Shadow

Tag: இறந்த பின் எங்கு செல்கிறோம்?

பிரதிபலிப்புகளும் புறத்தோற்றங்களும்

பிரதிபலிப்புகளும் புறத்தோற்றங்களும்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 26நம்மைச் சுற்றியுள்ள இவ்வுலகத்தை சிலர் துன்பங்களும் சிக்கல்களும் நிறைந்ததெனக் கூறுவர். ஆனால் நலமும் கேடும் கலந்து காணப்படுவதே இவ்வுலகம் என்ற எண்ணம் பொதுவாக எல்லோருக்கும் உண்டு. உண்மை யாதெனில், நாம் வெளியுலகில் காணும் கேடுகள் எல்லாம் நமது எண்ண விருத்திகளின் பிரதிபலிப்புகளும் புறத்தோற்றங்களுமே. புண்பட்ட மனமுள்ளவர்களுக்கு கேடுகள் வரினும் அவை கெடுதி நிறைந்தவையாகத் தென்படுவதில்லை.சிறு நேரத்து இன்பத்தை அடைவதற்கு பல துன்பங்களைத் தாண்டிச் செல்ல வேண்டியிருக்கிறது. அவை இருக்குமளவுக்கு மனிதனுக்கு துன்பமும் இருக்கும். ஆசை அறுபடுமளவுக்கு அமைதி உண்டாகிறது. இந்திரியங்களை வெல்லாத வரை, மனதை அடக்கி ஆள இயலாதவரை, துன்பங்கள் குறைவதில்லை.நாம் நம்மைப் பார்த்துக் கொள்வதெல்லாம் அழிந்து போகும் உடலின் கோணத்திலிருந்தேயொழிய, அழிவற்ற ஆத்மாவின் நோக்கில் அல்ல. ஆகையினால் தான் ...
சிரார்த்த கிரியைகள்

சிரார்த்த கிரியைகள்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 25இந்து வேதங்கள், சிரார்த்த கிரியைகள் மூதாதையர்களின் ஆவிகளின் ஷேமத்துக்காக செய்யப்படுவதையும் அவைகளுக்கு உணவு பானம் முதலியன படைக்கப்படுவதையும் விவரிக்கின்றன. இந்த வழக்கங்கள் இந்துக்கள் மத்தியில் மாத்திரமன்றி, கிரேக்கர்கள், யூதர்கள், ஆஃப்ரிக்க ஆதிவாசிகள், பிரித்தானியர்கள் போன்ற வேறு பல இனமக்கள் மத்தியிலும் காணப்பட்டன. ஆங்கிலத்தில் இவ்வழக்கத்தை Libation என்று கூறுகிறார்கள்.இறந்தவரை நினைத்து அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று பிரார்த்திப்பதும் அவருடைய நினைவாக ஏழைகளுக்குத் தானம் வழங்குவது போன்ற புண்ணிய கருமங்களைச் செய்வதும் இறந்தவருக்கு நன்மை பயக்கும் காரியங்களாகும். இறந்தவர் புதிய பிறப்பொன்றை எடுத்துவிட்ட பின்னரும் அவருடைய மனோசரீரத்தில் சிரார்த்தக் கிரியைகளால் நல்விளைவுகள் ஏற்படுகின்றன. மனிதனின் மனதில் இருந்து எழும் சிந்தனை அலைகள் மிகவும் சக்தி வ...
ஆவிகளின் தொடர்பு

ஆவிகளின் தொடர்பு

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 24ஆவிகளுடன் பூவுலக மனிதர்களால் தொடர்பு வைக்கமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் அழைக்கும் ஆவிதான் உண்மையில் எங்களுடன் வந்து பேசுகிறது என்பதும், நமது கேள்விகளுக்கு அவைகள் தரும் விடைகள் உண்மையானவை தான் என்பதும் கேள்விக்குறிகளாகவே இருக்கின்றன.மேற்கு நாடுகளில் தான் ஆவிகளுடன் தொடர்பு கொள்பவர்கள் கூடுதலாகக் காணப்படுகிறார்கள். இதறக்கென்றே குழுக்கள் அமைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். “மீடியம்” களாக செயல்படுவதை தொழிலாக ஏற்றுள்ளவர்களும் இருக்கிறார்கள்.“மீடியம்” ஆக செயல்படுபவரின் மனமும் உடலும் ஆவியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் அவர் தன் வயமிழந்த நிலையை அடைந்து விடுகிறார். ஆவியானது அவருடைய உடலின் சக்தியையும் மனோசக்தியையும் தனதாக்கிக் கொண்டு அவர் மூலமாக பேசுகின்றது. சில சமயங்களில் அவருடைய உடலிலிருந்து “எக்டோபிளசம்” (ectoplasm) என்ற ஊனம்...
தேவதைகளும், பேய் பிசாசுகளும்

தேவதைகளும், பேய் பிசாசுகளும்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 23டாக்டர் ஆப்ரஹம் கோவூர் போன்ற பகுத்தறிவுவாதிகள் எக்காலத்திலும் எல்லா நாடுகளிலும் இருந்திருக்கிறார்கள். எவ்வளவுதான் இப்பகுத்தறிவுவாதிகள் தெய்வங்கள், தேவதைகள்,பேய்கள், பிசாசுகள், ஆவிகள் எல்லாம் வெறும் கற்பனைகள் என்று அடித்துக் கூறினாலும், அவர்களுடைய விவாதங்களை ஏற்றுக் கொண்டவர்கள் வெகுசிலரே. மக்கள் இவைகளில் கொண்டுள்ள நம்பிக்கைகள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாகக் கைவிடப்படாமல் தொடர்ந்து வந்திருக்கின்றன.கனிப்பொருளிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து மனித உருவை எய்திய மனிதன் வேறுவகைகளிலும் பரிணமித்து இயற்கை ஆவி உருக்களாக (Nature Spirits) தோற்றம் பெற்ற உயிரினங்களும் இருக்கின்றன. இயற்கையின் மூலப்பொருட்களை இயக்குவதற்கென்றே ஆவி உருக்கள் இயற்கையின் திட்டத்தில் அமைந்துள்ளன.ஆரணங்குகள் (Fairies), கந்தர்வர்கள், நிலத்தெய்வம், நீர்த்தெய்வம், அனல்தெய்வம் ஆகியவைகளைப் பற...
தற்கொலையும், அதன் விளைவுகளும்

தற்கொலையும், அதன் விளைவுகளும்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 22கொலை செய்த குற்றத்திற்காக தூக்குத் தண்டனை பெற்ற ஒருவர் தான் புரிந்த கொலையின் பயங்கரத்தையும், தான் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டு நீதிமன்ற விசாரணையின் பின் தூக்கிலிடப்பட்ட நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்து, அவை திரும்பத்திரும்ப நிகழ்வது போன்ற கற்பனையில் ஈடுபட்டிருந்து கொண்டு அதே துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டிருக்கக் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது.பெரும் தீவிபத்தில் உயிர்நீத்த பெண்மணியொருவர், இறந்து ஐந்து நாட்களின் பின்னரும் தீயின் கோரப்பிடியில் தான் சிக்குண்டதையும் அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள தான்பட்ட அவஸ்தைகளையும் திரும்பத் திரும்ப மனக்கண்முன் நிறுத்தி அவை மறுபடியும் மறுபடியும் நிகழ்வது போன்ற மனப்பிரமையில் இருக்கக் காணப்பட்டார் என்று கூறப்படுகின்றது.தனது குழந்தையை மார்போடு அணைத்துப் பால் கொடுத்துக்...
சடுதி மரணம்

சடுதி மரணம்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 21சடுதி மரணத்தினால் மனிதனுக்கு ஏற்படும் தீய விளைவுகளை உணர்ந்ததினால் தான் போலும் கிறிஸ்தவ தேவாலயங்களில், “பிதாவே, போர்முனை இறப்புகள், கொலைச்சாவுகள், சடுதி மரணங்கள் ஆகிய தீமைகளிலிருந்து எம்மைக் காப்பாற்றுங்கள்” என்று பிரார்த்திக்கின்றார்கள்.ஒவ்வொரு மனிதனும் பூவுலகில் வாழவேண்டிய காலம் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. ஆனால் ஒரு சிலர் தமது முற்பிறப்புகளில் ஏதோ பெருந்தவறுகள் புரிந்த காரணத்தினால் அவைகளின் பிரதிபலனாக கர்மாவின் நியதிகளுக்கேற்ப சடுதி மரணத்தை அடைய வேண்டிய நிர்க்கதிக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள்.இயற்கையின் படைப்புகளில் பிறழ்வுகள் (Freaks) ஏற்படுவதுபோல நமது வாழ்விலும் நமது அறிவுக்குப் புலனாகாத காரணங்களின் வினைப்பயனாக விபரீதங்களும் விபத்துக்களும் நடைபெறுகின்றன.சடுதி மரணம் அடைந்தவர் இவ்வுலகில் பரிசுத்த வாழ்வு வாழ்ந்தவராகவோ, ஆன்மீக மு...
ஆத்மா

ஆத்மா

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 20ஆத்மா என்று எதுவும் கிடையாது என்று விஞ்ஞானிகளால் நிரூபிக்க முடியாது. விஞ்ஞானத்தால் மனிதனின் எண்ணங்கள் எதில் இருந்து பிறக்கின்றது என்பதை கண்டு பிடிக்கமுடியவில்லை.பருப்பொருளிலும் விசையிலும் (Matter and Force) இருந்து மனிதனின் பிரக்ஞை பிறப்பதாக விஞ்ஞானம் கூறவில்லை. விசையில் இருந்து விசை பிறக்கிறது. மூளை அணுக்கூறுகளின் அசைவிலிருந்து புலஉணர்வோ அறிவோ பிறப்பதில்லை. அவை விஞ்ஞானத்தைக் கடந்த ஒருசக்தியில் இருந்து பிறக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. மூளை மனிதனின் புலன் உணர்வுகளுக்குத் துணை போகும் ஒரு கருவியேயொழிய அது அவனுடைய உணர்வுகளுக்குக் காரணியான உறுப்பு அல்ல.சடப்பொருளுக்கும் உயிர்த்துடிப்புள்ள பொருளுக்கும் உள்ள வித்தியாசம், உயிர்த்துடிப்புள்ள பொருளுக்கு ‘நான் இருக்கிறேன்’ என்ற அறிவு இருப்பதே. சூரியன் இருப்பதை சூரியப் பிரகாசம் வெளிப்படுத்துவதுபோல...
மறுபிறப்பும் பால் வேறுபாடுகளும்

மறுபிறப்பும் பால் வேறுபாடுகளும்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 19மனிதர்களில் பெண்ணாகப் பிறந்துவிட்டதற்காக வருந்துபவர்களோ அல்லது ஆணாகப்பிறந்து விட்டோம் என்று பெருமிதம் கொள்பவர்களோ பெரும்பாலும் இருப்பதில்லை. ஏதோ சிலர் துயர்தரும் சம்பவங்களின் போது “பெண்ணாக ஏன் பிறந்தோம்” என்று நினைத்தாலும், பெண்ணாகப் பிறந்ததற்காக தன்னையே நொந்து கொள்பவர்கள் வெகுசிலரே. பெண்ணாகப் பிறந்ததால் பல நன்மைகளும் உண்டு. ஆணாகப் பிறந்தவர்களுக்குப் பலகஷ்டங்களும் இருக்கவே செய்கின்றன. இயற்கையின் விசித்திரம் என்னவென்றால் ஆண் தனது ஆண்மையை நேசிப்பது போலவே பெண்ணும் தனது பெண்மையை நேசிக்கும்இயல்புணர்ச்சிகள் மனிதர்களிடம் இருக்கின்றன.மனிதக் கருவுயிரின் (Embryo) மரபுவழித் தனிச்சிறப்புப் பண்புகள் தாய் தந்தையரின் சரிசமனான இனக்கீற்றுக்களில் (chromosomes) இருந்தே உருவாகின்றன. ஆனால் பிறக்கும் உயிரின் “பால்” எப்படி நிர்ணயிக்கப்படுகின்றது என்று விஞ்ஞானம் விளக்குக...
முற்பிறப்பு சம்பவங்கள்

முற்பிறப்பு சம்பவங்கள்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 18வர்ணசிறி அதிகாரி என்பவர் 9.11.1957இல் “கிறிகற்ற” என்ற கிராமத்தில் பிறந்தான். இவனுக்கு நாலு வயது ஆகும் பொழுது தான்,  கடந்த பிறப்பில் “கிம்புல்கொட” என்ற கிராமத்தில் மஹிபால என்பவருக்கு மகனாயிருந்ததாகவும், அப்பிறப்பில் தனது பெயர் “ஆனந்தா மஹிபால” என்றும் கூறினான். தனது முற்பிறப்பில் நடைபெற்ற சில நகழ்ச்சிகளும், உற்றார், உறவினர், உடைமைகள் ஆகியவற்றின் விபரங்களும் அவனால் கூறப்பட்டு பிறான்சிஸ் ஸ்ரோறி என்பவரால் நுணுக்கமாக விசாரணை செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது. ஆனந்தா மஹிபால 26.10.1926ல் பிறந்து 26.10.1956இல் சடுதியாக இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பதினைந்து நாட்களுக்குப் பின்னர் “கிறிகற்ற” என்ற கிராமத்தில் வர்ணசிறி பிறந்ததாகக் கூறப்பட்டது.கண்டியில் இருந்து இருபது மைல்களுக்கு அப்பால் உள்ள “உடுபோகவ” என்ற கிராமத்தில் 26.4.1959இல் பிறந்த பெண்குழந்...
முற்பிறப்பு நினைவுகள்

முற்பிறப்பு நினைவுகள்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 17 எமது இயல்புணர்ச்சிகள் (Instincts) முற்பிறப்பு அனுபவங்களில் இருந்து பிறந்தவையே. குழந்தை பிறந்தவுடன் தாயின் பாலைத்தேடுவதும், மனிதர் ஒருவர் மீது ஒருவர் கண்டதும் காதல் கொள்வதும் ஒருவரை நாம் எவ்வித காரணமும் இல்லாமல் வெறுக்கத் தோன்றுவதும் முற்பிறப்புகளின் ‘விட்ட குறை தொட்டகுறை” என்றே கூறவேண்டும். மனிதனின் மனப்பாங்கு, குணாம்சங்கள், செயல்நாட்டம், திறமை எல்லாம் முற்பிறப்பின் தொடர்ச்சியாகவே இயங்குகின்றன. ஐந்து வயது சிறவன் மிருதங்கம் கதாகாலஷேபம் செய்வதும், முற்பிறப்புகளில் வளர்த்துக் கொண்ட திறமைகளின் தொடர்ச்சிகளே.முற்பிறப்பு அனுபவங்கள் நமது மனதின் அடி உணர்வு தளத்தில் (Sub-conscious mind) பதிந்து விடுகின்றபடியால் அவை சூட்சும நிலையில் நம்மோடு கூடவே இருந்து கொண்டு பிறப்புக்கள் தோறும் தொடர்ந்து வருகின்றன. கனவுகளில் சில சமயங்களில் நீண்ட காலத்துக்கு மு...
மறுபிறப்பு

மறுபிறப்பு

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 16இந்து சமயத்தின் மடியில் வளர்ந்த பௌத்த சமயமும் சமண மதமும் இந்து வேதங்களில் கூறப்பட்ட சில விடயங்களுக்கு முரண்பாடான கருத்துக்களை கொண்டவையாயினும், மறுபிறப்பையும் கர்மாவையும் தமது ஆதார தத்துவங்களாக ஏற்றுக் கொண்டவை. கிறிஸ்துவுக்கு முன் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிந்து நதிப்பள்ளத்தாக்கில் வாழ்ந்த மக்களின் வழிபாட்டு முறைகளை ஆராயுமிடத்து, அவர்கள் மறுபிறப்பில் நம்பிக்கையுடையவர்களாக இருந்திருக்கிறார்கள் என்று அறியக் கிடைக்கின்றது. கிறிஸ்துவுக்கு முன் 6 ம் நூற்றாண்டில் கிரேக்க தேசத்தில் பரவியிருந்த ஆர்பியஸ் வழிபாட்டு மரபில் (Orphic Cult) மனிதன் பிறப்புகள் தோறும் ஆன்மீக உயர்வு பெற்று இறுதியில் பிறப்பு – இறப்பிலிருந்து விடுதலை பெறுகிறான் என்ற நம்பிக்கை இருந்து வந்தது. இந்து மதத்துக்கே உரியதான இந்த தத்துவம் இந்தியாவுடன் தொடர்பு வைத்திருந்த அக்காலத்து கிரேக்க வ...
கர்மவினைகள்

கர்மவினைகள்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 15ஆத்மா சுவர்க்கத்தில் தனது காரண சரீரமாகிய ஊடகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் பொழுது அதற்குப் பூவுலகத்துக்குத் திரும்பவேண்டுமென்ற "தாகம்" ஏற்படுகிறது. இந்நிலை சமஸ்கிருதத்தில் "திருஷ்னா" என்றும், பாளியில் "தன்ஹா" என்றும் குறிப்பிடப்படுகிறது. மனிதன் பூரணத்துவ நிலையை எய்தும் வரை, தனது ஆசைகளை அழித்து கர்மாவில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ளும் வரை பிறந்து இறந்து கொண்டேயிருப்பான்.ஒவ்வொரு பிறப்பும் முடிவடைந்தவுடன் நமது கர்மவினைகள் ஒரு செயலற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. அவை நாம் பிறப்பெடுக்கும் வேளையில் நம்மை வந்தடைகின்றன. நமது கர்மவினைக்கேற்ப நமது குணச்சிறப்புகள், உணர்வுகள், மனப்பாங்குகள், மனோசக்திகள் எல்லாம் அமைந்து விடுகின்றன. நாம் புக வேண்டிய கர்ப்பாயசமும் நமது கர்மாவுக்கு ஏற்பவே நிர்ணயிக்கப்படுகிறது.விஞ்ஞானத்தின் அடிப்படைத்...
காரண சரீரம்

காரண சரீரம்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 14காரண சரீரம் என்பது அந்தராத்மாவின் கொள்கலம். மனிதனின் தன்முனைப்பு (Ego) அல்லது அஹங்காரம் இச்சரீரத்திற்குரியது.பரிணாம வளர்ச்சியின் மூலம் மனிதனின் தனித்தன்மை உருவாகும்பொழுது மிருக உடலில் இருந்த பிரக்ஞை தனக்கென்று ஒரு காரண சரீரத்தைப் பெற்று மனிதனாகி விடுகிறது. இந்நிலையில் பரமாத்மாவின் சுடர்பொறியே காரணசரீரத்தில் புகுந்து ஜீவாத்மன் ஆகின்றது."காரண சரீரங்களின் மொத்தமே ஈஸ்வரன். ஜீவனின் காரண சரீரம் ஈஸ்வரனின் சரீரத்தில் சேர்க்கப்பட்டுள்ளது" - மாண்டுக்கியோபநிஷதம்.கடந்த பிறப்புகளின் அனுபவங்கள் எல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு இச்சரீரத்தில் தேங்கி நின்று நமது அடுத்த பிறப்புக்கு காரணியாக அமைகிறது. மனிதனின் பரிணாம வளர்ச்சி இச்சரீரத்தில் பிரதிபலிக்கின்றது. ஏனைய சரீரங்கள் ஒவ்வொன்றாக அழிந்த பின்னர், காணர சரீரம் மட்டும் பிறவிகள் தோறும் நிலைத்து நிற்கின்றது....
சுவர்க்கமும், மனித மனோபாவமும்

சுவர்க்கமும், மனித மனோபாவமும்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 13மனிதனுடைய கீழ் மனசு காமலோகத்தில் சுத்தப்படுத்தப்படும் என்பதை முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அதன் பின்னர் அவனிடம் சட உலகில் இருந்த உயர்ந்த எண்ணங்களும், தன்னலமற்ற மனப்பாங்குமே சுவர்க்கத்துக்கு அவன் செல்லும்போது கூடவருகின்றன. சமய ஈடுபாடு கூடிய ஒருவருக்கு அவருக்கேற்ற சுவர்க்கம் கிட்டுகிறது. கடவுள் வணக்கத்தில் இன்பம் கண்டவருக்கு சடஉலகில் பல்வேறு தடைகள் கிலேசங்கள் சௌகரியங்கள் அவருடைய தெய்வவழிபாட்டுக்கு இடைஞ்சல்களாக இருந்திருக்கும். சுவர்க்கத்தில் எல்லாவித இடர்பாடுகளும் நீங்கப்பெற்று தெய்வ வழிபாட்டுக்கு அனுகூலமான சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அதுவே அவருக்கு சுவர்க்கமாக அமைகிறது.சடஉலகில் வாழ்ந்தபொழுது உலக நன்மைக்காக உழைத்த கல்விமான்களும் பேரறிஞர்களும் விஞ்ஞானிகளும் மேதைகளும் மேலும் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளக்கூடிய அனுகூலங்களைப் பெற்றுக்களிப்புற்...
சுவர்க்கம்

சுவர்க்கம்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 12முந்தைய பதிவுகளில் குறிப்பிட்ட இரண்டாவது படிநிலையில் உள்ளவர்கள் இங்கு வாழ்ந்த பொழுது கீழ்த்தர ஆசைகள், சிற்றின்பக் கேளிக்கைகள், மிருகத்தனமான இச்சைகள் ஆகியவைகளுக்கு அடிமைப்பட்டு வாழ்ந்தவர்கள். இறந்த பின்னர் இந்த இன்பங்ளை அனுபவிக்க இயலாத நிலையில் அவைகளுக்காக ஏங்கி அல்லல்படுவர். இவர்கள் சிறிதளவேனும் ஆன்மீக ஈடுபாடு இல்லாது வாழ்ந்தவர்கள். மூன்றாவது நாலாவது படிநிலைகளில் உள்ளவர்கள் சிறிது முன்னேறிய ஆத்மாக்கள். இவர்களுக்கு பூவுலகுடன் தொடர்புகொள்ள நாட்டமிருந்தாலும் (Earth Stimuli) இங்குள்ளவர்கள் அவர்களை நோக்கித் தங்கள் பலம் வாய்ந்த உணர்ச்சிபூர்வமான சிந்தனை அலைகளை அனுப்பி அவர்களை தொந்தரவு செய்யாதிருந்தால் அவர்க்ள அமைதியாக இந்தப் படிநிலையைக் கடந்து விடுவார்கள்.ஐந்தாவது படிநிலை ஓரளவு பிரகாசம் பொருந்திய இன்பகரமான உணர்வுநிலை என்று கூறப்படுகிறது. தமக்கு புண...