
பரமசிவன் பாத்திமா விமர்சனம் | Paramasivan Fathima review
அந்நியர்கள் நுழையத் தடை விதைத்திருக்கும் சுப்ரமணியபுரத்து பரமசிவனும், சாத்தான்கள் நுழையத் தடை விதித்திருக்கும் யோக்கோபுரத்து பாத்திமாவும் காதலிக்கிறார்கள். ஆனால் மதத்தைக் காரணம் காட்டி இருவும் கொல்லப்படுகிறார்கள். பரமசிவனும் பாத்திமாவும் தங்கள் மரணத்திற்குப் பழிவாங்குவதுதான் படத்தின் கதை.
ஒன்றாக இருந்த ஊரைப் பணத்தாசை காட்டி மதம் மாற்றி இரண்டாக உடைக்கிறார்கள் எனக் காத்திரமான குற்றச்சாட்டை முன்வைக்கிறார் இயக்குநர் இசக்கி கார்வண்ணன். இதுதான் படத்தின் பிரதான நோக்கம். வசனங்கள், காட்சிகள் என அனைத்தும் அதை நோக்கியே நகர்கின்றன. பரமசிவன், பாத்திமா காதலே கூடத் தொட்டுக்கோ, துடைச்சுக்கோ எனக் கிளைக்கதையாகத்தான் வருகிறது.
பாத்திமாவின் அண்ணன் ஃபெலிக்ஸாக நடித்திருக்கும் ஒளிப்பதிவாளர் M.சுகுமார்தான் படத்தின் வில்லன். அவருக்கு மத அபிமானம் எல்லாம் கிடையாது. அவரது குறிக்கோள் பணம் மட்டுமே! இயக்குநரின் நோக்கம...


