
கயிறு விமர்சனம்
படத்திற்கு ‘பூம்பூம் மாடு’ என்றே தலைப்பிட்டிருக்கலாம். கந்தன் எனும் ஒரு பூம்பூம் மாட்டையும், சின்ராசு எனும் பூம்பூம் மாட்டுக்காரனையும் சுற்றியே கதை நகர்கிறது. கதையின் மையமான மாட்டை, நாயகன் கயிற்றில்தானே கட்டி வச்சிருப்பார்! ஆக, மாடு வாங்குவதை விட அதற்கு மூக்கணாங்கயிறு வாங்குவது முக்கியமென்ற உயரிய கருத்தை உணர்த்துவதாக படத்தின் தலைப்பைக் கொள்ளலாம்.
நன்றாக அலங்கரிக்கப்பட்ட பூம்பூம் மாட்டிடம், குறி கேட்பவர் கேள்விகளை முன்வைக்க, மாடு தலையாட்டுவதைக் கொண்டு பலன்கள் சொல்வர் பூம்பூம் மாட்டுக்காரர்கள். கோயில் திருவிழா போன்று மக்கள் கூடுமிடங்களிலோ, அல்லது ஒவ்வொரு வீடாகச் சென்று குறி சொல்லி காணிக்கை பெறுவதே அவர்களது ஜீவிதம். ஊர் விட்டு ஊர் வந்து பிழைக்கும் கந்தன், பாண்டிய மன்னன் போல் மணமகன் கிடைப்பான் என சமத்துவபுரத்தைச் சேர்ந்த தாமரைக்குக் குறி சொல்லுகிறான் சின்ராசு.
சின்ராசுக்கும், தாமரைக்கும் காத...


