Shadow

சினிமா

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் அஸ்ஸாம் மாநிலத்து ஆவியை கொண்டு மிரட்டும் “அரண்மனை 4”யை கண்டு களியுங்கள்

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் அஸ்ஸாம் மாநிலத்து ஆவியை கொண்டு மிரட்டும் “அரண்மனை 4”யை கண்டு களியுங்கள்

சினிமா, திரைச் செய்தி
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் பிளாக்பஸ்டரான இயக்குநர் சுந்தர் சியின் "அரண்மனை 4" திரைப்படத்தை தற்போது ஸ்ட்ரீமிங் செய்து வருகிறது.திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் தற்போது குடும்பத்தோடு வீட்டில் அமர்ந்தபடியே டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் "அரண்மனை 4" திரைப்படத்தை கண்டுகளிக்கலாம்.சூப்பர்ஹிட் ஹாரர் காமெடி ஜானரில் அரண்மனை படத்தொடரின் தொடர்ச்சியாக வெளியான இந்தப் படத்தில், சுந்தர் சி உடன் நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா மற்றும் நடிகர் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.கமர்ஷியல் எண்டர்டெய்னர்களை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவதில் மாஸ்டர் என்று அறியப்பட்ட சுந்தர் சி மீண்டும் ஹாரர் காமெடியில் ஒரு அழுத்தமான கதையுடன் இப்படத்தைத் தந்துள்ளார்.அரண்மனை 4 முந்தைய படங்களின் கதைக்களத்திலிருந்து மாறுபட்டு, ஒரு புத்துணர்ச்சி...
சன்னி தியோல், கோபிசந்த் மலினேனி இணையும்  #SDGM  படத்தின் படப்பிடிப்பு ஜூன் 22 முதல் துவங்குகிறது !!

சன்னி தியோல், கோபிசந்த் மலினேனி இணையும்  #SDGM  படத்தின் படப்பிடிப்பு ஜூன் 22 முதல் துவங்குகிறது !!

சினிமா, திரைச் செய்தி
இந்தியாவையே தன் கதர் 2  படம்  மூலம் திரும்பிப் பார்க்க வைத்த பாலிவுட் நட்சத்திர நடிகர் சன்னி தியோல், தன் அடுத்த படத்தைத் துவக்கியுள்ளார். 40 வருடங்களைக் கடந்து, 100 படங்களை நோக்கி முன்னெறி வரும் சன்னி தியோல் ஆக்சன் அதிரடி படங்கள் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்து வைத்துள்ளார். இவரது அடுத்த படம், மிகப்பெரும் பிரமாண்ட படைப்பாக உருவாகிறது. நவீன் யெர்னேனி, மைத்ரி மூவி மேக்கர்ஸ் Y ரவிசங்கர் மற்றும் பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் TG விஸ்வ பிரசாத் ஆகியோர் இணைந்து பிரமாண்டமாகத் தயாரிக்க, பிளாக்பஸ்டர் இயக்குநர் கோபிசந்த் மலினேனி  இப்படத்தை இயக்குகிறார்.கிராக் மற்றும் வீர சிம்ஹா ரெட்டி ஆகிய இரண்டு தொடர்ச்சியான பிளாக்பஸ்டர்களை வழங்கிய இயக்குநர் கோபிசந்த் மலினேனி, #SDGM திரைப்படத்தை, முழுமையான கமர்ஷியல் அம்சங்களுடன் அதிரடி ஆக்‌ஷன் என்டர்டெய்னராக உருவாக்கவுள்ளார். இது அவரது முதல் இந்தி தி...
தளபதியின் பிறந்தநாளுக்கு காத்திருக்கும் சர்ஃப்ரைஸ்

தளபதியின் பிறந்தநாளுக்கு காத்திருக்கும் சர்ஃப்ரைஸ்

சினிமா, திரைச் செய்தி
தளபதி விஜய் அவர்களின் கோடான கோடி ரசிகர்கள் ஒருவரான, வளரும் இசையமைப்பாளர் சதீஷ் நாதனின் இசையில் தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 21.6.2024 அன்று மாலை 6 மணி அளவில் ஒரு ரசிகனின் கனவாக #வாதளபதிவா என்ற தலைப்பில் பாடல் வெளியாகிறது.தளபதியின் கடின உழைப்புக்கும், அவரின் வெற்றிக்கும்,  என்னையும் சேர்த்து  கோடான கோடி ரசிகர்களின் அரவணைப்புக்கும்   இந்த பாடலை அர்ப்பணிக்கிறேன். இப்பாடலை திரைப்பட பாடலாசிரியர் கருணாகரன் எழுதியிருக்கிறார், மற்றும் திரைப்பட பாடகர், வேலு மற்றும் தீத்யா , பவன் குழுவினர்கள் இப்பாடலை பாடி இருக்கிறார்கள்.வரும் 21ஆம் தேதி அன்று திரை பிரபலங்கள் இப்பாடலை தங்களது சமூக வலைதளத்தில் பகிரவும் இருக்கிறார்கள்....
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட நடிகர் விஷால்

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட நடிகர் விஷால்

சினிமா, திரைச் செய்தி
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே போவது பேரதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் விஷச் சாராயத்திற்கு பலி ஆகும் நிகழ்வும் போதை பொருட்கள் அதிகரித்து வருவதும் தொடர் கதையாகவே உள்ளது.சம்பந்தப்பட்ட சில அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு முதற்கட்ட நடவடிக்கை எடுத்து இருந்தாலும் இந்த துயரமான நிகழ்விற்கு காரணமான ஒருவர் கூட விடுபடாத அளவிற்கு நீதியின் முன் நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்."கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து மெய்யறி யாமை கொளல்."என்ற வள்ளுவனின் வாக்குக்கு இணங்க தமிழ்நாடு அரசு விஷச் சாரயத்தை ஒழிக்கவும், சமீப நாட்களாக தமிழகத்தில் புழங்கும் போதை பொருட்களை முற்றிலும் ஒழிப்பதிலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குறுதி அளித்த மதுப...
யோகிபாபுவின் முதல் வெஃப் சீரிஸ் “சட்னி – சாம்பார்” இப்பொழுது டிஸ்னி + ஹாட் ஸ்டாரில்

யோகிபாபுவின் முதல் வெஃப் சீரிஸ் “சட்னி – சாம்பார்” இப்பொழுது டிஸ்னி + ஹாட் ஸ்டாரில்

சினிமா, திரைச் செய்தி
டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'சட்னி - சாம்பார்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது !!இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர் யோகி பாபுவின் நடிப்பில், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான 'சட்னி - சாம்பார்' சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது.தமிழ் திரையுலகில் 'மொழி' திரைப்படம் முதலாக, அழுத்தமான அதே நேரம் நகைச்சுவை மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய தரமான படைப்புகளைத் தந்த இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் 'சட்னி-சாம்பார்' சீரிஸ் உருவாகியிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் இந்த சீரிஸ் பெரும் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.நடிகர் யோகி பாபு முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவருடன் நடிகை வாணி போஜன் இணைந்து நடித்துள்ளார். ஒரு ஒரிஜினல் வெப் சீரிஸில் யோகி பாபு நாயகனாக நடிப்பது இதுவே முதல் முறையாகும்.தற்போது வெளியிடப்பட்டுள்ள ஃபர்ஸ்ட் ...
யோகியுடன் இணைந்து காமெடி களத்தில் குதிக்கிறாரா இயக்குநர் கெளதம் மேனன்

யோகியுடன் இணைந்து காமெடி களத்தில் குதிக்கிறாரா இயக்குநர் கெளதம் மேனன்

சினிமா, திரைச் செய்தி
"வாரணம் ஆயிரம்", "காக்க காக்க", "மின்னலே", "விண்ணைத்தாண்டி வருவாயா", "வேட்டையாடு விளையாடு" போன்ற காலத்தால் அழியாத கிளாசிக் படைப்புகளைத் தந்த இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் சமூக வலைத்தளத்தில் ஒரு பதிவை போட்டுள்ளார். பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுடன் இருக்கும் விடியோவை பகிர்ந்து, தனது அடுத்த படைப்பு குறித்து மறைமுகமாக ஒரு குறிப்பை எழுதியுள்ளார்.மம்முட்டியுடன் கௌதம் மேனன் இணையும், அவரது முதல் மலையாளத் திரைப்படம் தாமதமாவதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இயக்குநர் கௌதம் மேனன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு சுவாரஸ்யமான வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், கௌதம் மேனன், யோகி பாபு மற்றும் சோஷியல் மீடியா இன்புளுயன்சர் பால் டப்பா ஆகிய மூவரும், ஒரு படப்பிடிப்பு தளத்தில் காரில் அமர்ந்துகொண்டு வைப் செய்கின்றனர். 1986 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் "விக்ரம்"...
ரயில் விமர்சனம்

ரயில் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எப்பொழுதும் போதையில் இருந்து, தனக்கு வரும் வேலை வாய்ப்புகளை இழக்கும் நாயகன், பஞ்சம் பிழைக்க தன் ஊருக்கு வந்து ஒழுக்கமாக வேலை பார்த்து வரும் வட இந்திய தொழிலாளிகளால் தான் தன்னை போன்றோருக்கு வேலை இல்லை என்று வஞ்சம் வளர்க்கிறான். அந்த வஞ்சத்தினால் விளைந்தது என்ன..? என்பது தான் ரயில் திரைப்படத்தின் கதை.தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிற்றூரில் குடியும் கூத்துமாக வாழ்ந்து வரும் நாயகன் குங்குமராஜுக்கு வீடுகளுக்கு வயரிங் செய்யும் வேலை. ஆனால் அந்த வேலையை ஒழுங்காக செய்யாமல் தன் நண்பன் ரமேஷ் வைத்யாவுடன் கூட்டணி அமைத்து குடிப்பதிலேயே குறியாக இருக்கிறார். இதனால் அவருக்கு வர வேண்டிய வேலைகள் கூட வட இந்திய தொழிலாளர்களுக்குப் போய்விடுகிறது. சற்று வசதிபடைத்த மனைவி வீட்டிலிருந்து வந்த நகை, பணம் மற்றும் இரு சக்கர வாகனம் முதற்கொண்டு குடித்து அழித்துவிட்ட காரணத்தால் மனைவி வைரமாலாவுடனும் இணக்கமான உறவு இ...
முருக பக்தர் ஜெயம் எஸ்.கே.கோபி தயாரிக்கும் முருகர் தொடர்பான ஆன்மீகப்படம்

முருக பக்தர் ஜெயம் எஸ்.கே.கோபி தயாரிக்கும் முருகர் தொடர்பான ஆன்மீகப்படம்

சினிமா, திரைச் செய்தி
முருகக் கடவுள் எப்போது யாரை ஆட்கொள்வார் என்பது யாருக்கும் தெரியாது. அவ்வாறு ஆட்கொள்ளப்பட்ட ஒருவரை பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம். வலதுசாரி அரசியல்வாதியாகவும் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் மற்றும் விநியோகஸ்தராகவும் பரபரப்பாக இயங்கி வந்த ஜெ எஸ் கே கோபி என்று அழைக்கப்படும் ஜெயம் எஸ் கே கோபி, இன்று ஒரு முழு நேர முருக பக்தர். தமிழ் கடவுளான ஆறுமுகனின் புகழை தனது இடைவிடாத செயல்பாடுகள் மூலமும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அகிலமெங்கும் பரப்பி வரும் ஜெயம் கோபியின் வாழ்க்கை பயணத்தை மாற்றி அமைத்தது 2023ம் ஆண்டு செப்டம்பரில் நண்பருடன் அவர் மேற்கொண்ட இமயமலை பயணம் தான்.\இதைத்தொடர்ந்து முருகரின் மகிமைகள் குறித்து தொடர்ந்து பேட்டிகள் அளித்து வந்த ஜெயம் கோபி, திடீரென்று ஒரு நாள் முருகர் உத்தரவிட்டதாக கூறி அரசியலில் இருந்து விலகி முழு நேர ஆன்மிகவாதியாக மாறினார். அதன் பின்னர் முருகரின் உத்தரவை ...
மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிறப்பாக ஓடும் “ஹரா”

மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் சிறப்பாக ஓடும் “ஹரா”

சினிமா, திரைச் செய்தி
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில் எல்மா பிக்சர்ஸ் என் எத்தில்ராஜ் வெளியீட்டில் 'வெள்ளி விழா நாயகன்' மோகன் நடிப்பில் ஜூன் 7 அன்று உலகெங்கும் வெளியான 'ஹரா', திரையரங்குகளில் தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வருகிறது.திரைக்கு வந்து இரண்டு வாரங்களுக்கு பிறகும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'ஹரா', அனைத்து தரப்பு ரசிகர்களை குறிப்பாக பெண்கள் மற்றும் இளம் தலைமுறையினரை ஈர்த்து வருகிறது. இதன் மூலம் இன்றும் அவர் 'வெள்ளி விழா நாயகன்' தான் என்பதை மோகன் நிரூபித்துள்ளார்.தொடக்கத்தில் தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான 'ஹரா', ரசிகர்களின் வரவேற்பை தொடர்ந்து இன்னும் அதிகமான திரைகளில் திரையிடப்பட்டது. இது தவிர மலேசியா, ஐரோப்பா, லண்டன் மற்றும் இலங்கை உள்ளிட்ட பகுதிகளிலும் இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.பதினான்கு வருடங்களுக்கு ப...
”மகாராஜா கதை கேட்கும்போது பெரிய நம்பிக்கை இருந்தது” – விஜய் சேதுபதி

”மகாராஜா கதை கேட்கும்போது பெரிய நம்பிக்கை இருந்தது” – விஜய் சேதுபதி

சினிமா, திரைத் துளி
பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் 'தி ரூட்' கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் கடந்த ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காக, நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது.பேஷன் ஸ்டுடியோஸ் இணைத் தயாரிப்பாளர் கமல் நயன் பேசியதாவது, “எங்கள் நாயகனை இந்த ஐம்பதாவது படம் மூலம் அரியணை ஏற்றி மகாராஜாவாக அமர வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி”.எஸ் பிக்சர்ஸ் ஸ்ரீனிவாசன், “எங்களுக்கும் பேஷன் ஸ்டுடியோஸூக்கும் நல்ல உறவு உள்ளது. கொரோனா சமயத்தில் பல படங்களை எடுத்து வைத்து நாங்கள் காத்திருந்தோம். கொரோனாவுக்குப் பிறகு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற ...
ஆர்.ஜே.பாலாஜியின் புதிய திரைப்படம் தொடர்பான அறிவிப்பு

ஆர்.ஜே.பாலாஜியின் புதிய திரைப்படம் தொடர்பான அறிவிப்பு

சினிமா, திரைச் செய்தி
'குட் நைட்', 'லவ்வர்' என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் - எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து புதிய படத்தை தயாரிக்கிறது. பெயரிடப்படாத அந்தத் திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான ஆர். ஜே. பாலாஜி கதையின் நாயகனாக நடிக்கிறார்.‌ இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை ஆர் ஜே பாலாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு பிரத்யேக போஸ்டர் மூலம் படக்குழுவினர் வெளியிட்டிருக்கிறார்கள்.இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக 'புரொடக்சன் நம்பர் 3' என பெயரிடப்பட்டிருக்கிறது. இதனை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம். ஆர். பி என்டர்டெய்ன்மென்ட்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் நாசரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான் மற்றும் யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.ஃபீல் குட் திரைப்படங்களை தொடர்ந்து ...
பிரபுதேவா, ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் “மூன் வாக்” திரைப்படம்

பிரபுதேவா, ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் “மூன் வாக்” திரைப்படம்

சினிமா, திரைச் செய்தி
Behindwoods தயாரிப்பில், AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் திரைப்படத்திற்கு 'மூன் வாக்' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!!இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திய வரலாற்று ஆளுமைகளான AR ரஹ்மானும், பிரபு தேவாவும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்தினை, தங்களது பெருமை மிகு, முதல் படைப்பாக Behindwoods நிறுவனம் தயாரித்து வருகிறது.Behindwoods நிறுவனம் #ARRPD6 என்ற தற்காலிக பெயரில் இப்படத்தைத் துவக்கியது. இந்நிலையில் இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்குமென ரசிகர்கள் பேராவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், 'மூன் வாக்' எனும் அட்டகாசமான தலைப்பை, Behindwoods நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.25 ஆண்டுகளுக்குப் பிறகு இசைப்புயல் AR ரஹ்மான், இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் பிரபு தேவா இணைகிறார்கள் என்ற நிலையில், இருவரையும் போற்றும் வகையிலும், அவர்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும் வகையிலும் 'ம...
”நம்பியார் விட்டுச் சென்ற இடத்தைப் பிடிக்க ஆசை” – நடிகர் வரதராஜன்

”நம்பியார் விட்டுச் சென்ற இடத்தைப் பிடிக்க ஆசை” – நடிகர் வரதராஜன்

சினிமா, திரைச் செய்தி
அண்மையில் வெளியான 'புஜ்ஜி அட் அனுப்பட்டி' திரைப்படம் ஆட்டுக்குட்டிக்கும் குழந்தைகளுக்குமான அன்பைச் சொன்ன படம். இப்படம் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்று ஊடகங்களால் பாராட்டப்பட்டது. படத்தைப் பாராட்டியதைப் போலவே அந்தப் படத்தில் கதை மையம் கொள்ளும் கசாப்புக் கடைக்காரர் ரஹீம் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் வரதராஜன் பழனிச்சாமியையும் ஊடகங்கள் குறிப்பிட்டுப் பாராட்டியிருந்தன.படம் பார்த்தவர்கள் மத்தியில் கவனம் பெற்ற நடிகர் வரதராஜன் பழனிச்சாமி ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்பது தனது கனவு, லட்சியம், நோக்கம் என்று மனம் திறந்து வெளிப்படுத்தி உள்ளார். அறிமுக நடிகரான அவர் தனது கலைப் பயணம் பற்றி கூறுகிறார்.நடிப்பு என்பது எனது பால்ய காலத்தில் இருந்து உடன் வருகிற ஒன்று என்பேன். நான் பள்ளி நாடகங்களில் நடித்து நிறைய பரிசுகள் பெற்றுள்ளேன். தொடர்ந்து மேடை நாடக அனுபவங்கள் க...
இனிதே துவங்கிய “வேற மாறி ஆபிஸ் – சீசன் 2”

இனிதே துவங்கிய “வேற மாறி ஆபிஸ் – சீசன் 2”

சினிமா, திரைச் செய்தி
தென்னிந்திய ஓடிடி உலகில், மக்களின் வாழ்வியலோடு கலந்த, பிராந்திய மொழி படைப்புகளை சிறப்பாக வழங்குவதில், முன்னணி ஓடிடி தளமாக ஆஹா ஓடிடி தளம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பல நல்ல படைப்புகளை தொடர்ந்து வழங்கி வரும், ஆஹா தமிழ் ஓடிடி தளம், இன்றைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைக் குவித்த ‘வேற மாறி ஆபீஸ்’ வெப் சீரிஸின், அடுத்த பாகத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கின்றது.ஒரு ஐடி அலுவலகத்தில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கையையும் நகைச்சுவை அனைவரும் ரசிக்கும் வகையில், மிக அற்புதமாக கூறிய “வேற மாறி ஆபீஸ்’ வெப் சீரிஸ், இன்றைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைக் குவித்தது. இந்த வெப் சீரிஸ் இளைஞர்கள் மற்றும் பொதுப் பார்வையாளர்களிடம் பெரும் பாராட்டுக்களைக் குவித்ததோடு, ஆஹா தமிழ் தளத்திற்கு பல புதிய வாடிக்கையாளர்களை பெற்றுத்தந்தது குறிப்பிடதக்கது.மக்களின் மனம் கவர்ந்த இணையத் தொடர...
உலகையே மாற்ற வேண்டும் என்ற கனவு கொண்ட ஆட்டோ ஓட்டுநரின் கதை “ராக்கெட் டிரைவர்”

உலகையே மாற்ற வேண்டும் என்ற கனவு கொண்ட ஆட்டோ ஓட்டுநரின் கதை “ராக்கெட் டிரைவர்”

சினிமா, திரைச் செய்தி
ஸ்டோரீஸ் பை தி ஷோர் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அனிருத் வல்லப் தயாரிக்கும் புதிய படம் "ராக்கெட் டிரைவர்". இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீராம் அனந்த சங்கர் இயக்குகிறார். ஃபேண்டசி, டிராமா-காமெடி என்டர்டெயினர் கதையம்சம் கொண்ட படமாக "ராக்கெட் டிரைவர்" உருவாகிறது. இந்த படத்தில் விஷ்வந்த் முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.தான் செய்த தவறுகளால், தனது வாழ்க்கை ஏமாற்றம் நிறைந்த ஒன்று என புலம்பி வரும் ஆட்டோ ஓட்டுநர், உலகையே மாற்ற வேண்டும் என்ற கனவு கொண்டிருக்கிறார். எனினும், இது தொடர்பாக அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இந்த நிலையில், தனது ரோல் மாடலை அவரது 17-வயதில் காண்கிறார். அப்போது அரங்கேறும் விசித்திர சம்பவம் விபரீதத்தில் முடிகிறது. இதைத் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களே இப்படத்தின் கதை.அறிமுக நாயகன் விஷ்வந்த் முன்னணி வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் தேசிய விருது வென்ற நாக விஷால...