
என் பிரியங்களில்
படிந்துள்ள அழகினை
நான் பார்த்து வியக்கிறேன்
மற்றவர்களின் வெளிப்பாட்டிலிருந்து
என்னுடையதில் மட்டும்
ஒரு தனித்துவமிருப்பதால்
வழித்தெடுக்க வந்தவர்களுக்கும்
அதையே கொடுத்தேன்
மாறாக
எனக்களித்து சென்றார்கள்
அவர்களுக்கு யாரோ கொடுத்த
வெறுமைகளை
– சே.ராஜப்ரியன்


