
பாரம் விமர்சனம்
தேசிய விருது பெற்ற இப்படத்தின் தலைப்பே சற்று குழப்பம்தான். உடம்பு முடியாமல் படுத்துவிடும் முதியவர்களை தான் 'பாரம்' எனத் தலைப்பு சுட்டுகிறதோ என எண்ண வேண்டியுள்ளது.
தலைக்கூத்தல் (Thalaikkoothal - தலைக்கு ஊத்தல்) என்பது பற்றி ஆன்லைனில் படிக்க நேரிடும் இயக்குநர் பிரியா கிருஷ்ணாசாமிக்கு, மேலும் அது சம்பந்தமான ஒரு உண்மைக் கதையும் தெரிய வருகிறது. இது கண்டிப்பாகச் சொல்லப்பட வேண்டியதென முடிவுக்கு வந்து, திரைப்படமாக எடுக்க ஆய்வு மேற்கொள்கிறார். இப்படமும் டாக்குமென்ட்ரி டிராமா வகையைச் சார்ந்ததே!
தங்கை வீட்டில் தங்கி, வாட்ச்மேன் வேலை பார்க்கும் கருப்பசாமிக்கு விபத்து ஏற்பட்டு இடுப்பெலும்பு உடைகிறது. அவரது மகன் செந்தில், அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்காமல், நாட்டு மருத்யுவர் குணப்ப்டுத்துவார் என கிராமத்திற்கு அவரை அழைத்துச் சென்றுவிடுகிறான். அவர் இறந்து விடுகிறார். தனது தாய்மாமா கருப்பசா...


