Shadow

Tag: Payamariya Prammai Thirai Review

பயமறியா பிரமை விமர்சனம்

பயமறியா பிரமை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கொலையை கலையாகக் கருதி 25 வருடங்களில் 96 கொலைகள் செய்த ஒரு கைதியை பேட்டி எடுத்து, அதை கதையாக எழுதும் ஒரு எழுத்தாளரும், அதை படிக்கும் வாசகர்களும் அந்த கொலையாளியைப் போல் கொலையை கலையாகக் கருதி கொலைகள் செய்யத் துவங்கினால் அதுதான் “பயமறியா பிரமை” படத்தின் கதை.இதுதான் கதையா என்று கேட்டால், படத்தின் ஆரம்பத்தில் காட்டப்படும் ஸ்லைடு அப்படித்தான் கூறுகிறது. ஆனால் அதற்கு எதிர்மாறாக காட்சிகள் காட்டப்படுகின்றன. படத்தில் எழுத்தாளர் புத்தகம் எழுதுவதாகவோ, அல்லது அவரும் அந்த கதாபாத்திரமாகவே மாறினார் என்பதோ காட்சிகளில் இல்லவே இல்லை. அவர் வெறுமனே படத்தின் துவக்கத்தில் இருந்து இறுதிவரை பேட்டி என்கின்ற பெயரில் உப்பு சப்பில்லாத ஏன்..? எப்படி..? என்கின்ற கேள்விகளை கேப்பதும், இது மனிதாபிமானமற்ற செயல் என்று கொலையாளியை சபிப்பதுமாகவே இருக்கிறார்.இதற்கு இடையில் வேறு வேறு கதைமாந்தர்களாக வரும் குரு சோமசுந்தர...