
பேடிங்டன் இன் பெரு | Paddington In Peru review
பேடிங்டன் (2014), பேடிங்டன் 2 (2017) ஆகிய படங்களைத் தொடர்ந்து, அவ்வரிசையில் மூன்றாவது படமாக ‘பேடிங்டன் இன் பெரு’ வெளியாகியுள்ளது. முதல் பாகத்தில், பெரு நாட்டைச் சேர்ந்த கரடி ப்ரெளன் குடும்பத்தினரை, லண்டனில் உள்ள பேடிங்டன் இரயில்வே நிலையத்தில் சந்திக்கிறது. எங்குச் சந்தித்தார்களோ, அவ்விடத்தின் பெயரையே கரடிக்கு வைத்துத் தங்களுடன் அழைத்துச் செல்கிறார்கள் ப்ரெளன் குடும்பத்தினர். இரண்டாம் பாகத்தில், ஒரு திருட்டுப் பழி பேடிங்டன் மீது விழ, ப்ரெளன் குடும்பத்தினர் உதவியோடு பழியில் இருந்து தப்பிக்கிறது.
முதல் பாகத்தில், பேடிங்டனை லண்டனுக்கு அனுப்பி வைத்திருப்பார் அத்தையான லூசி கரடி. இரண்டாம் பாகத்தில், நிரபராதி என விடுவிக்கப்படும் பேடிங்டனைக் காண லண்டன் வந்திருப்பார் லூசி கரடி. இப்பாகத்தில், லூசி கரடி இருக்கும் ஓய்வு இல்லத்தில் இருந்து பேடிங்டனுக்கு ஒரு கடிதம் வருகிறது. கடவுச்சீட்டு வாங்கி பிரிட்டீ...