Shadow

தொடர்

பிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1

பிக் பாஸ்: சீசன் 2 – நாள் 1

சமூகம், தொடர்
மூடர்கூடத்து செண்ட்றாயன் பிக் பாஸ் நிகழ்ச்சியை இன்னும் நெதர்லாந்துக்காரர்கள் நடத்துவதாகவே நினைத்துக் கொண்டிருப்பார் போல! இதற்கே அவர் ஸ்டார் விஜய் டி.வி. மூலமாகக் கமல் ஹாசனைச் சந்தித்து விட்டு தான் பிக் பாஸிற்குள் வந்தார். எனினும், மற்ற அனைவரும் தமிழில் பேசும்பொழுது, கேமிரா முன் பிக் பாஸிடம்ஆங்கிலம் மட்டுமே பேசுகிறார். ஆனால் அவர் நாமினேட் செய்யும் பொழுது, ‘மமதி எனக்குப் புரியாத மாதிரி இங்கிலீஷ் கலந்து பேசுறாங்க; ரம்யாவோட ஹேர்ஸ்டைல், பாடி லேங்வேஜ் எல்லாம் இங்கிலீஷ்க்காரங்க மாதிரி இருக்குது’ எனத் தெள்ளத்தெளிவாகக் காரணத்தைத் தமிழில் அடுக்குகிறார். இதில் ஆகப் பெரிய நகைச்சுவை என்னவென்றால், வீட்டின் முதல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனனி ஐயர், வைஷ்ணவியை நாமினேட் செய்து சொன்ன காரணம், ‘அவங்க நிறைய இங்கிலீஷ்ல பேசுறாங்க’ என்பது. முதல் நாளிலேயே, யார்க்கு யாரைப் பிடிக்கவில்லை என லேசாகக் கோ...
பிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்

பிக் பாஸ்: சீசன் 2 – தொடக்கம்

சமூகம், தொடர்
பிக்பாஸ் சீசன் 2-இல் கலந்து கொண்ட பெரும்பாலானவர்கள், ‘ஏன் பிக்பாஸிற்கு வருகிறேன்?’ என்பதற்குச் சொன்ன காரணம், “பிக் பாஸில் கலந்து கொண்டவர்கள் வெளியில் வந்ததும் சொல்வது, தன்னுள் மாற்றம் நிகழ்கிறது என்கிறார்கள். இந்த நூறு நாளில் அப்படியொரு மாற்றத்தை எதிர்பார்த்துக் கலந்து கொள்கிறேன்” என்றார்கள். சீசன் 1-இல் கலந்து கொண்டவர்களில், அப்படி யாருக்கு என்ன மாற்றம் நிகழ்ந்தது என நமக்குக் கண் கூடாகத் தெரியாது. அவர்களாக, ‘இன்னது’ எனச் சொல்லும் வரை. அப்படிச் சொல்வதும் உண்மைக்கு எந்தளவுக்கு நெருக்கம் என்பதும் அளக்க இயலாது. ஆனால், பிக் பாஸ், முதல் சீசனுக்கும் இரண்டாம் சீசனுக்கும் இடையில் ஒரு பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்த மாற்றத்தின் பெயர் கமல் ஹாசன். மக்கள் நீதி மய்யத்தின் தொடக்கத்திற்கு முன், பின் என இரண்டு சீசன்களையும் முறையே கொள்ளலாம். பிக் பாஸ் 1-இலே கூட கமல் ஹாசன் அதை ஒரு ப்ளாட்ஃபார்மாகப் பயன...
அவள் பெயர் அபிராமி – 2

அவள் பெயர் அபிராமி – 2

கதை, தொடர்
முடிவு செய்து வைத்தபடியே கதிரேசு வீட்டிற்குள் வந்ததும் வராததுமாய் ஆரம்பித்து வைத்தாள் ராமாயி. "எலே கதிரேசு! அகிலாண்டேஸ்வரிக்கு வயசாயிகிட்டே போகுது! சீக்கிரமா ஒரு கண்ணாலத்தைப் பண்ணிப் பாக்கோணும்னு இல்லாம இப்படிக் கிணத்துல போட்ட கல்லு கணக்கா இருந்தா எப்படி?" தாழியில் இருந்த தண்ணீரை இரு கைகளால் அள்ளி முகம் கழுவிக் கொண்டிருந்த கதிரேசு நிமிர்ந்து ராமாயியை ஒரு கணம் கூர்ந்து நோக்கினான். "ஆத்தா! இப்ப அவளுக்கு என்ன வயசாயிட்டு! இப்பதானே பன்னெண்டாப்புப் போறா! கண்ணால பேச்செடுத்தா கலெக்ட்டர் வரைக்கும் வந்து நிப்பானுக! கம்பிதான் எண்ணனும்!" "போடா! போக்கத்த பயலுவ! அவனுகளுக்கென்ன தெரியும் பொம்பள புள்ளய பெத்து வெச்சிருக்குறவனோட கஷ்டம்! நம்ம பொண்ணுக்கு எதையெதை எப்ப பண்ணனும்னு நமக்குத் தெரியாதா?" "அப்பாத்தா! சித்தப்பூவை உள்ள தள்ளாம விட மாட்டே போல" கேலியாகச் சிரித்துக் கொண்டே கேட்டான் சுப்ரமணி. வெளித் தி...
அவள் பெயர் அபிராமி – 1

அவள் பெயர் அபிராமி – 1

கதை, தொடர்
"ஏய் அகிலாண்டேஸ்வரீ.. இன்னும் என்னடீ பண்றவ, நேரங்காலமா இஸ்கூலுக்குப் போய்ச்சேர வேண்டாமா? ஊஞ்சிநேதக்காரி வந்துட்டா பாரு.." வெளியில் இருந்து கத்திய அப்பாத்தாவின் குரலைப் பொருட்படுத்தாது தனது முகத்தில் அப்பிய அதிகப்படியான பவுடரை ரசம் தேய்ந்த கண்ணாடியில் பார்த்துச் சரி செய்து கொண்டிருந்தாள். மடித்து ரிப்பன் கட்டியிருந்த ரெட்டை ஜடைகளை இணைக்கும் விதமாய்க் குண்டுமல்லிச் சரமொன்றைத் தொடுத்திருந்தாள்.  அகிலாண்டேஸ்வரி என்றழைக்கப்பட்ட அகிலா அந்த வீட்டின் ஒரே பெண் வாரிசு. பெரியப்பா கண்ணைய்யனுக்கு இரண்டு ஆண் வாரிசுகள். சித்தப்பா செல்வராசுவிற்கு மூன்று ஆண் வாரிசுகள். கண்ணைய்யனுக்கும் பெண் வாரிசு வேண்டுமென்ற ஆசை இருந்தாலும் இரண்டோடு நிறுத்திக் கொண்டார். செல்வராசுவின் விடா முயற்சியும் பலனளிக்கவில்லை. பதினாறு வயசு அகிலாவிற்கு இரண்டரை வயதில் தம்பி. பெரியப்பாவிற்கும் சித்தப்பாவிற்கும் அகிலா அப்படியொரு செல்...
ஜெயகாந்தன்

ஜெயகாந்தன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு தவிர்க்க முடியாத ஆளுமை ஜெயகாந்தன். 1950 - 60 கால கட்டத்தில் தமிழில் தோன்றிய இரண்டு மிகப்பெரிய எழுத்தாளர்களில் ஒருவர்.இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு ஜெயகாந்தன் பற்றிய அறிமுகம் அனேகமாகத் தேவைப்படாது என்றுதான் தோன்றுகிறது.  பாரதியாரையும் புதுமைப்பித்தனையும் ஆதர்சமாகக் கொண்டு ஐம்பதுகளில் ஆரம்பத்திலிருந்து பல எழுத்தாளர்கள் தோன்றினார்கள். ஜெயகாந்தனும் அப்படித்தான்.ஒரு கால கட்டத்தில் ஜெய காந்தனை ஆதர்சமாகக் கொண்டு எழுதத் தலைப் பட்டவர்களும் உண்டு. ஜெய காந்தனின் இயற்பெயர் டி.முருகேசன். தண்டபாணிப் பிள்ளை முருகேசன்.1934 ல் கடலூரை அடுத்த மஞ்சக் குப்பம் என்கிற ஊரில் பிறந்தவர். படிப்பில் அதிக நாட்டமில்லாமல் சிறு வயதிலேயே சென்னை வந்து சேர்ந்தார்.சென்னையில் அடித்தட்டு மக்களிடையே வாழவும்,அவர்களுடைய வாழ்க்கையைத் தானும் அனுபவிக்க வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது...
ஜகதலப்ரதாபன் (1944)

ஜகதலப்ரதாபன் (1944)

சினிமா, திரை விமர்சனம், தொடர்
(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா, டி.பாலசுப்ரமணியம், பி.பி.ரங்காச்சாரி, எம்.எஸ்.சரோஜினி, யு.ஆர்.ஜீவரத்தினம், டி.ஏ.ஜெயலட்சுமி, எஸ்.வரலட்சுமி, சாரதாம்பாள்)ஜகதலப்ரதாபன் என்றால் அனைத்துத் துறைகளிலும் கை தேர்ந்தவன் – மிகுந்த திறமைசாலி எனப் பொருள் கொள்ளலாம். இப்போது ‘சகலகலா வல்லவன்’ என்கிறோமே – அதைப்போல. நிஜ வாழ்க்கையிலும் அப்படி ஒரு ஜகதலப்ரதாபன் இருந்தார். அவர் தான் பி.யு.சின்னப்பா. தமிழ்த் திரையில் ஆரம்பகாலங்களில் நடிப்பு என்பது, திரையில் தோன்றிப் பாடுவதுடன், பிராமண மற்றும் மணிப்பிரவாள நடையில் ஒரு மாதிரி இழுத்து இழுத்துப் பேசுவதாகத் தானிருந்தது. பாகவதரின் பல படங்களில் இதைப் பார்க்க முடியும். இதே மாதிரி தான் அனைவரும் பேசியும், பாடியும், நடித்தும் வந்தார்கள். அவர்கள் மத்தியில் அருமையாகப் பாடுவதுடன், நடிப்பாற்றலிலும் வல்லவராக விளங்கிய ஒரே நடிகர் பி.யு.சின்னப்பா. எனவே தமிழ்...
ஹரிதாஸ் (1944)

ஹரிதாஸ் (1944)

சினிமா, திரை விமர்சனம், தொடர்
(முக்கிய நடிகர்கள்: எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், என்.சி.வசந்த கோகிலம், புளிமூட்டை ராமசாமி)‘ஹரிதாஸ்’ திரைப்படத்திற்கு தமிழ்த் திரையுலகில் ஒரு தனிப் பெருமையும், நீங்காத புகழும் உண்டு. இப்படத்தின் கதை ‘பக்த விஜயம்’ என்கிற நூலை ஆதாரமாகக் கொண்டது. 16-10-1944 இல் வெளிவந்த இத்திரைப்படம் சென்னை பிராட்வே தியேட்டரில் அந்த வருட தீபாவளி உட்பட 3 தீபாவளிகளைக் கொண்டாடி, 110 வாரங்கள் ஓடி ஒரு மாபெரும் சரித்திரம் படைத்தது. ராயல் டாக்கி டிஸ்ட்ரிபுயூட்டர்ஸ் தயாரிப்பான ‘ஹரிதாஸ்’ இரண்டாவது உலகப்போர் மும்மரமாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில் தயாரிக்கப்பட்டு வெளிவந்ததால், அப்போதைய அரசுக் கட்டுப்பாட்டின் காரணமாக நீளம் குறைந்த படமாகத் தயாரிக்கப்பட்டது. மொத்த நீளம் 10995 அடிகள் தாம். இது அக்கால நடைமுறைப்படி மிகச் சிறிய படம். இந்த ராயல் டாக்கி டிஸ்ட்ரிபுயூட்ட...
சங்கு சுப்ரமணியம்

சங்கு சுப்ரமணியம்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. "சுதந்திரச்சங்கு" என்றொரு பத்திரிகை அக்காலத்தில் பிரபலமாக வெளிவந்து கொண்டிருந்தது. இந்தியர் அடிமைப்பட்டுக் கிடந்த காலம். சுதந்திரப் போராட்டங்கள் ஆங்கிலேய அரசுக்கு எதிராகத் தீவிரமாக நடத்தப்பட்டு வந்தது. மக்களின் சுதந்திர வேட்கையை, அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் தூண்டிவிட்ட பெருமை பல பத்திரிகைகளையே சாரும். இவைகள் தாம் இங்கு சுதந்திரப் போராட்டத்தை முன் எடுத்துச் சென்றன. அம்மாதிரியான பத்திரிகைகள் அக்கால ரூபாயின் மதிப்பிற்கேற்ப ஓரணா, இரண்டணா என்று விலை வைக்கப்பட்டு விற்கப்பட்டு வந்த கால கட்டத்தில், காலணாவுக்கு ஒரு பத்திரிகை வெளிவந்து, லட்சம் பிரதிகளுக்கு மேல் விற்பனையாயிற்று. அப்பத்திரிகைதான் "சுதந்திரச்சங்கு". இதன் தலையங்கம் படிக்க மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். சுதந்திரச்சங்கின் ஆசிரியராக இருந்தவர் சுப்ரமணியம் என்பவர். கம்பர் பிறந்த தேரழுந்தூரில் 1905இல் பொருள...
சிவகவி (1943)

சிவகவி (1943)

சினிமா, திரை விமர்சனம், தொடர்
(முக்கிய நடிகர்கள் : எம்.கே.தியாகராஜ பாகவதர்; எஸ்.ஜெயலட்சுமி; என்.எஸ்.கிருஷ்ணன்; டி.ஏ.மதுரம்; டி.ஆர்.ராஜகுமாரி; டி.பாலசுப்ரமணியம்; செருகளத்தூர் சாமா)பொய்யாமொழிப் புலவரைத் தான் ‘சிவகவி’ என்பார்கள். நாற்பத்து மூன்றில் வெளிவந்த ‘சிவகவி’ படத்தை, 1948 இல் ஒரு சிவராத்திரி இரவில், சிவராத்திரி கொண்டாடிய சில சிறுவர்களுடன் என்னையும் சேர்த்து படம் பார்ப்பதற்கு தியேட்டர் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார் எங்கள் தெருவில் வசித்த பெரியவர் ஒருவர். வெகு சுவாரஸ்யமாகப் படம் பார்த்த நினைவு. பாடல்கள் பற்றிய விசேஷ அறிவோ, புரிதலோ ஏற்படாத காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் குழுவினரின் நகைச்சுவைக் காட்சிகளையே பெரிதும் விரும்பி, ரசித்துப் பார்க்க முடிந்தது. என்றாலும், மிகவும் இனிமையான பாடல்கள் தான் இப்படத்தில் சிறப்பாகச் சொல்லப்பட வேண்டிய அம்சம். சிறுவயதில் மனதில் பதியும் பல சம்பவங்கள் எளிதில் நம்மை விட்டுப் போய்விடுவதில...
தி. ஜானகிராமன்

தி. ஜானகிராமன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. நவீனத்தமிழ் இலக்கியப் பரப்பில் தி. ஜானகிராமனின் இடம் மிகவும் முக்கியமானது. அபூர்வமான சொற்கட்டுகளும், அலாதியான வடிவமும், தஞ்சைத்தமிழும் அதன் அழகுகளும் இவரின் நாவல்கள், சிறுகதைகளில் பின்னிப் பிணைந்து காணப்படும். தஞ்சைப் பிரதேசத்தைச் சேர்ந்த மொழியையும், வழக்குகளையும் உள்ளடக்கியதுதான் இவரது கதைகள் என்றாலும், அவைகள் பிரதேச எல்லைகளையும் தாண்டி தீவிர இலக்கியவாசகன், ஜனரஞ்சக வாசகர்கள் என அனைவரது மனதையும் கவ்வி இழுத்தது என்பது மிகையல்ல. ஜானகிராமன் தனது இளம் வயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டார் எனத் தோன்றுகிறது. தனது பதினைந்தாவது வயதிலேயே கதைகள் எழுதியிருக்கிறார். தி.ஜானகிராமன் தஞ்சை மாவட்டத்தைச் சார்ந்த தேவங்குடி என்னும் ஊரில் 1921இல் பிறந்தார். ஆரம்ப காலங்களில் சங்கீதப் பயிற்சியும் மேற்கொண்டிருக்கிறார். இவருடைய பல கதைகளில் சங்கீதம் பற்றிய பல அருமையான தகவல்கள் விரவிக் கிடப்பதைக் காண, ...
மங்கம்மா சபதம் (1943)

மங்கம்மா சபதம் (1943)

சினிமா, திரை விமர்சனம், தொடர்
(முக்கிய நடிகர்கள்: ரஞ்சன், வசுந்தரா தேவி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், புளி மூட்டை ராமசாமி, குளத்து மணி)டைரக்டர் கே.சுப்ரமணியம் அவர்களின் மோஷன் பிக்சர்ஸ் ஸ்டுடியோ ஏலத்திற்கு வந்த போது அதை ஏலத்தில் எடுத்தவர் எஸ்.எஸ்.வாசன். தான் வாங்கிய நிறுவனத்திற்கு ‘ஜெமினி பிக்சர்ஸ் சர்க்யூட்’ எனப் பெயர் சூட்டினார். இங்கிருந்து முதலில் தயாரான படம் ‘மதன காமராஜன்’. எழுத்தாளரும் இலக்கியவாதியுமான பி.எஸ்.ராமையா கதை, வசனம். இது ஜெமினியின் சொந்தத் தயாரிப்பல்ல. அமிர்தம் டாக்கீஸ் என்கிற நிறுவனத்திற்காக ஜெமினி தயாரித்துக் கொடுத்த படம். ஜெமினியின் முத்திரையில் முதன் முதல் தயாரிக்கப்பட்டு வெளிவந்த படம் நந்தனார். 20.09.1942 இல் வெளியான இப்படத்தில் நந்தனாராக எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடி, நடித்திருந்தார். அபரிதமான வெற்றியை அடைந்த இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியைப் பெற்று ஒரு சிறந்த இசைச்சித்திர...
அகிலன்

அகிலன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. கல்கி கிருஷ்ணமூர்த்தி அடுத்தபடியாக வெகுஜன வாசகர்களின் அமோக ஆதரவைப் பெற்றிருந்த எழுத்தாளர் அகிலன். இவரது இயற்பெயர் அகிலாண்டம். புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையிலுள்ள பெருங்களுர் இவர் பிறந்த ஊர். 1922 ஆம் ஆண்டு ஜுன் மாதம் பிறந்தார். சொத்து சம்பந்தமான குடும்ப வழக்கு ஒன்றன் தொடர்பாக இவரது தந்தை கரூருக்கு இடம் பெயர வேண்டியதாயிற்று. எனவே இவரது ஆரம்பக் கல்வி கரூரில் தொடங்கியது. ஆறாம் வகுப்பிலிருந்து தான் கல்வியை புதுக்கோட்டை மகாராஜா கிளைக் கல்லூரியிலும், உயர் நிலைக் கல்வியை மகாராஜா கல்லூரியிலும் தொடர்ந்தார். குடும்பம் அப்படியொன்றும் அப்போது வசதியாக இருக்கவில்லை. மேல்நிலை பள்ளிப்பருவத்தில் திரு.வி.க.வின் நூல்கள் இவரைப் பெரிதும் கவர்ந்திருக்கின்றன. பழம் பெரும் இலக்கியங்களில் இவருக்கு இருந்த ஆர்வம் பின்னாட்களில் வரலாற்று நாவல் எழுதத் தூண்டுதலாக இருந்தது. அதேபோல் பாரத...
அரு.ராமநாதன்

அரு.ராமநாதன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. ‘காதல்' புனிதமானது, பவித்திரமானது என்றெல்லாம் திரைப்படங்களில் வசனம் பேசுவார்கள் அறிவோம். எடுக்கப்படும் படங்களில் 99 விழுக்காடும் காதலை மையமாக வைத்தே திரைக்கதை அமைக்கப்படும். இது ஒரு நியதிபோல் காலம் காலமாக நடந்து வருகிறது. 'காதல்' இல்லாமல் உலகில் வேறு எதுவுமே கிடையாது என்றும் நிலை நிறுத்தியாகிவிட்டது. எனவே 'காதல்' வாழ்க. 'காதல்' என்கிற வார்த்தையை ஒரு கெட்ட வார்த்தையைப்போல் கருதிய காலமும் ஒன்று உண்டு. காதல் வயப்படுவார்கள், ஆனால் காதல் என்கிற வார்த்தையைப் பிரயோகித்தால் அவனை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். இக்கால கட்டத்தில் மிகவும் துணிச்சலுடன் 'காதல்' என்கிற பெயரில் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமானால், ஆரம்பித்தவருக்கு எந்த அளவு துணிவு இருந்திருக்கவேண்டும்? அப்படித் துணிந்தவர்தான் அரு.ராமநாதன். சிவகங்கை மாவட்டத்தில் கண்டனூர் எனும் ஒரு ஊர் இருக்கிறது. இந்த ஊரில் 1924 ஆம் ஆண்ட...
கண்ணகி (1942)

கண்ணகி (1942)

சினிமா, தொடர்
(முக்கிய நடிகர்கள்: பி.யு.சின்னப்பா, பி.கண்ணாம்பா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், டி.பாலசுப்ரமணியம், யு.ஆர்.ஜீவரத்தினம்)ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான ‘கண்ணகி’ 1942 இன் ஆகப் பெரிய வெற்றிச் சித்திரம். ஜூபிடர் பிக்சர்ஸ் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமாக விளங்கிய சிறந்த படத்தயாரிப்பு நிலையங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தின் முந்தைய படங்கள் ‘சந்திரகாந்தா (1936)’, மற்றும் எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி அம்மாளின் கதையான ‘அனாதைப்பெண் (1938)’. இப்படங்களைத் தொடர்ந்து வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த படம் ‘கண்ணகி’. சிலப்பதிகாரம் தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று. தமிழ் மொழிக்கு இக்காப்பியத்தின் வாயிலாகப் பெருமையைச் சேர்ந்தவர் இளங்கோவடிகள். சிலப்பதிகாரப் பாத்திரங்களான கோவலன், கண்ணகி, மாதவி போன்றோர் பின்னிப் பிணைந்த மகத்தான கதையம்சம் கொண்ட ‘கண்ணகி’ கதையை ஜூபிடரின் கண்ணகி வெளிவருவதற்கு முன்பே தயாரித...
விந்தன்

விந்தன்

சினிமா, தொடர்
மாயலோகத்தில்.. விந்தனின் இயற்பெயர் கோவிந்தன். இவர் 1916இல் செங்கல்பட்டு மாவட்டம், நாவலூர் என்கிற சிறிய ஊரில் பிறந்தார். வறுமையான குடும்பச் சூழ்நிலை. நடுநிலைப் பள்ளியைக் கூடத் தாண்டாத பருவத்தில், பிழைப்புக்காகத் தனது தந்தையுடன் சிறியச் சிறிய வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சில காலம் சென்ற பின், இரவுப் பள்ளியிலும், தொடர்ந்து ஓவியக் கல்லூரியிலும் சேர்ந்து ஓவியமும் கற்கத் தலைப்பட்டார். ஆனால் வறுமை அவரைத் துரத்தியது. பாதியிலேயே விட்டுவிடும்படியாகவும் ஆகிவிட்டது. ஓர் அச்சகத்தில் அச்சுக் கோர்க்கும் தொழிலாளியாகச் சேர்ந்தார். தொழிலை இங்கு நன்றாகக் கற்றுக் கொண்டவருக்கு சில காலத்திற்குப் பிறகு ஆனந்த விகடன் அச்சகத்தில்அச்சுக் கோர்க்கும் வேலை கிடைத்தது. விகடனில் வேலை செய்து வந்த காலத்தில், அவர்களுக்குத் தெரியாமல் சில கதைகளை எழுதி, அவைகள் 'சுதேசமித்திரன்' பத்திரிகையில் வெளிவந்திருக்கிறத...