Shadow

Tag: இறந்த பின் எங்கு செல்கிறோம்?

நரகம்

நரகம்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 11பிரம்மஞானிகள் (Theosophists) சூட்சும உலகின் முற்பகுதி காமலோகம் ஒன்றும் அதைக் கடந்தபின்னரே சாந்தி நிறைந்த சூட்சும உலகின் இறுதிப்பகுதிக்கு மனிதனால் செல்ல மடியும் என்றும் கூறுகிறார்கள். காமலோகத்தையே நால்வேதங்களும் "பிதிர்லோகம்" என்றும் பிரேதலோகம் என்றும் குறிப்பிடுவதாகவே அவர்கள் கருதுகிறார்கள். காமலோகம் ஏழுபடி நிலைகளைக் கொண்டதெனக் கூறப்படுகிறது.காமலோகத்திலிருந்து விடுபட்டவுடன் மனிதன் சூட்சும உலகின் இறுதிநிலையாகிய "தேவஸ்தான்" என்னும் சூட்சும தளத்துக்குச் சென்று அங்கு சாந்தியையும் சந்தோஷத்தையும் அனுபவிக்கிறான் என்பது அவர்கள் கருத்து. இந்துவேதங்கள் "பிரம்மலோகம்" என்றும் "ஹிரண்யலோகம்" என்றும் குறிப்பிடுவது தேவஸ்தானையே.காமலோக தத்துவத்தையெ கிரேக்கபுராண வழக்கில் பாதாளம் (Hades) என்றும் கத்தோலிக்க சமய மரபில் பாபத்தைப் போக்குமிடம் (Purgatory) என்றும் வர்ணிக...
இறந்தவரும்.. அவர் நினைவும்.. !

இறந்தவரும்.. அவர் நினைவும்.. !

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 10இயற்கை அன்புப் பிணைப்புக்கு முதலிடம் கொடுக்கின்றது. நாம் வெகுவாக நேசித்த ஒருவர் இறந்து விட்டால் சில நாட்களுக்கு இரவு நேரங்களில் நித்திரையின் போது நமது சூட்சும சரீரம் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்வதை உணரலாம். நாம் அவருடன் பேசுவது போலவும் பழகுவது போலவும் உணர்வு ஏற்படுகிறது. அவ்வுணர்வுகள் ஸ்தூல சரீரத்தில் ஓரளவு பிரதிபலிக்கின்ற போதிலும் கண் விழித்தவுடன் எல்லாமே மறந்து விடுகின்றன. பக்கத்தில் படுத்திருப்பவர்கள் இதை அவதானிக்கக் கூடியதாயிருக்கும். இறந்தவரைப் பற்றிய நினைவுடன் நாம் இருப்பதால் அடிக்கடி அவரைப் பற்றிய கனவுகள் தோன்றுவது இயல்பு. அதே நேரத்தில் இறந்தவர் நமது மனதில் அதிர்வுகளை ஏற்படுத்தி தனது எண்ணங்களை கனவுகள் மூலம் வெளிப்படுத்தவது சாதாரணமாக நடைபெறும் நிகழ்ச்சிகள்.இறந்தவர்களை அன்புடன் நினைப்பதும் அவர்களுக்கு மறுவுலகில் நற்கதி கிடைக்க வேண்டுமென இ...
பிரக்ஞை

பிரக்ஞை

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 9மனிதன் இறந்தவுடன் தனது உணர்வை இழந்து விடுவதில்லை. மனிதனின் தன் முனைப்பு என்கிற "நான் இருக்கிறேன்" என்ற நினைவு (பிரக்ஞை) தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கிறது. இப்படியாகத் தொடர்கின்ற பிரக்ஞையை ஆத்மா (Soul) என்றும் ஆவி (Spirit) என்றும் தன்முனைப்பு (Ego) என்றும் உளம் (Psyche) என்றும் உயிர் என்றும் மனசு என்றும் தத்துவஞானிகள் அவரவரின் சமயத்திருமறைகளின் கண்ணோக்கில் விவரிக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுக்கும் "நான் இருக்கிறேன்" என்ற பிரக்ஞை இருக்கிறது. இங்கு ஐம்புலன்களின் தனித்தனி உணர்வுகளைக் குறிப்பிடவில்லை. நாம் நம்மைப்பற்றி நினைக்கும்பொழுது உடலின் மத்தியில் உணர்வுகளை ஒன்று திரட்டி இதுவே நான் என்று எண்ணவைக்கும் அந்தக் கூர்மையான ஆழமான பிரக்ஞையே பிறவிகள் தோறும் தொடர்ந்து வருகிறது.நமது பிரக்ஞையானது ஜாக்கிரதம், சுவப்னம், சுகப்தி, துரியா என்ற நாலு நிலைகளில் வகைப்படுத...
மரணத்தின் பின்னர்

மரணத்தின் பின்னர்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 8சட உலகுக்கே உரித்தான ஆவிப்பொருளை (Etheric Matter) உதறினாலொழிய சூட்சும உலகை அடையமுடியாது. எனவே இவர்கள் சில நாட்களுக்கு ஆவிவடிவத்தை உதற முடியாமலும் தாம் நேசித்துப் பக்குவப்படுத்தி வந்த உடல் அழிந்துவிட்டபடியால் புலணுணர்வுகளைத் திருப்பிப் பெற இயலாமலும் இங்குமின்றி அங்குமின்றி இழுபறிப்பட்ட இடைநடுவே நின்று சஞ்சலப்படுகிறார்கள்.பலவிதமான ஆசைகளையும் கற்பனைகளையும் மனதில் வளர்த்து வைத்துக்கொண்டு தங்கள் உடல்களை ஆசையுடன் அலங்கரித்துப் பேணி வந்த யுவதிகளும் இளைஞர்களும் சடுதி மரணம் அடைய நேரும்பொழுது இத்தகைய பரிதாபத்துக்குரிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். இறந்தவரின் உடலை எரித்துவிடுவது தான் சிறந்த முறை. ஆவி இரட்டை வடிவமானது தான் இதுவரை காலமும் எந்த உடலுடன் ஒட்டிக்கொண்டிருந்ததோ அந்த உடலின்பால் ஈர்க்கப்பட முடியாத நிலையில் அழிந்துவிடுகிறது. உடலை விட்டு உயிர் நீ...
மரணிக்கும்போதும் பின்னரும்

மரணிக்கும்போதும் பின்னரும்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 7மரணம் நிகழும்பொழுது உடலில் வேதனை எதுவுமே தெரிவதில்லை. ஆழ்ந்த துயில் மெதுமெதுவாக நம்மை அரவணைப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது. நீண்டகாலமாக நோயால் அவதிப்பட்டவர்கள் கூட இறக்கும்பொழுது வேதனையற்ற நிலையிலேயே உயிர் விடுகிறார்கள். இதை இறந்தவுடன் சடலத்தின் முகத்தில் ஏற்படும் அமைதியான, சுகமான பாவத்தை நாம் அவதானிப்பதன் மூலம் உணரலாம்.பிராணன் உடலைவிட்டு வெளியேறியவுடன் ஸ்தூல சரீரத்துக்கும் ஆவி  வடிவத்துக்கும் உள்ள தொடர்பு அறுந்துவிடுகிறது. இரண்டுக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த காந்தக் கயிறு (Magnetic Cord) அறுந்து, பட்டம் விடுபட்டதுபோல் ஆவி வடிவம் தன்னை ஸ்தூல சரீரத்திலிருந்து விடுவித்துக்கொள்கிறது. ஸ்தூல சரீரத்திலிருந்து விடுபட்ட உயிரானது சடலத்தின் அருகேயே மிதந்துகொண்டிருக்கும். இப்படி மிதந்துகொண்டிருக்கும் பொழுது இதை ஆவி உரு (Wraith) என்பர்.இத...
மரணம் என்றால் என்ன?

மரணம் என்றால் என்ன?

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 6மனித உடலின் முக்கிய உறுப்புகள் பழுதடைந்தவுடன் மரணம் சம்பவிக்கிறது. இருதயம், சுவாச உறுப்புகள், மூளை போன்ற பகுதிகள் செயலாற்ற இயலாத நிலை ஏற்படும் பொழுது மனித உடலில் இயக்கம் திடீரென்றோ அல்லது படிப்படியாகவோ ஸ்தம்பித்த நிலையை அடைந்து விடுகிறது. மூளைக்கு இரத்தத்தின் மூலமாக பிராணவாய்வு செல்லாது நின்றவுடன் புலனுணர்வுகள் தடைப்பட்டு மரணம் ஏற்படுகிறது. இவை தான் மரணத்துக்கு உடல் நூல் வல்லுனர்களும் மருத்துவர்களும் கூறும் காரணங்கள்.மரணம் சம்பவிப்பதற்கு இவை மட்டம் தான் காரணங்கள் அல்ல. இதயம் அடிப்பது நின்று விடுவதாலோ அல்லது சுவாசம் தடைப்பட்டு விடுவதாலோ இறப்பு ஏற்பட்டு விடுகிறது என்று கூற முடியாது. ஏனெனில் இருதயம் நின்று விட்ட சில மணி நேரங்களின் பின்னர் கூட பலருக்கு உடலில் உயிர் தரித்திருந்த சம்பவங்கள் மருத்துவ நூல்களில் பதிவுச் சான்றுகளாகக் கூறப்படுகின்றன. இருதயத்தில...
சூட்சும உலகம்

சூட்சும உலகம்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 5இறந்தவர்கள் சஞ்சரிக்கும் உலகத்தை சூட்சும உலகம் என்று கூறுவது மிகவும் பொருத்தமாயிருக்கும். சூட்சும உலகம் என்பது எமது சட உலகத்தின் செறிமானத்தை (Density) விட பலமடங்கு குறைந்த செறிமானத்தையுடைய நுண்பொருளால் (Astral Matter) உருப்பெற்ற தளம் எனக் கூறலாம். சட உலகத்தின் ஸ்தூல வடிவமாக இருக்கும் சகல பொருட்களையும் நமது கண்களால் பார்க்க முடிகிறது. திண்மமாக, திரவமாக, வாயு வடிவமாக இருப்பவைகளை நாம் காண்கிறோம் அல்லது உணர்கிறோம்.சூட்சுமமாக இருக்கும் காற்றும், மின்சாரமும், காந்தப் புலமும் நமது கண்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் அவைகளையும் நம்மால் உணர முடிகிறது. அதே நேரம் சூட்சும உலகத்தை நுண்நோக்காற்றல் உடையவர்களைத் தவிர வேறு யாராலும் பார்க்கவோ உணரவோ முடியாது.நமது சட உலகிலுள்ள திண்மமான, திரவமான, வாயுவான வடிவங்கள் பூமியின் ஈர்ப்பு சக்திக்குக் கட்டுப்பட்டு உலகின் மேற...
முன்ஷி ஆய்வும், இறந்தவர்கள் வழிபாடும்

முன்ஷி ஆய்வும், இறந்தவர்கள் வழிபாடும்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 4இந்தியாவின் முன்னணி விடுதலைத் தலைவரும். முன்னாள் உணவு அமைச்சருமாகிய கே.எம்.முன்ஷி ஆவி உலகத் தொடர்பில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். "பவான் ஜேர்னல்" என்ற சஞ்சிகையில் (13-7-69) அவர் எழுதிய கட்டுரையில், தான் 1903-ம் ஆண்டு இறந்த தனது தந்தையுடனும், 1821-ல் இறந்த நெப்போலியனுடனும், இன்னும் சேர் ஒலிவர் லொட்ஸ், மீராபாய், மோதிலால் நேரு ஆகியோருடனும் தொடர்பு கொண்டதாகக் கூறியுள்ளார். 1930-ம் ஆண்டு தண்டி உப்புச் சத்தியாக்கிரகத்திற்கு முன்னர், திரு.முன்ஷி காஷ்மீருக்குத் தனது குடும்பத்தினருடன் போய் வரத் திட்டமிட்டார். அதற்காக ஒரு ஆவியை அழைத்து காஷ்மீருக்கு எப்போது போவது நல்லது என்று கேட்டார். ஆவி, "நீங்கள் அங்கு போக மாட்டடீர்கள், ஜெயிலுக்குப் போகப் போகிறீர்கள்" என்று கூறியதாம். ஆவி கூறியது போலவே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார்.இன்...
எஸ்.பி.ஆர். சங்கம்

எஸ்.பி.ஆர். சங்கம்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 3எஸ்.பி.ஆர். என்று பிரபலமாகிய இச்சங்கத்தினர் ஆவி உலக இடையீட்டாளர்கள் (Mediums) மூலமே தங்கள் ஆராய்ச்சிகளை நடத்தினார்கள். இந்தச் சங்கத்தின் முதல் தலைவராக இருந்த டாக்டர் மையர்ஸ் தான், இறந்த பின் தனது நண்பர் சேர்.ஒலிவர் லொட்ஸ் உடன் தொடர்பு கொள்வதாக வாக்களித்திருந்தார். அவ்வாறே தொடர்பு கொண்டு பயனுள்ள பல தகவல்களைக் கொடுத்தும் உதவினார்.இறந்தவர்களுடைய ஆவிகள் இவ்வுலகில் உள்ள தங்கள் உறவினர்களுடன் "மீடியம்கள்" மூலம் தொடர்பு கொண்டு குடும்ப விவகாரங்கள் பற்றிய விடயங்களைக் கூறிய சந்தர்ப்பங்கள் ஏராளமாக உள்ளன. இறக்கும்பொழுது மனதை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த ஆவல் காரணமாக தங்கள் ஆசைகளை வெளிப்படுத்துவதற்கு ஆவிகள் "மீடியம்" களை உபயோகிப்பதுண்டு.பிலிப்ஸ் என்ற ஒரு ஆங்கிலேயரும் அவரது மனைவியும் 25 வருடங்களுக்கும் மேலாக செய்த தீவிர ஆராய்ச்சிக்குப் பின் "இறப்புக்குப்பின் வாழ்...
சூட்சும தளம்

சூட்சும தளம்

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 2நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூவுலகத்தை தவிர, வேறு சூட்சும உலகங்களும் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். அப்போது தான் மரணம், மரணத்தின் பின் உள்ள மர்மங்கள் பற்றிய தெளிவான ஒரு ஆய்விற்கு அடித்தளம் கிடைக்கப் பெறுவதுடன் அதனைப் பற்றிய சிறப்பான முடிவையும் பெற முடியும்.  தற்போதைய விஞ்ஞானமும், மனோதத்துவமும் மனிதனின் உணர்திறனுக்கு அப்பாற்பட்ட ஆய்வுகளை செய்யும் திறன் கொண்டவை அல்ல. ஆயினும் இந்தத் துறைகள் இன்னும் வளர்ச்சி அடையும் பட்சத்தில் எமது புலன்களுக்கு அப்பாற்பட்ட உலகங்களும், இயக்க சக்திகளும் இருக்கின்றன என்பதை விஞ்ஞானரீதியாக அறிந்து உணரும் வாய்ப்புக்கள் கிட்டும்.சில வருடங்களுக்கு முன்னர் வெறும் பிரமைத் தோற்றங்கள் என எண்ணப்பட்டவைகள் எல்லாம் இப்போது ஆதார பூர்வமான அதிசய நிகழ்வுகள் என ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அதாவது,புலன்களுக்கு அப...
மரண பயம்

மரண பயம்

தொடர், நம்பினால் நம்புங்கள்
பிறக்கும் உயிரினங்கள் அனைத்தும் இறந்தேயாக வேண்டும். இறப்பு நிச்சயமானது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இருந்தும், மரணத்தைப் பற்றிச் சிந்தித்து மனதை நாம் அதிகம் அலட்டிக் கொள்வதில்லை.இளம் வயதினர் தாம் இப்போதைக்கு இறந்து விடப் போவதில்லை என்ற உள்ளுணர்வு தரும் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். வயோதிகர்களோ  மரணம் பற்றிய சிந்தனைகள் துன்பகரமானவை என்று நினைத்து அவ்வெண்ணங்களை மனதில் வளர விடுவதேயில்லை.ஆனால், இறப்பு நாம் எதிர்பார்த்திருக்கும்போது இயல்பாகவும் வந்துவிடுகிறது. சற்றும் எதிர்பாராது இருக்கும்போது திடீரென்றும் வந்துவிடுகிறது. வாழவேண்டும் என்ற ஆசை பொதுவாக எல்லோரிடமும் உண்டு. இதை அபிநிவேஸ என்று சமஸ்கிருதத்தில் கூறுவர். எழுந்து நடமாட முடியாத வயோதிகர்கள் கூட இன்னும் வாழ வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள். கடும் நோயினால் வருந்துபவர்கள் கூட, நோய் தீர வேண்டு...
மரணத்தின் மர்மங்களை அறிவது எப்படி?

மரணத்தின் மர்மங்களை அறிவது எப்படி?

தொடர், நம்பினால் நம்புங்கள்
இறந்த பின் எங்கு செல்கிறோம்? - 1இதோ மரணத்தின் மர்மங்கள் இவை தான் என்று திட்டவட்டமாக வலியுறுத்திக்கூற எவராலும் முடியாது. இறந்தவர் எவரும் கல்லறையிலிருந்து வெளிக்கிளம்பி வந்து மரணத்தின் மர்மங்களைத் துலக்கியதாக வரலாறு இல்லை.மரணத்தைப் பற்றி எழுதும்பொழுது வேதங்கள் கூறுவதையும், வேதாந்த பாஷ்யங்கள் எடுத்துரைப்பதையும், உலகத்தின் பல்வேறு சமயத் திருமுறைகள் விளம்புவதையம் மரபுவழியாக வந்த சான்றுகளையும் நம்பிக்கைகளையும் ஆய்வு செய்தல் அவசியமாகின்றது.ரிஷிகளும் ஞானிகளும் யோகிகளும் சுவானுபூதியில் தாம் உணர்ந்த பேருண்மைகளை உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளார்கள்.பிரம்மஞான சங்கத்தைச் (theosophical Society)  சேர்ந்த சிலர் தாம்பெற்ற நுண்நோக்காற்றலால் (clairvoyance) நேரடியாக அறிந்து ஆய்வுசெய்த உண்மைகள் எனக் கூறி மரணத்தைப் பற்றிய மர்மங்களைத் துலக்கியுள்ளார்கள்.மகாரிஷிகளும் சத்தியவழியில் வாழ்ந்...