Shadow

நெஞ்சமெல்லாம் பல வண்ணம் – மகேஷ் பாபுவும் வெங்கடேஷும்

Mahesh-babu-and-Venkatesh

தெலுங்கில், ‘சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு’ என்ற படம் வசூலை அள்ளிக் குவித்தது. ஆந்திரத் திரையுலகினரே அதிசயித்த படமது. அப்படத்தைத் தமிழில், ‘நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’ என மொழிமாற்றம் செய்து மொயின் பேக் வழங்க, ரோல்ஸ் பிரைட் மீடியா ப்ரைவேட் லிமிடெட் படநிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி , சமந்தா நடிக்கிறார்கள். மற்றும் பிரகாஷ்ராஜ், ராவ்ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

>> இசை – மிக்கி ஜே.மேயர்
>> பாடல் – அமான்ராஜா, சுதந்திரதாஸ், ஏக்நாத், உமாசுப்பிரமணியம், கார்கோ அருண்பாரதி, ராஜராஜா, ரா.சங்கர், பா.சபிக், தமிழ்ப்ரியன் நசிர்.
>> படத்தொகுப்பு – நிவேதா ஸ்டுடியோஸ் செல்வம்
>> தயாரிப்பு – ரோல்ஸ் பிரைட் மீடியா(பி.லிட் ) மெஹபு பாஷா
>> இயக்கம் – ஸ்ரீகாந்த்

இவர் ஏற்கனவே புதுமுகங்களை வைத்து இயக்கிய, ‘கொத்த பங்காரு லோகம்’ எனும் படம் அமோக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்திற்கு வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் A.R.K.ராஜராஜா.

படம் பற்றிப் பகிர்ந்து கொண்ட A.R.K.ராஜராஜா, “தெலுங்கு சினிமா என்றாலே அடி தடி, ஸ்பீட் பாட்டு மசாலாத்தனமான திரைக்கதை மட்டும் தான் என்கிற மாயையை இந்தப் படம் தகர்த்தெறிந்துள்ளது.

முழுக்க முழுக்கக் குடும்ப உறவுகளை மையமாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. மகேஷ்பாபு, வெங்கடேஷ் அண்ணன் தம்பிகளாக நடித்துள்ளனர். அது அவரது ரசிகர்கள் ரசிக்கும் வண்ணமிருக்கும். தமிழில் செல்வந்தன் படத்திற்குப் பிறகு மகேஷ்பாபுவிற்குப் பெயர் சொல்லும் படமாக இந்த ‘நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’ இருக்கும். இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது” என்றார்.