Shadow

சினிமா

ஏ.டி.எம்.மில் ‘ஆ’…வி

ஏ.டி.எம்.மில் ‘ஆ’…வி

சினிமா, திரைத் துளி
உலகத்தரத்துக்கு இணையாக தொழில்நுட்பத்தில் முன்னேறி வருகிறது தமிழ் சினிமா. அம்புலி 3D படம் மூலம் தமிழ்த் திரைப்பட உலகின் கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளர்கள் கே.டி.வி.ஆர். Creative Frames நிறுவனமும், இயக்குநர்கள் ஹரி-ஹரேஷ் இரட்டையரும் மீண்டும் இணைந்து வழங்கும் படம் இது. 'ஆ ' என்ற சத்தம் அலறலாக வெளிப்படும்போது பயத்தையும், பயங்கரத்தையும், வலியையும் உணர்த்தும், இந்த வார்த்தையை விட பலமாக பயம் என்ற உணர்வை வெளிப்படுத்தும் வார்த்தை கிடையாது என்று கூறுகின்றனர் இயக்குநர்கள் ஹரி மற்றும் ஹரேஷ். 'ஆ' ஐந்து வித்தியாசமான தளத்தில் நடக்கும் திகில் கதை. ஜப்பான், துபாய், ஆந்திராவில் உள்ள ஓர் ஆளரவமற்ற நெடுஞ்சாலை, வங்கக் கடல் நடுவே, மற்றும் தமிழகத்தின் தென்கோடியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள ATM ஆகிய இடங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பு தான் 'ஆ'. ஆவியுலகைப் பற்றி ஆராய மூன்று இளைஞர்கள் எங்கும் சுற்றி வர, அதில் அவர...
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் விமர்சனம்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சந்தானம் நாயகனாக அறிமுகமாகியுள்ள படம். மேலும் தெலுங்கிலும், ஹிந்திலும் பெரும் வெற்றி பெற்ற இயக்குநர் ராஜமெளலியின் ‘மரியாத ராமண்ணா’ படத்தின் ரீமேக் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு வீட்டிற்குள் சிக்கிக் கொள்கிறான் சக்தி. அவ்வீட்டு வாசற்படியைத் தாண்டினால், அவரை வெட்டி கூறு போட அரிவாள்களுடன் பல ஆட்கள் தயாராகக் காத்திருக்கின்றனர். சக்தி எப்படித் தப்பிக்கிறான் என்பதுதான் படத்தின் கதை. சக்தியாக சந்தானம். ‘டக்கரு.. டக்கரு..’ என ஆர்ப்பாட்டமாக திரையில் தோன்றுகிறார். அவர் அறவங்காடு எனும் கிராமத்திற்குப் போகும் வரை சந்தானத்தின் வழக்கமான பாணியில் கதை நகர்கிறது. அதுவும் அதிக கலகலப்பில்லாமல்.. சொல்லப் போனால், சகித்துக் கொள்ள பொறுமையும் கோருகிறது. முக்கியமாக சோலர் ஸ்டார் இராஜகுமாரன், இசையமைப்பாளர் சித்தார்த் விபின் வரும் காட்சிகள் எல்லாம் கடியின் உச்சம். அறவங்காடு எனும் கிராமத்திற்கு சந்தானம் சென்றவுடன...
யாமிருக்க பயமே விமர்சனம்

யாமிருக்க பயமே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொள்ளியூர் கிராமத்தில் இருக்கும் கழுகு எஸ்டேட்டைப் புணரமைத்து, ‘குளுகுளு ரிசார்ட்’ ஆகத் திறக்கிறார் கிரண். அங்கே நிகழும் அமானுஷ்ய சம்பவங்களால் செய்வதறியாது திகைக்கும் கிரணின் கதியென்ன என்பதுதான் படத்தின் கதை. கழுத கெட்டா குட்டிச் சுவர் என்பது போல் பேய் கெட்டா பாழடைந்த பங்களா போலும். எப்பொழுதாவது பாழடைந்த குடிசையில் பேய் உலாவுவதாகக் கேள்விப்பட்டுள்ளீரா? வாரிசில்லாத பணக்காரர்கள்தான் பேய்களாக மாறுகிறார்களோ என்னவோ! தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும் என்பது பேயான பின்னும் பொருந்தும் போலும். தான் வாழ்ந்த மாளிகைக்கு அந்நியர் வந்தால்தான் பேயுக்கு கோபம் வந்து விடுகிறது. ‘தனது’ என்ற பிடிப்பும், தீராத மோகமும் மனிதனுக்கு மட்டுமல்ல பேயுக்கும் உண்டு என்பதே இந்தப் படத்தின் மையக்கரு. மேலே உள்ள பத்தியில் பேய் என்ற சொல்லுக்கு பொதுப்படையான பொருள் எடுத்துக் கொள்ளக்கூடாது. மேற்கூறிய இலக்கணங்கள், “பங்களா பேய்”க...
கப்பலேறும் நட்பு

கப்பலேறும் நட்பு

சினிமா, திரைத் துளி
நட்பைப் பற்றிய கதைக்கு தமிழ்த் திரையுலகில் எப்பொழுதும் தனி மவுசு உண்டு. தாய்ப்பாசம், காதலைத் தொடர்ந்து அதிக அளவில் விவாதிக்கப்பட்ட கதை நட்புதான். 'கப்பல்' என்ற பெயரில் தயாராகும் புதிய படத்தின் மைய அம்சம் 'நட்பு'. ஐ ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் இந்தப் படத்தில் இயக்குநராக அறிமுகமாகிறார் கார்த்திக் ஜி கிருஷ். இவர் இயக்குநர் சங்கரிடம் இயக்கம் பயின்றவர் . 'நட்பு எல்லோரையும் கவரும் அம்சமாகும். வீட்டுக்கு ஒரு பிள்ளை என்ற இந்தக் காலக்கட்டத்தில் நட்பு மட்டுமே ஒரு பிள்ளையின் குணாதிசயத்தை, வளர்ந்த பின்னரும் தீர்மானிக்கிறது. தனக்கு மட்டுமே உரியவர் என்ற மனப்பான்மை எல்லா உறவிலும் தழைத்தாலும், நட்பில் அந்த உணர்வு மேலிடும் போது வரும் பிரச்சினையை விவாதிக்கும் படம் தான் 'கப்பல்'. வைபவ் என்னுடைய கதையின் நாயகன் பாத்திரத்துக்கு பொருத்தமாக இருந்தார் .மங்காத்தா படத்தில் வைபவ்வை...
கிராமத்தில் விழும் விண்கல்

கிராமத்தில் விழும் விண்கல்

சினிமா, திரைத் துளி
EYE CATCH MULTIMEDIA நிறுவனத்தின் தயாரிப்பில் அப்படிப்பட்ட அறிவியல் பின்னணியில் ஒரு கிராமத்துக் கதையாக உருவாகியிருக்கும் படம், ‘அப்புச்சி கிராமம்’. பிறந்த தேதியைத் தெரிந்த கொண்ட நமக்கு, நம்முடைய இறக்கும் தேதி தெரிந்தால் நம் வாழ்க்கையிலும், நமக்குள்ளும் எப்படியெல்லாம் மாற்றங்கள் ஏற்படும் என்பதே அப்புச்சி கிராமத்தின் மையக்கரு. தமிழ் சினிமாவின் திறமையை பாலிவுட்டில் அதிர வைக்கும் வெற்றியின் மூலம் நிரூபித்த இயக்குநர் திரு.A.R.முருகதாஸிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய VI.ஆனந்த், ‘அப்புச்சி கிராமம்’ படம் மூலமாக இயக்குநராக அறிமுகமாகிறார். “அறிவியல் பின்னணியில் கிராமத்துக் கதை எடுக்கும் தைரியம் எனக்கே இல்லை. VI.ஆனந்த அதைப் பண்றார் என்பது பெருமையாக இருக்கு” என்றார் முருகதாஸ். பல படங்களில் இணைந்து நடித்த நாசரும் கிட்டியும், இப்படத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ளனர். மேலும் கஞ்ச...
தலைவரில் தொடங்கி ‘தல’யில் முடிந்த மகிழ்ச்சி

தலைவரில் தொடங்கி ‘தல’யில் முடிந்த மகிழ்ச்சி

சினிமா, திரைச் செய்தி
“’என்னமோ நடக்குது’ நான் மியூசிக் பண்ற எட்டாவது படம். அஞ்சு தமிழ்ப்படம்; ஒரு கன்னடப் படம்; ஒரு தெலுங்குப் படம் பண்ணியிருக்கேன். அந்தப் படமெல்லாம் தியேட்டருக்கு வந்தது.. ஒரு வாரத்திலேயே தியேட்டரில் இருந்து எடுத்துட்டாங்க. அதனால் நான் மியூசிக் பண்றேன் என மக்களுக்குத் தெரியாம போயிடுச்சு. இந்தப் படத்துலதான் நான் மியூசிக் டைரக்டராக ரீச் ஆகியிருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கேன். ‘தல’க்கு ஹேப்பி பர்த் டே! இன்னிக்கு நைட் பார்ட்டியிருக்கும். நான் போவேன்” என்றார் மகிழ்ச்சியுடன் பிரேம்ஜி அமரன். “இயக்குநர் ராஜபாண்டி எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். ‘இப்படிப் பண்ணலாமா?’ எனக் கேட்டால்.. ‘விருப்பப்படி பண்ணுங்க’ என எடிட்டிங் ரூம் பக்கமே வர மாட்டார். ராஜபாண்டி சார் ஸ்க்ரிப்ட் பார்த்தீங்கன்னா.. மூணு பெர்ஸ்பெக்டிவ்ல கதை அமைஞ்சிருக்கும். நான் அதை இன்னொரு வெர்ஷன்ல பண்ணலாமான்னு கேட்டப்ப.. டைரக்டர் ஒத்துக்கிட்ட...
நீ எங்கே என் அன்பே விமர்சனம்

நீ எங்கே என் அன்பே விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அரிதினும் அரிதாக வரும் நாயகிக்கு முக்கியத்துவுமுள்ள படமிது. வித்யா பாலன் நடித்த ‘கஹானி’ எனும் ஹிந்திப் படத்தினைத் தழுவி, இயக்குநர் சேகர் கம்முலா தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் இப்படத்தை எடுத்துள்ளார். ஒரு ப்ராஜெக்ட்டிற்காக, அமெரிக்காவிலிருந்து ஹைதராபாத்திற்கு வரும் அனாமிகாவின் கணவர் திடீரெனக் காணாமல் போய்விடுகிறார். அவரைத் தேடி, அனாமிகா ஹைதராபாத் வருகிறார். அனாமிகாவின் கணவருக்கு என்னானது? அவர் கிடைத்தாரா? என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது. இயக்குநர் நயன்தாராவை தமிழ்ப் பெண்ணாக்கி ஹைதராபாத்தில் சாமர்த்தியமாக நடமாடவிட்டுவிடுவதால், படத்தின் தெலுங்கு நெடி ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. அனாமிகா தங்கியிருக்கும் விடுதியின் ஒரு பக்கம் மசூதி, மறு பக்கம் பெரிய காளி சிலை வைத்துக் கொண்டாடப்படுகிறது. ‘அனாமிகா’ தைரியமானவர்; சக்தி மிகுந்தவர் என்பதன் உருவகமாக காளி சிலை உபயோகிப்படுத்தப்படுவதோடு...
நான் ‘குவளையத்தேவன்பட்டி’ காளி

நான் ‘குவளையத்தேவன்பட்டி’ காளி

சினிமா, திரைத் துளி
“கோவில்பட்டி பக்கத்தில் குவளையத்தேவன்பட்டி என்ற கிராமத்தில் இருந்து வந்த எனக்கு எட்டு வருடத்திற்கும் மேலான போராட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாத்தாயின் செல்லப்பிள்ளைகளில் ஒருவனாக வலம் வரும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சின்ன வயதில் பள்ளிகளிலும், கோவில் திருவிழாக்களிலும் நாடகங்களில் நடித்த எனக்கு நடிப்பு மீதும் சினிமாவின் மீதும் ஈர்ப்பும் ஆர்வமும் ஏற்பட சென்னைக்கு வண்டி ஏறினேன். சென்னைக்கு வந்த பிறகுதான் தெரிந்தது, சினிமாவில் நடிக்க வாய்ப்புக் கிடைப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல என்று. சாப்பாட்டிற்கும் தங்குவதற்குமாக கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு வாய்ப்புத் தேடி அலைகின்ற எத்தனையோ திறமைசாலிகள் சரியான வாய்ப்புக் கிடைக்காமல் இன்றும் கோடம்பாக்கத்தில் இருக்கின்றனர். நானும் ஏழு எட்டு வருடங்கள் டீக்கடை, மளிகைக்கடை என்று சென்னையில் பார்க்காத வேலைகள் இல்லை. காலை முதல் இரவு வரை வயித்துப்பிழைப்புக்க...
என்னமோ நடக்குது விமர்சனம்

என்னமோ நடக்குது விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஐந்து லட்ச ரூபாய் அவசரத் தேவைக்கு, பர்மாவிடம் வேலைக்குச் சேருகிறான் விஜய். வேலைக்குச் சேர்ந்த நாலாம் நாளில், விஜய்யிடமிருந்து யாரோ சுமார் 15 கோடிக்கு மேல் திருடி விடுகின்றனர். பணத்தை தவறவிட்ட விஜய்யின் கதியென்ன? அவனுக்கு ஏன் ஐந்து லட்சம் தேவைப்படுகிறது? அந்தப் பணம் விஜய்யுக்குக் கிடைத்ததா? பர்மாவின் பணத்தைக் கொள்ளையடித்தது யார்? ஏன்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலை விறுவிறுப்பான கதையில் அமைத்துள்ளார் இயக்குநர் ராஜபாண்டி. நாயகனாக விஜய் வசந்த். போஸ்டர் ஒட்டும் வேலை செய்பவர். அவரும், அவருக்கு அம்மாவாக நடித்திருக்கும் சரண்யா பொன்வண்ணனும் சென்னைத் தமிழ் பேசுபவராக நடித்துள்ளனர். பாச மிகுதியில் சரண்யா பொன்வண்ணனை காலால் எட்டி உதைக்கும் பாசக்காரர் விஜய் வசந்த். இப்படத்திலும், ‘என் மொவனுக்கு லட்டு மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சிருக்கு!’ என கண்களைப் பெரிதாக்கி மகிழும் பாத்திரமே! ஆனால் அதையும் மீறி, அவரது...
வாயை மூடி பேசவும் விமர்சனம்

வாயை மூடி பேசவும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் பாலாஜி மோகன் அசத்தியுள்ளார். பனிமலை என்னும் ஊரில் மனிதர்களை ஊமையாக்கிவிடும் விநோதமான வைரஸ் பரவுகிறது. பேசுவதால் அவ்வைரஸ் பரவுகிறது என்பதால், அவ்வூரில் பேசுவதற்கு தடை உத்தரவு பிறப்பித்துவிடுகிறது அரசு. பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நாயகனாக இப்படத்தில் அறிமுகமாகியுள்ளார். பேசியே ஆளைக் கவிழ்க்கும் சேல்ஸ் மேன் பாத்திரத்தில் மிக அழகாகப் பொருந்துகிறார். பேசிப் புரிய வைக்க முடியாத விஷயமே உலகில் இல்லை என நம்பும் குணாதிசயம் கொண்டவன் அரவிந்திற்கு நேரெதிர் பாத்திரத்தில் நஸ்ரியா நசிம். பேசுவதற்கு தடை உத்தரவு பிறப்பித்ததற்கு மகிழும் அஞ்சனாவாகக் கலக்கியுள்ளார். தானே வகுத்துக் கொண்ட மனத்தடைகளில் சிக்கி உழல்பவரை, அரவிந்த் தான் மீட்கிறான். வழக்கம்போல் காதல்தான் என்றாலும், சலிப்பு ஏற்படுத்தாமலும் உறுத்தாமலும் காட்சிப்படுத்தியுள்...
அடுத்த தலைமுறை தமிழ் சினிமா

அடுத்த தலைமுறை தமிழ் சினிமா

சினிமா, திரைத் துளி
“படத்தின் பெரும் பகுதிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இனி சில காட்சிகளும் ஒரு பாடலும் மட்டுமே படமாக்கப்படவுள்ளது. அதற்காகப் படக்குழுவினர் இந்த மாத இறுதியில் பூனே புறப்பட்டுச் செல்கின்றனர். படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்று ஹிந்தியில் இடம்பெறுகிறது. அப்பாடலில் ராஜ்பரத்தையும் தேஜஸ்வினியையும் நடிக்க வைத்துப் படமாக்கப்பட்டுள்ளது. நெருக்கமான காட்சிகளைக் கொண்ட பாடலாகவும் அதேசமயம் மிக அழகாகவும் படமாக்கப்பட்டுள்ளது. டான்ஸ் மாஸ்டர் விஜி இதற்கு நடனம் அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் முகேஷின் ஒளிப்பதிவும், ஆர்ட் டைரக்டர் செந்திலின் அழகான அரங்க வடிவமைப்பும் படம் பார்ப்பவர்களைச் சொக்கவைக்கும். இது அடுத்த தலைமுறைக்கு சினிமாவைக் கொண்டு செல்லும் முயற்சி. இதில் மாற்று சினிமாவிற்கான முக்கிய கூறுகளோடு அழகியல் சார்ந்து புதிய பாணியில் கதை சொல்ல முயன்றிருக்கிறேன். இது முழுக்க முழுக்க எப்படி ஒரு கதைசொல்லி, கேட்பவர்களுக்க...
தைரியமும் தன்னம்பிக்கையும் தரும் பாக்சிங்

தைரியமும் தன்னம்பிக்கையும் தரும் பாக்சிங்

சினிமா, திரைத் துளி
குருந்துடையார் புரொடக்ஷன்ஸ் சார்பாக நிர்மல் தேவதாஸ் தயாரிக்கும் படம் ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’. R.விஜயகுமார் இயக்கத்தில் சார்லஸ் மெல்வின் இசையமைப்பில் மனோஜ் தேவதாஸ், வீணா நாயர், ஜார்ஜ் விஜய், விசாகர், ராஜேஷ், பாலாஜி, ஹென்சா, மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் இயக்குநரான R.விஜயகுமார், இயக்குநர்கள் வடிவுடையான், நகுலன் பொன்னுசாமி, சிவா ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். படம் பற்றி இயக்குநர் R.விஜயகுமார் கூறியதாவது, “வேற ஒரு டைட்டில் வச்சிருந்தோம். அது கிடைக்கிறதுல கொஞ்சம் பிரச்சனையா இருந்தது. ‘பாடல் வரில ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’ என வரும். அதையே தலைப்பு வைக்கலாம்னு முடிவு பண்ணோம். படத்துக்கும் அது பொருந்துச்சு. ஹீரோவோட கேரக்டர், எதைச் செஞ்சாலுமே ஏடா கூடமாவே செய்வாரு. அவர் குரு நாதர் என்ன சொல்றாரோ, என்ன நினைக்கிறாரோ அதைச் செய்யாம, அதுக்கு ஏடாகூடமா செய்வாரு. அதுதான் படத்தோட தலைப்பு...
ஆர்யா தயாரிக்கும் ‘அமர காவியம்’

ஆர்யா தயாரிக்கும் ‘அமர காவியம்’

சினிமா, திரைத் துளி
வித்தியாசமான படங்களைத் தேர்வு செய்து நடிப்பவர் என எல்லோராலும் பாராட்டப்படும் நடிகர் ஆர்யா, அந்தப் பெயரை ஒரு தயாரிப்பாளராகவும் ஈட்ட பெரும் முயற்சி மேற்கொண்டு உள்ளார். தனது பட நிறுவனமான 'தி ஷோ பீப்பிள்' என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கும், 'அமர காவியம்' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. பெரும் வெற்றி பெற்ற 'நான்' திரைப்படம் மூலம் திரையுலகினரின் கவனத்தை ஈர்த்த ஜீவா ஷங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்கும் காதல் கதை இது . ஆர்யாவின் தம்பி சத்யா கதாநாயகனாக நடிக்கும் 'அமர காவியம் ' படத்தில் கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார் மியா ஜார்ஜ் . 'காதல் பற்றிய படங்கள், திரைப்படம் தோன்றிய காலத்தில் இருந்தே வந்த கொண்டேதான் இருக்கிறது. காதல் ஒரு நூல் இழை போல, அதை திறம்பட நெய்து பார்ப்பவரைக் கவரச் செய்வது ஒரு இயக்குனரின் கடமை. ஒவ்வொரு நெசவாளனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதைப் போலவே ஒவ்வொரு இயக்குநருக்கு...
தெனாலிராமன் விமர்சனம்

தெனாலிராமன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மக்களின் நிலைமையை அறிந்திராத நல்ல அரசரும், பேராசை மிகுந்த எட்டு அமைச்சர்களும் உள்ள விகட நகரத்து அரண்மனையில்.. ஒன்பதாவது அமைச்சராக கிளர்ச்சியாளர் தெனாலிராமன் நுழைகிறார். பின் என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை. மறுபிரேவசம் பிரம்மாண்டமாக இருக்கணும் என்பதற்காகக் காத்திருந்து வடிவேலு நடித்திருக்கும் படமிது என்பது குறிப்பிடத்தக்கது. கதையின் நாயகன் தெனாலிராமன்தான் என்ற பொழுதும், கலக்குவது என்னவோ மன்னராக வரும் வடிவேலுதான். ‘எந்த அறை?’ என 36 மனைவிகள் கொண்ட மன்னர் வடிவேலுக்கு ஏற்படும் குழப்பத்தை அவர் உடல்மொழியில் காட்டுவதைக் குறிப்பிடலாம். இப்படியாக சின்னஞ்சிறு சுவாரசியங்கள் ஆங்காங்கே இருந்தாலும், மையக்கருவுடன் ஒட்டாமல் திரைக்கதை பயணிக்கிறது. இக்கட்டில் மாட்டிக் கொள்ளும் வடிவேலு காட்டும் பரிதவிப்பான உடல்மொழிதான் அவரது பலமே! ஆனால் தெனாலிராமன் மதியூகி என்பதால்.. மிகப் பொறுமையாக எந்த உணர்ச்சியும் கா...
டமால் டுமீல் விமர்சனம்

டமால் டுமீல் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஒரு நன்னாளில், மணிகண்டனுக்கு வேலை போய் விடுகிறது. அடுத்த நாள், அவன் வீட்டு வாசலில் 5 கோடி ரூபாய் பணம் கொண்ட அட்டைப்பெட்டி ஒன்றைப் பார்க்கிறான். பின் என்னானது என்பதுதான் படத்தின் கதை. MONEYKANDAN. நியூமராலஜி பார்த்து நாயகன் வைத்துக் கொள்ளும் பெயர். பணத்தைத் தனதாக்கிக் கொள்ள மணிகண்டன் கற்பித்துக் கொள்ளும் சமாதானம், தானொரு சாமானியன் என்பது. வர வர தமிழ் சினிமா சாமான்யர்களுக்கு நிறையதான் சலுகை தருகிறது. சாமானியன் மணிகண்டனாக வைபவ் நடித்துள்ளார். நாயகனாக அவர் அறிமுகமாகும் முதற்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு போலீஸ்காரரும், ஒரு ரெளடியும் அவரது வீட்டுக்குள் வந்து ஒருவருக்கு ஒருவர் சுட்டுக் கொண்டு இறக்கும்பொழுது, அவர் காட்டும் பாவனை ரசிக்க வைக்கிறது. மீராவாக ரம்யா நம்பீசன். காதலிக்கவும் காதலிக்கப்படவும்தான் படத்தில் அவர் இருந்தாலும், சினிமாத்தனம் இல்லாத நாயகியாக வருகிறார். சில இடங்களில் வைப...