
என் இதயம் தீப்பிடித்து எரிகிறது
கண்ணீர்விட்டு அணைத்துக் கொண்டிருக்கிறேன்
எந்நேரமும்
முன்பு போலில்லை நீ
நான் பார்த்தால்
முகம் சுளிக்கிறாய்
வார்த்தைகளில்
வெறுப்பள்ளி வீசுகிறாய்
நான் சிரித்தால்
பதிலுக்கு என்னை சிலுவையில் அறைகிறாய்
முகம் திருப்பி
நான் செய்தபாவம் என்னவோ?
– சே.ராஜப்ரியன்


