு மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது. 100 சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் ஸ்க்ரீன் செய்யப்பட்டுள்ளது. கோவா ஃப்லிம் ஃபெஸ்டிவலில் ‘சில்வர் பீகாக்’ விருதினைப் பெற்றுள்ளது. இப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது வாங்கிய மது அம்பட், மணிரத்னத்தின் அஞ்சலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மொழிமாற்றத்திற்கு உதவிய விஸ்வம் நம்பீசன், “இது ஹஜ் பயணம் பற்றிய கதை. ஹஜ் பயணம் எப்படிப் பண்ணணும் எனச் சொல்லியுள்ளார் இயக்குநர் சலீம் அகமது. இந்தப் படத்தை, நான் ஒரு மனிதனின் பயணமாகத்தான் பார்க்கிறேன். ஒரு உண்மையான ம...
மனதை உலுக்கும் காதல் கதை

மனதை உலுக்கும் காதல் கதை

சினிமா, திரைத் துளி
ஆர்யா, தன் ‘தி ஷோ பீப்பிள்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்த ”அமர காவியம்” படத்தினைத் தனது பிரத்தியேக நண்பர்கள் சிலருடன் பார்த்துள்ளார். கண்கள் கலங்க படம் பார்த்து முடித்த ஆர்யா, அவர் நடிக்கும் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்கு அவசரமாகக் கிளம்பிச் சென்று விட்டார். உணர்ச்சிகளை அடக்கத் தெரியாத ஆர்யா, 143 கேக்குகளை ஆர்டர் செய்து தனது யூனிட்டுக்கும் நண்பர்களுக்கும் அளிஹ்துள்ளார். 143 என்பது காதலின் குறியீடாக இருப்பதால், அதே எண்ணிக்கையில் கேக்குகள் வாங்கினேன் என பெரிய புன்னகையுடன் சொன்னார் ஆர்யா. “படத்தைப் பார்த்து நான் அசந்துட்டேன். படத்தின் இயக்குநர் ஜீவாசங்கர் என் நண்பர்; படத்தின் நாயகன் சத்யா என் தம்பி. இருவரும் உலகத்தரமான காத கதையை அளித்துள்ளனர். ஒரு நாயகனாக நான் நெகிழ்ந்துள்ளேன். ஆனா முதல் முறையாக ஒரு நல்ல திரைப்படத்தைத் தயாரித்ததற்காகப் பெருமைப்படுகிறேன். இந்தப் படத்தின் வரவேற்பினைப் பொறுத்...
“பயம் சிறுத்தையால்தான்” –‘யாமிருக்க பயமே’ மயில்சாமி

“பயம் சிறுத்தையால்தான்” –‘யாமிருக்க பயமே’ மயில்சாமி

சினிமா, திரைச் செய்தி
‘யாமிருக்க பயமேண்’ எதிர்பார்த்ததை விட வெற்றிகரமாக திரையரங்கில் ஓடி வருகிறது. எம்.ஜி.ஆர். படங்களைத் தவிர எந்தப் படத்தையும் பார்க்க விரும்பாத மயில்சாமியை, தினம் 5 நபர்களுக்குக் குறையாமல் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டி வருகின்றனராம். “எனக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது. அதனால் வருத்தப்படுறேன். ஹிந்தி பேசக் கூடத் தெரியாது. அதனால் வேதனைப்படுறேன். ஆங்கிலம் சுத்தமா வராது. அதனால் வெட்கப்படலை. ஏன் சொல்றேன் என்றால்.. தமிழ்நாடு தவிர வேற எங்கயும் ஷூட்டிங்குக்குப் போக மாட்டேன். பெரும்பாலும் தவிர்த்துடுவேன். ஆனா ‘யாமிருக்க பயமேன்’ படத்துக்கு நைனிட்டாலில் 3 நாள் ஷூட்டிங் எனச் சொன்னாங்க. டெல்லி ஏர்போர்ட்டில் இறங்கி அங்கிருந்து கார்ல போறேன் போயிட்டே இருக்கு. 10 மணி நேரத்துக்கு மேல ட்ராவல். எடுத்துட்டுப் போனதும் காலியாகிடுச்சு (இடதுக்கையால் பாட்டிலை சைகை காட்டுறார்). முன்பே இது மாதிரிதான் ஹைதராபாதில்...
ஃபாக்ஸின் எக்ஸ் – மேன்

ஃபாக்ஸின் எக்ஸ் – மேன்

சினிமா, திரைத் துளி
இதுவரை கண்டிராத தொழில்நுட்ப அதிசயங்களின் அடுத்த கட்டம் தான் X-Men days of the future past. சூப்பர் ஹீரோஸ் படங்களுக்கு என்று என்றுமே ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. காமிக்ஸ் வடிவத்திலும், தொடராகவும் எல்லோரையும் கவர்ந்த எக்ஸ் - மேன் குழந்தைகளை மட்டுமின்றி பெரியவர்களையும் கவரும் என்பதில் ஐயமே இல்லை. 3-டி படங்கள் பார்பதற்கு சரியான சாதனைகள் மட்டுமே அவசியம் இல்லை, அந்த காட்சி அமைப்புக்கு ஏற்ப பிரம்மாண்டமும் கதைக்களமும் அவசியம். அத்தகைய பிரம்மாண்டத்தைச் சாத்தியப்படுத்த, தொழில்நுட்பத்தின் உச்சத்தைப் படத்தில் உபயோகப்படுத்தியுள்ளனர் என்றால் மிகையாகாது. ‘திரைப்படங்களில் தொழில்நுட்பம்’ என்ற கண்ணோட்டத்தில் பார்த்தால் , X-Men days of the future past இதுவரை வந்த படங்களில் மிகச் சிறந்த படமாக இருக்கும் என திரையுலக வல்லுநர்கள் கணிக்கின்றனர்.ஹக் ஜேக்மேன் ஏழாவது முறையாக நீண்ட கொடிய நகங்களுடனும், பண்டைய கால...
மணிகொண்டா அரண்மனை

மணிகொண்டா அரண்மனை

சினிமா, திரைத் துளி
20 கோடி ரூபாய் பொருட்செலவில் “விஷன் ஐ மீடியாஸ்” நிறுவனம் சார்பில் D.தினேஷ் கார்த்திக், தயாரிக்கும் அரண்மனை படத்தை சுந்தர்.சி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டுவரும் இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றன. சந்தானம், ஹன்சிகா மோத்வாணி, ஆண்ட்ரியா, லட்சுமி ராய், வினய், சரவணன், கோவை சரளா, மனோபாலா, ‘காதல்’ தண்டபாணி, கோட்டா சீனிவாச ராவ், சித்ரா லட்சுமணன், நிதின் சத்யா என 21 நட்சத்திரப் பட்டாளங்களுடன் இயக்குநர் சுந்தர்.சியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்கியுள்ளார். 3 கோடி ரூபாய் செலவில், ஹைதராபாத்தில் உள்ள மணிகொண்டா எனும் இடத்தில் ஒரு அரண்மனையையே கலை இயக்குநர் குருராஜ் உருவாக்கியுள்ளார். மிகப் பிரம்மாண்டமான இந்த அரண்மனையை 400 ஊழியர்கள் 3 மாத காலம் இரவு பகலாக உழைத்து உருவாக்கியுள்ளனர். மூன்று கதாநாயகிகளும் நடிப்பிலும் பாடல் காட்சிகளி...
மனித உரிமை பேசும் ‘யான்’

மனித உரிமை பேசும் ‘யான்’

சினிமா, திரைச் செய்தி
R.S.Infotainment சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் “யான்” படம்தான் அந்நிறுவனத்தின் பெரிய பட்ஜெட் படம். படத்தின் முதல் பாடலை கவிஞர் வாலி அவர்கள் எழுதியுள்ளார். உடல் நலம் சரியில்லாமல் வீட்டை விட்டு வெளியில் வருவதைத் தவிர்த்து வந்த வாலியை, அவரது வீட்டுக்கே சென்று ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் வரிகளை வாங்கியுள்ளார். ஹே லம்பா லம்பா ஏன் வந்தாய் என் முன்பா போட்டாலே பார்வையில்.. அம்பா எனத் தொடங்கும் யூத்ஃபுல்லான பாடலை எழுதியுள்ளார் வாலி. படத்தின் ஸ்க்ரிப்ட்டை இயக்குநர் ரவி.கே.சந்திரன் முதலில் அபிஷேக் பச்சனிடம்தான் கொடுத்துப் படிக்கச் சொல்லியுள்ளார். எனினும் தனக்கு நன்றாகத் தெரிந்த தமிழ் மொழியில்தான், முதற்படத்தை எடுக்க வேண்டுமென பிடிவாதமாக இருந்துள்ளார் ரவி.கே.சந்திரன். ‘நீங்க இரண்டு வேலை பண்ணணும்னு நினைச்சீங்கன்னா.. உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது’ என கே.வி.ஆனந்த் தான் ரவி.கே.சந்திரனுக்கு யோசனை அளி...
ஏ.டி.எம்.மில் ‘ஆ’…வி

ஏ.டி.எம்.மில் ‘ஆ’…வி

சினிமா, திரைத் துளி
உலகத்தரத்துக்கு இணையாக தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகிறது தமிழ் சினிமா. அம்புலி 3D படம் மூலம் தமிழ்த் திரைப்பட உலகின் கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளர்கள் கே.டி.வி.ஆர். Creative Frames நிறுவனமும், இயக்குநர்கள் ஹரி-ஹரேஷ் இரட்டையரும் மீண்டும் இணைந்து வழங்கும் படம் இது. 'ஆ ' என்ற சத்தம் அலறலாக வெளிப்படும்போது பயத்தையும், பயங்கரத்தையும், வலியையும் உணர்த்தும், இந்த வார்த்தையை விட பலமாக பயம் என்ற உணர்வை வெளிப்படுத்தும் வார்த்தை கிடையாது என்று கூறுகின்றனர் இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரேஷ். 'ஆ' ஐந்து வித்தியாசமான தளத்தில் நடக்கும் திகில் கதை. ஜப்பான், துபாய், ஆந்திராவில் உள்ள ஓர் ஆளரவமற்ற நெடுஞ்சாலை, வங்கக் கடல் நடுவே, மற்றும் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ATM ஆகிய இடங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பு தான் 'ஆ'. ஆவியுலகைப் பற்றி ஆராய மூன்று இளைஞர்கள் எங்கும் சுற்றி வர, அதில் அவர...
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் விமர்சனம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சந்தானம் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம். மேலும் தெலுங்கிலும், ஹிந்திலும் பெரும் வெற்றி பெற்ற இயக்குநர் ராஜமெளலியின் ‘மரியாத ராமண்ணா’ படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வீட்டிற்குள் சிக்கிக் கொள்கிறான் சக்தி. அவ்வீட்டு வாசற்படியைத் தாண்டினால், அவரை வெட்டி கூறு போட அரிவாள்களுடன் பல ஆட்கள் தயாராகக் காத்திருக்கின்றனர். சக்தி எப்படித் தப்பிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. சக்தியாக சந்தானம். ‘டக்கரு.. டக்கரு..’ என ஆர்ப்பாட்டமாக திரையில் தோன்றுகிறார். அவர் அறவங்காடு எனும் கிராமத்திற்குப் போகும் வரை சந்தானத்தின் வழக்கமான பாணியில் கதை நகர்கிறது. அதுவும் அதிக கலகலப்பில்லாமல்.. சொல்லப் போனால், சகித்துக் கொள்ள பொறுமையும் கோருகிறது. முக்கியமாக சோலர் ஸ்டார் இராஜகுமாரன், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் வரும் காட்சிகள் எல்லாம் கடியின் உச்சம். அறவங்காடு எனும் கிராமத்திற்கு சந்தானம் சென்றவுடன...
யாமிருக்க பயமே விமர்சனம்

யாமிருக்க பயமே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொள்ளியூர் கிராமத்தில் இருக்கும் கழுகு எஸ்டேட்டைப் புணரமைத்து, ‘குளுகுளு ரிசார்ட்’ ஆகத் திறக்கிறார் கிரண். அங்கே நிகழும் அமானுஷ்ய சம்பவங்களால் செய்வதறியாது திகைக்கும் கிரணின் கதியென்ன என்பதுதான் படத்தின் கதை. கழுத கெட்டா குட்டிச் சுவர் என்பது போல் பேய் கெட்டா பாழடைந்த பங்களா போலும். எப்பொழுதாவது பாழடைந்த குடிசையில் பேய் உலாவுவதாகக் கேள்விப்பட்டுள்ளீரா? வாரிசில்லாத பணக்காரர்கள்தான் பேய்களாக மாறுகிறார்களோ என்னவோ! தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது பேயான பின்னும் பொருந்தும் போலும். தான் வாழ்ந்த மாளிகைக்கு அந்நியர் வந்தால்தான் பேயுக்கு கோபம் வந்து விடுகிறது. ‘தனது’ என்ற பிடிப்பும், தீராத மோகமும் மனிதனுக்கு மட்டுமல்ல பேயுக்கும் உண்டு என்பதே இந்தப் படத்தின் மையக்கரு. மேலே உள்ள பத்தியில் பேய் என்ற சொல்லுக்கு பொதுப்படையான பொருள் எடுத்துக் கொள்ளக்கூடாது. மேற்கூறிய இலக்கணங்கள், “பங்களா பேய்”க...
கப்பலேறும் நட்பு

கப்பலேறும் நட்பு

சினிமா, திரைத் துளி
நட்பைப் பற்றிய கதைக்கு தமிழ்த் திரையுலகில் எப்பொழுதும் தனி மவுசு உண்டு. தாய்ப்பாசம், காதலைத் தொடர்ந்து அதிக அளவில் விவாதிக்கப்பட்ட கதை நட்புதான். 'கப்பல்' என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தின் மைய அம்சம் 'நட்பு'. ஐ ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார் கார்த்திக் ஜி கிருஷ். இவர் இயக்குநர் சங்கரிடம் இயக்கம் பயின்றவர் . 'நட்பு எல்லோரையும் கவரும் அம்சமாகும். வீட்டுக்கு ஒரு பிள்ளை என்ற இந்தக் காலக்கட்டத்தில் நட்பு மட்டுமே ஒரு பிள்ளையின் குணாதிசயத்தை, வளர்ந்த பின்னரும் தீர்மானிக்கிறது. தனக்கு மட்டுமே உரியவர் என்ற மனப்பான்மை எல்லா உறவிலும் தழைத்தாலும், நட்பில் அந்த உணர்வு மேலிடும் போது வரும் பிரச்சினையை விவாதிக்கும் படம் தான் 'கப்பல்'. வைபவ் என்னுடைய கதையின் நாயகன் பாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார் .மங்காத்தா படத்தில் வைபவ்வை...
கிராமத்தில் விழும் விண்கல்

கிராமத்தில் விழும் விண்கல்

சினிமா, திரைத் துளி
EYE CATCH MULTIMEDIA நிறுவனத்தின் தயாரிப்பில் அப்படிப்பட்ட அறிவியல் பின்னணியில் ஒரு கிராமத்துக் கதையாக உருவாகியிருக்கும் படம், ‘அப்புச்சி கிராமம்’. பிறந்த தேதியைத் தெரிந்த கொண்ட நமக்கு, நம்முடைய இறக்கும் தேதி தெரிந்தால் நம் வாழ்க்கையிலும், நமக்குள்ளும் எப்படியெல்லாம் மாற்றங்கள் ஏற்படும் என்பதே அப்புச்சி கிராமத்தின் மையக்கரு. தமிழ் சினிமாவின் திறமையை பாலிவுட்டில் அதிர வைக்கும் வெற்றியின் மூலம் நிரூபித்த இயக்குநர் திரு.A.R.முருகதாஸிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய VI.ஆனந்த், ‘அப்புச்சி கிராமம்’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். “அறிவியல் பின்னணியில் கிராமத்துக் கதை எடுக்கும் தைரியம் எனக்கே இல்லை. VI.ஆனந்த அதைப் பண்றார் என்பது பெருமையாக இருக்கு” என்றார் முருகதாஸ். பல படங்களில் இணைந்து நடித்த நாசரும் கிட்டியும், இப்படத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ளனர். மேலும் கஞ்ச...