Shadow

Tag: விக்ரம்

இருமுகன் விமர்சனம்

இருமுகன் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
லவ் எனும் தீவிரவாதி அன்பே இல்லாமல், தனது ‘ஸ்பீட்’ எனும் அண்ணீர் (adrenaline) ஊக்கி மருந்தை, உலகின் பயங்கரவாதக் குழுக்களுக்கு வினியோகம் செய்யத் திட்டமிடுகிறான். அதை உளவுத்துறை ரா (RAW) அதிகாரியான அகிலன் வினோத் முறியடிக்க முனைகிறார். நல்லவன் தீயவன் ஆகிய இந்த இரண்டு முகத்துக்கு (பேர்) இடையே நிகழும் சண்டை தான் படத்தின் கதை. ஸ்டைலிஷான ஹீரோ, மிக ஸ்டைலிஷான வில்லன் என இரண்டு வேடங்களில் வருகிறார் விக்ரம். லவ் எனும் பாத்திரத்தில் அவர் காட்டும் நளினமும் பாவனைகளும் ரசிக்க வைக்கின்றன. ஹாலிவுட் நாயகர்களைப் போலவே, ‘ஃபைட் கிளப்’ ஒன்றில் தாடியுடன் விக்ரம் அசத்தலாய் அறிமுகமாகிறார். அங்குத் தொடங்கி இடைவேளையில் வரும் ‘ட்விஸ்ட்’ வரை படம் மிக விறுவிறுப்பாய்ப் பயணிக்கிறது. அகிலன் பாத்திரத்தின் முரட்டுத்தனமான உடல்வாகிற்குக் கச்சிதமாய்ப் பொருந்துகிறார் விக்ரம். அகிலன் தாடியை எடுத்ததும், முகத்தில் கொஞ்சம் வயோதிகம்...
10 எண்றதுக்குள்ள விமர்சனம்

10 எண்றதுக்குள்ள விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
10 எண்றதுக்குள்ள எதையும் சாதித்து முடிக்கக் கூடியவர் படத்தின் நாயகன். அதைக் கேட்டு, ‘ஐய்யய்யே.!’ என அரை லூஸு நாயகியே உதட்டைச் சுழிக்கிறார். படம், மிக முக்கியமான சமூக அவலத்தில் இருந்து தொடங்குகிறது. நாயகனாகப்பட்டவர் அதில் சிக்கி, அதிலிருந்து தப்பிக்க எப்படி அதை மேலும் தீ மூட்டித் தப்பிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. நாயகியின் பெயரை ஷகீலா என வைத்ததில் தொடங்கி, சமந்தாவின் கதாபாத்திரத்தை அதிக கவனமுடன் லூஸுத்தனமாகவே உருவாக்கியுள்ளனர். சீரியசான படத்துக்கு, மிக மிக இடைஞ்சலாய் உள்ளார் சமந்தா. அவரை விடவும் படத்தின் பாடல்கள், மிகப் பெரிய வேகத்தடையாக உள்ளது. ‘என் கடமை உயிரை விட்டு நடிப்பது’ என விக்ரம், இந்தப் படத்திலும் தன் கடமையைச் செவ்வனே செய்கிறார் விக்ரம். வயோதிகம் லேசாக முகத்தில் எட்டிப் பார்த்தாலும், ஆடல் பாடல் சண்டைக் காட்சிகளில் ஒரு குறையும் வைக்காமல் இளமை துள்ள திரையில் வலம் வருகிறார். ...
ஐ விமர்சனம்

ஐ விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம் என்றாகிவிட்டது. அதை ஐ படத்தில் மீண்டும் நிரூபித்துள்ளார். தியாவுக்கும் லிங்கேசனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், லிங்கேசனின் அழகையும் உடற்கட்டையும் ஐவர் கூட்டணி இணைந்து உருக்கலைக்கின்றனர். பின் என்னாகிறது என்பதுதான் கதை. அந்நியன் அம்பி கூவக்கரையில் பிறந்தால் எப்படியிருக்கும்? அதுதான் லீ எனும் லிங்கேசன். ஆனால் விக்ரமுக்கு சென்னைத் தமிழ்தான் கொஞ்சம் ஒட்டவில்லை. கட்டுடல், மெல்லுடல், கோர முகமென விக்ரம் அபிரிதமான உழைப்பைக் கொட்டியுள்ளார். சுமார் இரண்டே முக்கால் வருட தவம் இவருக்கு! எல்லாத் தவத்திற்கும் வரம் கிடைத்துவிடுவதில்லை என்பதுதான் துரதிர்ஷ்டமான விஷயம். அந்நியனில், மல்டிபிள் பெர்ஸனாலிட்டி செய்த வேலையை இப்படத்தில் நாயகியும் வில்லன்களும் செய்கின்றனர். அம்பியை நாயகியே ரெமோவாக்குகிறாள்; வில்லன்கள் அந்நியன் ஆக்குகின்றனர். தியாவாக எமி ஜாக்சன். ஷங்கர்...