
“வீட்டுக்கு வந்ததுல இருந்து அந்த பொட்டிய வச்சிக்கிட்டு என்னமோ பண்ணிட்டு இருக்கான்” என்றார் அவன் தாய்.
மடி கணினிக்கு ராஜேஷின் தாய் வைத்த பெயர் “பொட்டி”.
“அந்த பொண்ணுக்கு அனுப்ப என்னுடைய தகவல்கள் அனைத்தையும் தயார் படுத்திகிட்டு இருக்கேன்” என்றான்.
“அட.. உனக்கு கூட பொறுப்பு வந்துடுச்சு போல!! சரி.. சரி.. காட்டு பார்ப்போம்” என்று அதனை பார்க்க தொடங்கியவர்,
“அவ தான் ஈ மெயில் அனுப்ப சொல்லி இருக்காளே!!” என்றான் ராஜேஷ்…
“அதுக்காக ஏதோ வேலைக்கு அப்ளை பண்ற மாதிரி ப்ராஜெக்ட் தகவல் எல்லாம் ஏன்டா அனுப்புற?”
“நீ இதுக்கு சரிப்பட்டு வர மாட்ட போல!! லக்ஷ்மி இவனோட ஜாதகத்த கொஞ்சம் கொண்டு வா” என்றார்.
ஒரு வழியாக அவனுடைய பொது விவரங்களையும் உடன் அவனது மெடிக்கல் செர்ட்டிஃபிக்கேட்டையும் அவளுக்கு ஈமெயில் மூலம் அனுப்பி வைத்தான்.
எழுத்து தேர்வுக்கு எப்படியும் அழைப்பு வரும் என்ற நம்பிக்கைஒரு புறம் இருந்தாலும், மற்றொரு புறம் ஒரு வித பதட்டத்துடனேயே காணப்பட்டான் ராஜேஷ்.
தொடரும் …..