Shadow

Tag: அனிகா

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் விமர்சனம்

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
தனுஷின் இயக்கத்தில் வந்திருக்கும் மூன்றாவது படம். நிலாவைக் காதலிக்கிறான் பிரபு. நிலாவின் தந்தை கருணாகரனது கடைசி நாட்கள், அவர் ஆசைப்பட்டப்படி அமையவேண்டுமென நிலாவை விட்டுப் பிரிகிறான் பிரபு. பிரபு ஏன் பிரிந்தான் எனத் தெரியாமல் கோபம் கொள்ளும் நிலா, அவனுக்குத் தன் கல்யாண அழைப்பிதழை அனுப்பி வைக்கிறாள். கோவாவில் நடக்கும் அத்திருமணத்திற்குச் செல்கிறான் பிரபு. அங்கே என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை. வழக்கமான காதல் கதை என தலைப்பிற்குக் கீழாகவே உபதலைப்பு போட்டுவிடுகின்றனர். முதற்பாதியும் அப்படியே பயணிக்கிறது. இரண்டாம் பாதியில், கோவா சென்றடைந்த பின், படத்தின் கலகலப்பு அதிகமாகிறது. படத்தின் தொடக்கம் முதலே மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் படத்தின் கலகலப்பிற்கு உதவியிருந்தாலும், இரண்டாம் பாதியில் அதகளம் புரிகிறார். குடி, பார்ட்டி, காதல் என்பதைத் தாண்டி படத்தின் கதாபாத்திரங்கள் எதையுமே யோசிப்பதில்லை. ...
மிருதன் விமர்சனம்

மிருதன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
மிருதம் - பிணம்; மிருதன் - பிணமாய் வாழ்பவன் (ஜோம்பி) ஒரு வைரஸால் மனிதர்கள் மிருதர்களாக உருமாறுகின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் கதை. அமைச்சராக வரும் R.N.R. மனோகர், அவரது அறிமுகக் காட்சியைத் மற்ற காட்சிகளில் எல்லாம் அதகளப்படுத்துகிறார். செக் போஸ்ட்டில் அவர் கெத்து காட்டி விட்டு, ஜெயம் ரவியைப் பார்த்து, "இதுக்குத்தான் தம்பி அரசியலில் கொஞ்சம் டச் வேணுங்கிறது" எனும் பொழுது திரையரங்கம் சிரிப்பொலியால் அதிர்கிறது. அதே போல், காளி வெங்கட்டின் சுடும் திறமைக்கும் சிரிப்பொலி எழுந்து அடங்குகிறது. ட்ராஃபிக் போலிஸ் கார்த்தியாக ஜெயம் ரவி ஜம்மென்று இருக்கிறார். வழக்கமான தமிழ் சினிமா அண்ணன் தான் என்றாலும், தங்கை அனிகாவின் (என்னை அறிந்தாலில் த்ரிஷாவின் மகள்) க்யூட்னெஸால் அதுவும் ரசிக்கும்படி இருக்கிறது. மிருதர்கள் சுடப்படும் பொழுது, அவர்கள் வெறும் நோயாளிகள் என்று பரிதாபப்படும் மருத்துவர் ரேனுகா, க்ளைமே...
என்னை அறிந்தால்… விமர்சனம்

என்னை அறிந்தால்… விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அஜித்தும், கெளதம் வாசுதேவ் மேனனும் இணைகிறார்கள் என்றால் ரசிகர்களின் எதிர்பார்ப்பினைக் கேட்கவும் வேண்டுமா? காதலியின் மரணம் சத்யதேவ் ஐ.பி.எஸ்.-ஐ மிகவும் பாதிக்கிறது. அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் கதை. அஜித்தின் முகத்தையும், நடையையும் எந்தக் கோணத்தில் காட்டினால் திரையில் நன்றாக இருக்குமென்ற புரிதல், அவரை வைத்து இயக்கும் இயக்குநர்களுக்கு வந்துவிட்டதெனத் தெரிகிறது. எல்லாம் வெங்கட் பிரபு வகுத்துக் கொடுத்த பாதை. மங்காத்தாக்கு பின்னான அஜித் திரையில் அங்குமிங்கும் நடந்தாலே போதுமென்பது கதையற்ற வீரம் படத்தின் திரையரங்கக் கொண்டாட்டத்தில் நிரூபணமாகிவிட்டது. சாதாரணமாகவே தன் படத்தில் நடிக்கும் நாயகர்களை பளிச்சென மாற்றிவிடுவார் கெளதம். அஜித் கிடைத்தால்? மீசையை கச்சிதமாக வெட்டியிருக்கும் இளமையான அஜித், தாடி வைத்த அஜித், தலை நரைத்த அஜித் என விதவிதமாய் அஜித்தை அழகாக திரையில் காட்டியுள்ளார். காக்...