Shadow

நம்பினால் நம்புங்கள்

முற்பிறப்பு சம்பவங்கள்

முற்பிறப்பு சம்பவங்கள்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 18வர்ணசிறி அதிகாரி என்பவர் 9.11.1957இல் “கிறிகற்ற” என்ற கிராமத்தில் பிறந்தான். இவனுக்கு நாலு வயது ஆகும் பொழுது தான்,  கடந்த பிறப்பில் “கிம்புல்கொட” என்ற கிராமத்தில் மஹிபால என்பவருக்கு மகனாயிருந்ததாகவும், அப்பிறப்பில் தனது பெயர் “ஆனந்தா மஹிபால” என்றும் கூறினான். தனது முற்பிறப்பில் நடைபெற்ற சில நகழ்ச்சிகளும், உற்றார், உறவினர், உடைமைகள் ஆகியவற்றின் விபரங்களும் அவனால் கூறப்பட்டு பிறான்சிஸ் ஸ்ரோறி என்பவரால் நுணுக்கமாக விசாரணை செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. ஆனந்தா மஹிபால 26.10.1926ல் பிறந்து 26.10.1956இல் சடுதியாக இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பதினைந்து நாட்களுக்குப் பின்னர் “கிறிகற்ற” என்ற கிராமத்தில் வர்ணசிறி பிறந்ததாகக் கூறப்பட்டது.கண்டியில் இருந்து இருபது மைல்களுக்கு அப்பால் உள்ள “உடுபோகவ” என்ற கிராமத்தில் 26.4.1959இல் பிறந்த பெண்குழந்தை “டிஸ்...
முற்பிறப்பு நினைவுகள்

முற்பிறப்பு நினைவுகள்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 17 எமது இயல்புணர்ச்சிகள் (Instincts) முற்பிறப்பு அனுபவங்களில் இருந்து பிறந்தவையே. குழந்தை பிறந்தவுடன் தாயின் பாலைத்தேடுவதும், மனிதர் ஒருவர் மீது ஒருவர் கண்டதும் காதல் கொள்வதும் ஒருவரை நாம் எவ்வித காரணமும் இல்லாமல் வெறுக்கத் தோன்றுவதும் முற்பிறப்புகளின் ‘விட்ட குறை தொட்டகுறை” என்றே கூறவேண்டும். மனிதனின் மனப்பாங்கு, குணாம்சங்கள், செயல்நாட்டம், திறமை எல்லாம் முற்பிறப்பின் தொடர்ச்சியாகவே இயங்குகின்றன. ஐந்து வயது சிறவன் மிருதங்கம் கதாகாலஷேபம் செய்வதும், முற்பிறப்புகளில் வளர்த்துக் கொண்ட திறமைகளின் தொடர்ச்சிகளே.முற்பிறப்பு அனுபவங்கள் நமது மனதின் அடி உணர்வு தளத்தில் (Sub-conscious mind) பதிந்து விடுகின்றபடியால் அவை சூட்சும நிலையில் நம்மோடு கூடவே இருந்து கொண்டு பிறப்புக்கள் தோறும் தொடர்ந்து வருகின்றன. கனவுகளில் சில சமயங்களில் நீண்ட காலத்துக்கு முந்தைய பி...
மறுபிறப்பு

மறுபிறப்பு

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 16இந்து சமயத்தின் மடியில் வளர்ந்த பௌத்த சமயமும் சமண மதமும் இந்து வேதங்களில் கூறப்பட்ட சில விடயங்களுக்கு முரண்பாடான கருத்துக்களை கொண்டவையாயினும், மறுபிறப்பையும் கர்மாவையும் தமது ஆதார தத்துவங்களாக ஏற்றுக் கொண்டவை. கிறிஸ்துவுக்கு முன் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து நதிப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டு முறைகளை ஆராயுமிடத்து, அவர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று அறியக் கிடைக்கின்றது. கிறிஸ்துவுக்கு முன் 6 ம் நூற்றாண்டில் கிரேக்க தேசத்தில் பரவியிருந்த ஆர்பியஸ் வழிபாட்டு மரபில் (Orphic Cult) மனிதன் பிறப்புகள் தோறும் ஆன்மீக உயர்வு பெற்று இறுதியில் பிறப்பு – இறப்பிலிருந்து விடுதலை பெறுகிறான் என்ற நம்பிக்கை இருந்து வந்தது. இந்து மதத்துக்கே உரியதான இந்த தத்துவம் இந்தியாவுடன் தொடர்பு வைத்திருந்த அக்காலத்து கிரேக்க வ...
கர்மவினைகள்

கர்மவினைகள்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 15ஆத்மா சுவர்க்கத்தில் தனது காரண சரீரமாகிய ஊடகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பொழுது அதற்குப் பூவுலகத்துக்குத் திரும்பவேண்டுமென்ற "தாகம்" ஏற்படுகிறது. இந்நிலை சமஸ்கிருதத்தில் "திருஷ்னா" என்றும், பாளியில் "தன்ஹா" என்றும் குறிப்பிடப்படுகிறது. மனிதன் பூரணத்துவ நிலையை எய்தும் வரை, தனது ஆசைகளை அழித்து கர்மாவில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் வரை பிறந்து இறந்து கொண்டேயிருப்பான்.ஒவ்வொரு பிறப்பும் முடிவடைந்தவுடன் நமது கர்மவினைகள் ஒரு செயலற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அவை நாம் பிறப்பெடுக்கும் வேளையில் நம்மை வந்தடைகின்றன. நமது கர்மவினைக்கேற்ப நமது குணச்சிறப்புகள், உணர்வுகள், மனப்பாங்குகள், மனோசக்திகள் எல்லாம் அமைந்து விடுகின்றன. நாம் புக வேண்டிய கர்ப்பாயசமும் நமது கர்மாவுக்கு ஏற்பவே நிர்ணயிக்கப்படுகிறது.விஞ்ஞானத்தின் அடிப்படைத் தத்துவங...
காரண சரீரம்

காரண சரீரம்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 14காரண சரீரம் என்பது அந்தராத்மாவின் கொள்கலம். மனிதனின் தன்முனைப்பு (Ego) அல்லது அஹங்காரம் இச்சரீரத்திற்குரியது.பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதனின் தனித்தன்மை உருவாகும்பொழுது மிருக உடலில் இருந்த பிரக்ஞை தனக்கென்று ஒரு காரண சரீரத்தைப் பெற்று மனிதனாகி விடுகிறது. இந்நிலையில் பரமாத்மாவின் சுடர்பொறியே காரணசரீரத்தில் புகுந்து ஜீவாத்மன் ஆகின்றது."காரண சரீரங்களின் மொத்தமே ஈஸ்வரன். ஜீவனின் காரண சரீரம் ஈஸ்வரனின் சரீரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது" - மாண்டுக்கியோபநிஷதம்.கடந்த பிறப்புகளின் அனுபவங்கள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு இச்சரீரத்தில் தேங்கி நின்று நமது அடுத்த பிறப்புக்கு காரணியாக அமைகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சி இச்சரீரத்தில் பிரதிபலிக்கின்றது. ஏனைய சரீரங்கள் ஒவ்வொன்றாக அழிந்த பின்னர், காணர சரீரம் மட்டும் பிறவிகள் தோறும் நிலைத்து நிற்கின்றது. ஒவ்வொரு...
சுவர்க்கமும், மனித மனோபாவமும்

சுவர்க்கமும், மனித மனோபாவமும்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 13மனிதனுடைய கீழ் மனசு காமலோகத்தில் சுத்தப்படுத்தப்படும் என்பதை முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அதன் பின்னர் அவனிடம் சட உலகில் இருந்த உயர்ந்த எண்ணங்களும், தன்னலமற்ற மனப்பாங்குமே சுவர்க்கத்துக்கு அவன் செல்லும்போது கூடவருகின்றன. சமய ஈடுபாடு கூடிய ஒருவருக்கு அவருக்கேற்ற சுவர்க்கம் கிட்டுகிறது. கடவுள் வணக்கத்தில் இன்பம் கண்டவருக்கு சடஉலகில் பல்வேறு தடைகள் கிலேசங்கள் சௌகரியங்கள் அவருடைய தெய்வவழிபாட்டுக்கு இடைஞ்சல்களாக இருந்திருக்கும். சுவர்க்கத்தில் எல்லாவித இடர்பாடுகளும் நீங்கப்பெற்று தெய்வ வழிபாட்டுக்கு அனுகூலமான சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அதுவே அவருக்கு சுவர்க்கமாக அமைகிறது.சடஉலகில் வாழ்ந்தபொழுது உலக நன்மைக்காக உழைத்த கல்விமான்களும் பேரறிஞர்களும் விஞ்ஞானிகளும் மேதைகளும் மேலும் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளக்கூடிய அனுகூலங்களைப் பெற்றுக்களிப்புற்றிருப்பர...
சுவர்க்கம்

சுவர்க்கம்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 12முந்தைய பதிவுகளில் குறிப்பிட்ட இரண்டாவது படிநிலையில் உள்ளவர்கள் இங்கு வாழ்ந்த பொழுது கீழ்த்தர ஆசைகள், சிற்றின்பக் கேளிக்கைகள், மிருகத்தனமான இச்சைகள் ஆகியவைகளுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்தவர்கள். இறந்த பின்னர் இந்த இன்பங்ளை அனுபவிக்க இயலாத நிலையில் அவைகளுக்காக ஏங்கி அல்லல்படுவர். இவர்கள் சிறிதளவேனும் ஆன்மீக ஈடுபாடு இல்லாது வாழ்ந்தவர்கள். மூன்றாவது நாலாவது படிநிலைகளில் உள்ளவர்கள் சிறிது முன்னேறிய ஆத்மாக்கள். இவர்களுக்கு பூவுலகுடன் தொடர்புகொள்ள நாட்டமிருந்தாலும் (Earth Stimuli) இங்குள்ளவர்கள் அவர்களை நோக்கித் தங்கள் பலம் வாய்ந்த உணர்ச்சிபூர்வமான சிந்தனை அலைகளை அனுப்பி அவர்களை தொந்தரவு செய்யாதிருந்தால் அவர்க்ள அமைதியாக இந்தப் படிநிலையைக் கடந்து விடுவார்கள்.ஐந்தாவது படிநிலை ஓரளவு பிரகாசம் பொருந்திய இன்பகரமான உணர்வுநிலை என்று கூறப்படுகிறது. தமக்கு புண்ணியம் ச...
நரகம்

நரகம்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 11பிரம்மஞானிகள் (Theosophists) சூட்சும உலகின் முற்பகுதி காமலோகம் ஒன்றும் அதைக் கடந்தபின்னரே சாந்தி நிறைந்த சூட்சும உலகின் இறுதிப்பகுதிக்கு மனிதனால் செல்ல மடியும் என்றும் கூறுகிறார்கள். காமலோகத்தையே நால்வேதங்களும் "பிதிர்லோகம்" என்றும் பிரேதலோகம் என்றும் குறிப்பிடுவதாகவே அவர்கள் கருதுகிறார்கள். காமலோகம் ஏழுபடி நிலைகளைக் கொண்டதெனக் கூறப்படுகிறது.காமலோகத்திலிருந்து விடுபட்டவுடன் மனிதன் சூட்சும உலகின் இறுதிநிலையாகிய "தேவஸ்தான்" என்னும் சூட்சும தளத்துக்குச் சென்று அங்கு சாந்தியையும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறான் என்பது அவர்கள் கருத்து. இந்துவேதங்கள் "பிரம்மலோகம்" என்றும் "ஹிரண்யலோகம்" என்றும் குறிப்பிடுவது தேவஸ்தானையே.காமலோக தத்துவத்தையெ கிரேக்கபுராண வழக்கில் பாதாளம் (Hades) என்றும் கத்தோலிக்க சமய மரபில் பாபத்தைப் போக்குமிடம் (Purgatory) என்றும் வர்ணிக...
இறந்தவரும்.. அவர் நினைவும்.. !

இறந்தவரும்.. அவர் நினைவும்.. !

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 10இயற்கை அன்புப் பிணைப்புக்கு முதலிடம் கொடுக்கின்றது. நாம் வெகுவாக நேசித்த ஒருவர் இறந்து விட்டால் சில நாட்களுக்கு இரவு நேரங்களில் நித்திரையின் போது நமது சூட்சும சரீரம் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்வதை உணரலாம். நாம் அவருடன் பேசுவது போலவும் பழகுவது போலவும் உணர்வு ஏற்படுகிறது. அவ்வுணர்வுகள் ஸ்தூல சரீரத்தில் ஓரளவு பிரதிபலிக்கின்ற போதிலும் கண் விழித்தவுடன் எல்லாமே மறந்து விடுகின்றன. பக்கத்தில் படுத்திருப்பவர்கள் இதை அவதானிக்கக் கூடியதாயிருக்கும். இறந்தவரைப் பற்றிய நினைவுடன் நாம் இருப்பதால் அடிக்கடி அவரைப் பற்றிய கனவுகள் தோன்றுவது இயல்பு. அதே நேரத்தில் இறந்தவர் நமது மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தி தனது எண்ணங்களை கனவுகள் மூலம் வெளிப்படுத்தவது சாதாரணமாக நடைபெறும் நிகழ்ச்சிகள்.இறந்தவர்களை அன்புடன் நினைப்பதும் அவர்களுக்கு மறுவுலகில் நற்கதி கிடைக்க வேண்டுமென இ...
பிரக்ஞை

பிரக்ஞை

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 9மனிதன் இறந்தவுடன் தனது உணர்வை இழந்து விடுவதில்லை. மனிதனின் தன் முனைப்பு என்கிற "நான் இருக்கிறேன்" என்ற நினைவு (பிரக்ஞை) தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது. இப்படியாகத் தொடர்கின்ற பிரக்ஞையை ஆத்மா (Soul) என்றும் ஆவி (Spirit) என்றும் தன்முனைப்பு (Ego) என்றும் உளம் (Psyche) என்றும் உயிர் என்றும் மனசு என்றும் தத்துவஞானிகள் அவரவரின் சமயத்திருமறைகளின் கண்ணோக்கில் விவரிக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் "நான் இருக்கிறேன்" என்ற பிரக்ஞை இருக்கிறது. இங்கு ஐம்புலன்களின் தனித்தனி உணர்வுகளைக் குறிப்பிடவில்லை. நாம் நம்மைப்பற்றி நினைக்கும்பொழுது உடலின் மத்தியில் உணர்வுகளை ஒன்று திரட்டி இதுவே நான் என்று எண்ணவைக்கும் அந்தக் கூர்மையான ஆழமான பிரக்ஞையே பிறவிகள் தோறும் தொடர்ந்து வருகிறது.நமது பிரக்ஞையானது ஜாக்கிரதம், சுவப்னம், சுகப்தி, துரியா என்ற நாலு நிலைகளில் வகைப்படுத...
மரணத்தின் பின்னர்

மரணத்தின் பின்னர்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 8சட உலகுக்கே உரித்தான ஆவிப்பொருளை (Etheric Matter) உதறினாலொழிய சூட்சும உலகை அடையமுடியாது. எனவே இவர்கள் சில நாட்களுக்கு ஆவிவடிவத்தை உதற முடியாமலும் தாம் நேசித்துப் பக்குவப்படுத்தி வந்த உடல் அழிந்துவிட்டபடியால் புலணுணர்வுகளைத் திருப்பிப் பெற இயலாமலும் இங்குமின்றி அங்குமின்றி இழுபறிப்பட்ட இடைநடுவே நின்று சஞ்சலப்படுகிறார்கள்.பலவிதமான ஆசைகளையும் கற்பனைகளையும் மனதில் வளர்த்து வைத்துக்கொண்டு தங்கள் உடல்களை ஆசையுடன் அலங்கரித்துப் பேணி வந்த யுவதிகளும் இளைஞர்களும் சடுதி மரணம் அடைய நேரும்பொழுது இத்தகைய பரிதாபத்துக்குரிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இறந்தவரின் உடலை எரித்துவிடுவது தான் சிறந்த முறை. ஆவி இரட்டை வடிவமானது தான் இதுவரை காலமும் எந்த உடலுடன் ஒட்டிக்கொண்டிருந்ததோ அந்த உடலின்பால் ஈர்க்கப்பட முடியாத நிலையில் அழிந்துவிடுகிறது. உடலை விட்டு உயிர் நீ...
மரணிக்கும்போதும் பின்னரும்

மரணிக்கும்போதும் பின்னரும்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 7மரணம் நிகழும்பொழுது உடலில் வேதனை எதுவுமே தெரிவதில்லை. ஆழ்ந்த துயில் மெதுமெதுவாக நம்மை அரவணைப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. நீண்டகாலமாக நோயால் அவதிப்பட்டவர்கள் கூட இறக்கும்பொழுது வேதனையற்ற நிலையிலேயே உயிர் விடுகிறார்கள். இதை இறந்தவுடன் சடலத்தின் முகத்தில் ஏற்படும் அமைதியான, சுகமான பாவத்தை நாம் அவதானிப்பதன் மூலம் உணரலாம்.பிராணன் உடலைவிட்டு வெளியேறியவுடன் ஸ்தூல சரீரத்துக்கும் ஆவி  வடிவத்துக்கும் உள்ள தொடர்பு அறுந்துவிடுகிறது. இரண்டுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த காந்தக் கயிறு (Magnetic Cord) அறுந்து, பட்டம் விடுபட்டதுபோல் ஆவி வடிவம் தன்னை ஸ்தூல சரீரத்திலிருந்து விடுவித்துக்கொள்கிறது. ஸ்தூல சரீரத்திலிருந்து விடுபட்ட உயிரானது சடலத்தின் அருகேயே மிதந்துகொண்டிருக்கும். இப்படி மிதந்துகொண்டிருக்கும் பொழுது இதை ஆவி உரு (Wraith) என்பர்.இத...
மரணம் என்றால் என்ன?

மரணம் என்றால் என்ன?

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 6மனித உடலின் முக்கிய உறுப்புகள் பழுதடைந்தவுடன் மரணம் சம்பவிக்கிறது. இருதயம், சுவாச உறுப்புகள், மூளை போன்ற பகுதிகள் செயலாற்ற இயலாத நிலை ஏற்படும் பொழுது மனித உடலில் இயக்கம் திடீரென்றோ அல்லது படிப்படியாகவோ ஸ்தம்பித்த நிலையை அடைந்து விடுகிறது. மூளைக்கு இரத்தத்தின் மூலமாக பிராணவாய்வு செல்லாது நின்றவுடன் புலனுணர்வுகள் தடைப்பட்டு மரணம் ஏற்படுகிறது. இவை தான் மரணத்துக்கு உடல் நூல் வல்லுனர்களும் மருத்துவர்களும் கூறும் காரணங்கள்.மரணம் சம்பவிப்பதற்கு இவை மட்டம் தான் காரணங்கள் அல்ல. இதயம் அடிப்பது நின்று விடுவதாலோ அல்லது சுவாசம் தடைப்பட்டு விடுவதாலோ இறப்பு ஏற்பட்டு விடுகிறது என்று கூற முடியாது. ஏனெனில் இருதயம் நின்று விட்ட சில மணி நேரங்களின் பின்னர் கூட பலருக்கு உடலில் உயிர் தரித்திருந்த சம்பவங்கள் மருத்துவ நூல்களில் பதிவுச் சான்றுகளாகக் கூறப்படுகின்றன. இருதயத்தில...
சூட்சும உலகம்

சூட்சும உலகம்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 5இறந்தவர்கள் சஞ்சரிக்கும் உலகத்தை சூட்சும உலகம் என்று கூறுவது மிகவும் பொருத்தமாயிருக்கும். சூட்சும உலகம் என்பது எமது சட உலகத்தின் செறிமானத்தை (Density) விட பலமடங்கு குறைந்த செறிமானத்தையுடைய நுண்பொருளால் (Astral Matter) உருப்பெற்ற தளம் எனக் கூறலாம். சட உலகத்தின் ஸ்தூல வடிவமாக இருக்கும் சகல பொருட்களையும் நமது கண்களால் பார்க்க முடிகிறது. திண்மமாக, திரவமாக, வாயு வடிவமாக இருப்பவைகளை நாம் காண்கிறோம் அல்லது உணர்கிறோம்.சூட்சுமமாக இருக்கும் காற்றும், மின்சாரமும், காந்தப் புலமும் நமது கண்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் அவைகளையும் நம்மால் உணர முடிகிறது. அதே நேரம் சூட்சும உலகத்தை நுண்நோக்காற்றல் உடையவர்களைத் தவிர வேறு யாராலும் பார்க்கவோ உணரவோ முடியாது.நமது சட உலகிலுள்ள திண்மமான, திரவமான, வாயுவான வடிவங்கள் பூமியின் ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்பட்டு உலகின் மேற...
முன்ஷி ஆய்வும், இறந்தவர்கள் வழிபாடும்

முன்ஷி ஆய்வும், இறந்தவர்கள் வழிபாடும்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 4இந்தியாவின் முன்னணி விடுதலைத் தலைவரும். முன்னாள் உணவு அமைச்சருமாகிய கே.எம்.முன்ஷி ஆவி உலகத் தொடர்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். "பவான் ஜேர்னல்" என்ற சஞ்சிகையில் (13-7-69) அவர் எழுதிய கட்டுரையில், தான் 1903-ம் ஆண்டு இறந்த தனது தந்தையுடனும், 1821-ல் இறந்த நெப்போலியனுடனும், இன்னும் சேர் ஒலிவர் லொட்ஸ், மீராபாய், மோதிலால் நேரு ஆகியோருடனும் தொடர்பு கொண்டதாகக் கூறியுள்ளார். 1930-ம் ஆண்டு தண்டி உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு முன்னர், திரு.முன்ஷி காஷ்மீருக்குத் தனது குடும்பத்தினருடன் போய் வரத் திட்டமிட்டார். அதற்காக ஒரு ஆவியை அழைத்து காஷ்மீருக்கு எப்போது போவது நல்லது என்று கேட்டார். ஆவி, "நீங்கள் அங்கு போக மாட்டடீர்கள், ஜெயிலுக்குப் போகப் போகிறீர்கள்" என்று கூறியதாம். ஆவி கூறியது போலவே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார்.இன்...