Shadow

மௌனம் கலைத்தார் பாலுமகேந்திராவின் துணைவி.. மௌனிகா

Mownika

இயக்குநர் பாரதிராஜா, வெற்றிமாறன், விடுதலை ஆகியோர் எடுத்த முயற்சியினாலும், பாலுமகேந்திராவின் மகன் கௌரிசங்கரின் பெருந்தன்மையாலும்தான் தன் கணவரின் முகத்தை கடைசியாகப் பார்க்க முடிந்ததாக நடிகை மௌனிகா தெரிவித்துள்ளார்.

1985இல், ‘உன் கண்ணில் நீர்வழிந்தால்’ படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடித்த போதுதான் அவரை முதலில் சந்தித்தேன். அன்று தொடங்கிய உறவு கடந்த 28 ஆண்டுகளில் அன்பும் காதலும் புரிதலும் நிறைந்த உறவாக இருந்தது. கடந்த 2000இல் நாங்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டாலும் அவருக்கு இரண்டாவது அட்டாக் வந்தபோதுதான் அவர் எங்கள் திருமணத்தை வெளிப்படையாக அறிவித்தார்.

அதன் பிறகே எனக்கும் அவருடைய முதல் குடும்பத்தினருக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டது. பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தனக்கு ஏதும் நேர்ந்துவிட்டால் அழாமல் வந்து தன் முகத்தைமட்டும் பார்த்துவிட்டுச் சென்றுவிடும்படி கூறியிருந்தார். அவர் ஓரு பெர்ஃபக்‌ஷனிஸ்ட், யாரையும் வெறுக்கத் தெரியாதவர். அவருடைய அந்த குணம் அவர் மகனிடமும் இருக்கிறது.

இந்த நேரத்தில் என்னை அங்கே வரவிடாமல் தடுக்க நினைத்தவர்களைப் பற்றி எதுவும் சொல்ல விரும்பவில்லை. எல்லோரையும் நேசித்த, எல்லோர் மனதிலும் இடம் பிடித்த என் கணவரின் ஆன்மா.. இனி இல்லை. அந்த துயரத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர முயற்சிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.