Shadow

Author: admin

காரைக்கால் அம்மையின் தரிசனம்

காரைக்கால் அம்மையின் தரிசனம்

ஆன்‌மிகம்
கொங்கைதிரங்கி நரம்பெ ழுந்து குண்டுகண்வெண்பற் குழிவ யிற்றுப் பங்கிசிவந்திரு பற்கள் நீண்டு பரடுயர்நீள்கணைக் காலோர் பெண்பேய் தங்கியலறி யுலறு காட்டில் தாழ்சடைஎட்டுத் திசையும் வீசி அங்கங்குளிர்ந்தன லாடும் எங்கள்அப்பனிடந்திரு ஆலங் காடே.---காரைக்கால் அம்மையார் முலைகள் வற்றிசரிந்து, நரம்புகள் எழுந்து, கண்கள் பெரிதாகி பசியினால் ஒட்டிய வயிறு, பரந்ததலைமுடி சிவந்து பற்கள் நீண்டு, பரந்த துயருடன் பெண்பேய்கள் அலறியும் உலறியும்திரியும் காட்டில் – சிண்டு விழுந்த சடைகள் எட்டுதிக்கும் பரவி வீசி அங்கம்குளிர்ந்து நெருப்பில் ஆடும் எங்கள் அப்பனாகிய சிவன் உள்ள இடமே திருஆலங்காடு.காரைக்கால் அம்மையாரின் பாடல்களே இது. இவர் வாழ்ந்தவரலாற்றையும் பின்னணியையும் தெரிந்து கொண்டால் இப்பாடல்களுக்கு இன்னும் உச்சம்கூடும். காரைக்காலில் செழிப்பான வணிகரின் ஒரே மகள் புனிதவதி. மிக செல்லமா...
தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டும் மிஷ்கின்

தெருவில் இறங்கி போஸ்டர் ஒட்டும் மிஷ்கின்

சினிமா, திரைத் துளி
விளம்பரங்களுக்குப் பணம் இல்லாமையாலும், பெரிய பேனர்களின் விளம்பரங்களுடன் போட்டியிட முடியாததாலும், இயக்குநர் மிஷ்கின் சாலையில் இறங்கி படத்தின்  போஸ்டரை அவரே ஒட்டி வருகிறார்.                “தோள் கொடுத்த ஊடக நண்பர்களுக்கும்,                 இதயம் கொடுத்த பார்வையாளர்களுக்கும்,                 கை கொடுத்த விநியோகிஸ்தர்களுக்கும்,                 தியேட்டர் உரிமையாளர்களுக்கும் நன்றி”என அப்போஸ்டரில் உள்ளது.நேற்றிரவு கோவையில் விடியற்காலை 03:00 மணிக்கு படத்தின் போஸ்டரை ஒட்டினார். மேலும் அவரது பயணம் மதுரை, திருச்சி, செலம் என பல ஊர்களுக்கும் தொடரும். இந்தப் பயணத்தில், அவரது படம் வெளியிடப்பட்டிருக்கும் திரையரங்க...
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம்

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா… விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
‘ரெளத்திரம்’ பட இயக்குநர் கோகுலின் இரண்டாவது படமிது. காந்திஜியின் பிறந்தநாளன்று படத்தினை வெளியிட தோதாய் படத்தில் ஒரு மெஸ்சேஜும் வைத்துள்ளார். பாலா என்பவர் குடித்ததால் விபத்து நேர்கிறது; குமார் என்பவர் குடிக்காமல் இருப்பதால் இரு உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன.   சுமார் மூஞ்சி குமாராக விஜய் சேதுபதி. இன்றைய ட்ரென்டின் படி, பொறுப்பில்லாத இளைஞராக வருகிறார். அவரது ஒரே வேலை, எதிர் வீட்டு குமுதாவை ‘ஹேப்பி’ செய்வதும் குடிப்பதும் தான். படத்தின் கடைசிக் காட்சிகளில் அவர் செய்யும் ரொமான்ஸ் எல்லாம் செம அருமை. இவரும் இவரது அசிஸ்டென்ட் ‘ரொம்ப சுமார் மூஞ்சி’ குமாரும் மதுவிற்காக அலையும் காட்சிகள் எல்லாம் அலப்பறை. அதுவும் விஜய் சேதுபதியின் மனநிலையைச் சொல்லும் ‘ரொம்ப சுமார் மூஞ்சி’ குமாரின் தொடர் வசனங்கள் ரசிக்க வைக்கின்றன. விஜய் சேதுபதியை முறைப்பதற்கு மட்டும் நந்திதா. எதிர்நீச்சலில் ‘கோச்’ வள்ளியா...
முருகதாஸின் ஹாட்ரிக் வெற்றி – ராஜா ராணி!

முருகதாஸின் ஹாட்ரிக் வெற்றி – ராஜா ராணி!

சினிமா, திரைத் துளி
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் உடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் வழங்கும்  தொடர் வெற்றி  'ராஜா ராணி'.அக்டோபர் 1. பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து ஏ.ஆர். முருகதாஸ் இணைந்து வழங்கிய, அட்லியின் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா இணைந்து நடித்து வெளி வந்த 'ராஜா ராணி' முதல் வார இறுதியில் 12.2 கோடி வசூல் செய்து உள்ளது. இது இதுவரை இந்த வருடம் வெளி வந்த படங்களில் நான்காவது பெரிய வசூல் என கூறப்படுகிறது. ஆர்யா நடித்து  இதுவரை வந்த படங்களில்  இதுவே பெரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மட்டுமல்ல வெளி நாட்டிலும் இந்தப் படத்தின் சாதனை பிரமிப்பு ஊட்டுகிறது.டாலர் கணக்கில் இந்த படத்தின் வெளிநாட்டு வசூல் 800,000 டாலரையும் தாண்டுகிறது. மலேசியாவில் 'ராஜா ராணி'யின்  வசூல் சாதனை பிரம்மாண்டமாய் இருக்கிறதாக விவரங்கள் தெரிவிக்கிறது.2011 ஆம் ஆண்டு வெளி வந்த 'எங்கேயும் எப்போதும்' படத...
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனம்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
ஏராளமான ஆச்சரியங்கள். அதில் பேராச்சரியமாக, ‘டாஸ்மாக்’ பாடலில்லாமல் வந்திருக்கும் மிஷ்கினின் படமிது. ஏன் மருந்துக்குக் கூட படத்தில் ஒரு பாடல் இல்லை. அதனால் படத்தில் கதாநாயகியும் இல்லை.படத்தைச் செலுத்துவது இளையராஜாவின் பின்னணி இசை. படக் கதையின் கருவிற்கு நம்மை தயார்படுத்தி, அதிலிருந்து நம்மை விலகாமல் பார்த்துக் கொள்கிறார் இசைஞானி. அவரை கெளரவப்படுத்தும் வகையில் ‘முன்னணி இசை கோர்ப்பு’ எனப் படம் தொடங்கும் முன் எழுத்துகள் வருகின்றன. இரவில் நடக்கின்ற கதை. ஒரு படம் முழுவதும் பார்வையாளரை இருட்டினிலேயே தடுமாற்றமின்றி அழைத்துச் செல்கிறார் ஒளிப்பதிவாளர் பாலாஜி வி.ரங்கா. ஆக படத்தின் ஒளியும் ஒலியும் படத்தின் ‘மூடை’ கன கச்சிதமாக பார்வையாளர்களிடம் கடத்துகிறது.ஆட்டுக்குட்டி சந்துருவாக ஸ்ரீ. ‘வழக்கு எண்:18/9’ படத்தில் அறிமுகமானவரின் இரண்டாவது படம். எத்தனை பேருக்கு இத்தகைய வாய்ப்பு அமையும்? மருண்ட வி...
ராஜா ராணி விமர்சனம்

ராஜா ராணி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எந்திரன் படத்தில் இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அட்லியின் முதல் படம். எனினும் பெரிய படங்களுக்கு ஒப்பான விளம்பரத்தினை தயாரிப்புக் குழு மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.காதல் தோல்விக்கு பின்பும் காதலும்/வாழ்க்கையும் உண்டு என்பது தான் படத்தின் ஒரு வரிக் கதை.ஏர்வாய்ஸ் கம்பெனியின் கஸ்டமர் கேரில் வேலை செய்யும் டெலிகாலர் சூர்யாவாக ஜெய். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தினைத் தொடர்ந்து மீண்டும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் படத்தில் அதே போன்ற கதாபாத்திரத்திலேயே நடித்துள்ளார். பயந்த சுபாவத்துடனும் கொச்சையான ஆங்கில உச்சரிப்புடனும் படத்தின் முதல் பாதி கலகலப்பிற்கு உதவுகிறார். நயன்தாராவிற்குக் கோபமாக ஃபோன் செய்து அழும் பொழுது, ‘எங்கப்பாக்கு மட்டுந்தாங்க பயப்படுவேன். மத்தபடி ஐ லவ் யூங்க’ என நயன்தாராவிடம் சொல்லும் பொழுது என பல இடங்களில் ரசிக்க வைக்க...
ஆவிகளின் கோட்டை

ஆவிகளின் கோட்டை

நம்பினால் நம்புங்கள்
லண்டனில் 'லண்டன் டவர்' வளாகத்தில் அமைந்துள்ள பழங்காலக் கோட்டை எட்டாம் ஹென்றியின் ஆதிக்கத்தில் இருந்ததாக சரித்திரச் சான்றுகள் ஆதாரபூர்வமாகக் கூறுகின்றன.இந்தக் கோட்டைக்கு வருடந்தோறும் ஏராளமான டூரிஸ்டுகள், ஆராய்ச்சியாளர்கள் உலகெங்கிலுமிருந்து வருகிறார்கள். இந்த பழங்காலக் கோட்டையில் ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்வதாக கடந்த 700 ஆண்டுகளாக பல நம்பத்தகுந்த செய்திகள் கிடைத்துள்ளன. அரண்மனை போன்ற இந்தக் கோட்டைக்குள் ஏராளமான பெரிய பெரிய அறைகள் உள்ளன.நீதிமன்றம், தண்டனை வழங்கும் கொலைக் களம், அந்தப்புரம், தர்பார் மண்டபம் என்று பல பிரிவுகள் உள்ளன. இந்தக் கோட்டையை ஆரம்பத்தில் பழுது பார்ப்பதற்காகச் சிதிலான இடங்களை இடித்தார்கள். அங்கே புதிய சுவர்களைக் கட்டினார்கள்.அப்போது, ஒரு பூதாகரமான பாதிரியார் உருவம் ஓடி வந்து அந்தச் சுவரை இடித்தது. அந்தப் பாதிரியாரின் மிருக பலத்தால் சுவர் பொலபொலவென்று இடிந்து விழு...
தங்க மீன்கள் விமர்சனம்

தங்க மீன்கள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சிறுகதை ஒன்றினைக் கவிதையாக்கிக் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார் இயக்குநர் ராம். ஒளிப்பதிவாளர் அர்பிந்து சாராவின் ஒளிப்பதிவு பிரமிக்க வைக்கிறது. படத்தின் பலமே அதன் காட்சியமைப்புகள் தான்.செல்லம்மாவிற்கும் அவளது தந்தை கல்யாணசுந்தரத்திற்கும் இடையே உள்ள பாசப்பிணைப்பு தான் படத்தின் கதை. செல்லம்மாவாக சாதனா. பெரிய மனித தோரணையில் ஏற்ற இரக்கத்துடன் பேசும் திரைப்படங்களுக்கே உரித்தான குழந்தை. ‘அவர் நல்ல அப்பா. ஏமாத்த மாட்டார்’ என்னும் பொழுது ரசிக்க வைக்கிறார். வசனமற்ற காட்சிகளில் முக்கியமாக ‘ஆனந்த யாழ்’, ‘ஃபர்ஸ்ட் லாஸ்ட்’ போன்ற பாடல்களில் செல்லம்மாவின் குறும்புத்தனம் இயல்பாய் உள்ளது. நா.முத்துக்குமார் வரிகளில், யுவன் இசையில் பாடல்கள் எல்லாம் மனதை வருடுகின்றன. காலங்காலமாய் வஞ்சிக்கப்பட்டு வரும் பெண்களின் அடையாளமாய் வடிவு எனும் கதாபாத்திரத்தில் ஷெல்லி கிஷோர் நடித்துள்ளார். படத்தில் இவர் செல்...
ஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி

ஆண்ட்ரியாதான் சிம்புவுக்கு சரியான ஜோடி

சினிமா, திரைத் துளி
'விண்ணைத் தாண்டி வருவாயா' படத்தில் சிம்புவிடம் இங்க என்ன சொல்லுது என்ற கேள்வியைக்  கேட்டு பரபரப்பாகப்  பிரபலமானவர் கணேஷ். அந்தப் படத்தில் துவங்கிய இவர்களது நட்பு , இப்போது கணேஷ் தயாரிக்கும் ' இங்க என்ன சொல்லுது'  படம் வரை தொடர்ந்து, சிம்புவின் ஈடுப்பாட்டால் அந்தப் படத்தை பெரிய படமாக்கும் வரை நீடித்து  வருகிறது . இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையின் தேர்வு நடைபெற்று வந்தது . இதுவரை வந்திராத ஜோடியாக இருக்க வேண்டும் என்ற கணேஷின் எண்ணத்துக்கு ஏற்ப தேர்வு நடந்தது . இறுதியில் சிம்பு ஜோடியாக ஆண்ட்ரியா தேர்ந்து  எடுக்கப்பட்டார்.இந்த ஜோடி தேர்வைப் பற்றி கணேஷ் கூறும் போது, “சிம்புவும் ஆண்ட்ரியாவும் மிகச் சரியான ஜோடி. என் கணிப்பில், என் பார்வையில் அவர்களது ஜோடி ஒரு உற்சாகமான ஜோடியாகவே தெரிகிறது. ரசிகர்களுக்கு இந்த ஜோடியை ரொம்பவே பிடிக்கும் . இந்தக் கதா...
மூடர்கூடம் விமர்சனம்

மூடர்கூடம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
உலகிலுள்ள எல்லா மனிதர்களும் ஏதோவொரு வகையில் முட்டாள்களே!! அப்படிச் சில மூடர்கள் கூடும் இடத்தை தான் மூடர் கூடம் என்று தலைப்பாக்கியுள்ளார் இயக்குநர் நவீன்.சிறையில் சந்திக்கும் நால்வர், வெளியில் வந்ததும் ஒரு வீட்டைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகின்றனர். பின் என்ன நடந்தது என்பது தான் கதை.வெள்ளையாக ராஜாஜி. படத்தில் நாயகன் என தனித்து யாருமில்லை எனினும், ராஜாஸ் ஒரு முஸ்லீம் பெண்ணைக் காதலிக்கிறான். அழகான மான்டேஜ் காட்சிகளுடன் டூயட் சாங் ஒன்றும் உள்ளது. ஆக படத்தின் நாயகன் என இவரை மனத் திருப்திக்காக சொல்லிக் கொள்ளலாம். இவருக்கு ஜோடியாக சிந்து ரெட்டி சில நிமிடங்கள் தோன்றி மறைகிறார். தாடி வைத்த முகத்துடன் வரும் குபேரன் சில காட்சிகளில் மட்டும் ரசிக்க வைக்கிறார். ஒரு வீட்டிற்குள் தான் படத்தின் பெரும்பாலான காட்சிகள் நடக்கிறது என்றாலும், படத்தின் இறுதியில் ஃப்ரேம் முழுவதையும் ஆட்கள் நிரப்பிக் கொள்கிற...
வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
கைப்புள்ளயான வின்னர் பட வடிவேலு தான் இப்படத்தின் தலைப்பிற்கும், கதைக்கும் (!?) காரணமான நபர் எனக் கூறலாம். அதாவது பொறுப்பற்ற கதாபாத்திரங்கள் நகைச்சுவையாளர்கள் என்ற நிலையில் இருந்து நாயகர்களாக மாறி விட்டனர். சிலுக்குவார்பட்டி சமூக ஆர்வலன் போஸ்பாண்டி. வருத்தப்படாத வாலிபர் சங்கத்தை நிறுவி தலைவராக இருப்பவன். மண் கடத்தல், பால்ய விவாகம் போன்றவற்றைத் தடுப்பவன். ஊர் பெரியவரான சிவனாண்டியின் மகளைக் காதலிக்கிறான். அவனது காதல் என்னானது என்பது தான் படத்தின் கதை.போஸ்பாண்டியாக சிவகார்த்திகேயன். எதிர்நீச்சல் படத்தினைக் கூட இயக்குநரின் படம் என சொல்லலாம். ஆனால் இப்படம் பொறுப்பில்லாத போஸ்பாண்டியினுடையது. முந்தைய படத்தினை விட கொஞ்சம் நடிப்பிலும் மெருகேறியுள்ளார். அசட்டுத்தனமாக வழியும் ஒற்றை பாவனையிலிருந்து ஒருவழியாக மீண்டு சில காட்சிகளில் நடிக்கவும் செய்துள்ளார். அவரது நடனமும் ரசிக்க வைக்கிறது. அவர் இன...
“அம்மா அம்மம்மா” – சரண்யா

“அம்மா அம்மம்மா” – சரண்யா

சினிமா, திரைத் துளி
ஆ.சந்திரசேகர் திரைக்களம் என்ற பட நிறுவனம் சார்பாக மாம்பலம் ஆ.சந்திரசேகர் கதை எழுதி தயாரிக்கும் படத்திற்கு “அம்மா அம்மம்மா” என்று பெயரிட்டுள்ளனர்.இந்தப் படத்தில் சம்பத், சரண்யா, ஆனந்த், சுஜிதா, தேவதர்ஷினி, T.Pகஜேந்திரன், சாந்தி வில்லியம்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள்.“நான் மோகமுள், பாரதி, பெரியார் போன்ற படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றி உள்ளேன். இந்தப் படத்தில் சரண்யா – சம்பத் திருமணமாகி 15 ஆண்டுகளாகியும் குழந்தை பேறு கிட்டாத தம்பதி.ஒருநாள் குழந்தைவரம் வேண்டி கோயிலுக்குச்  சென்றிருந்தபோது ஆனந்த் – தேவதர்ஷினி குடும்பத்தைச் சந்திகிறார்கள். அவர்களுக்கு இரண்டு சிறுவர்கள். அடுத்த சில நாட்களில் இவர்களுக்குள் நட்பு மலர்கிறது.இந்நிலையில் பெண்குழந்தை ஒன்றை பிரசவித்துவிட்டு தேவதர்ஷினி இறந்து போக, அந்தக் குழந்தையை தாங்கள் வளர்க்க விரும்புவதாக சரண்யா  கெஞ்ச, குழந்தையை அவர்களிடம்...
“மனித உருவில் திரியும் மிருகங்கள்” – காவ்யா ஷெட்டி

“மனித உருவில் திரியும் மிருகங்கள்” – காவ்யா ஷெட்டி

சினிமா, திரைத் துளி
பிரபல விளம்பர மாடல் காவ்யா ஷெட்டி இப்போது ' ஷிவானி'  திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.ஷிவானி ஒரு திகில் படம் என்றும் அதில் அவருடைய பாத்திரம் திகில் ஊட்டுவதாக இருக்கும் என கூறப்படுவதைக் கேட்டு சிரித்த ஷிவானி,  “என்னுடைய நடிப்பு எனக்கு திருப்தியாக இருந்தது , அது தவிர  படப்பிடிப்பு குழுவினரும் என்னை பாராட்டுவது எனக்கு மகிழ்ச்சியே. நான் கதையை சொல்ல மாட்டேன். ஆனால் ஒன்று சொல்லியாக வேண்டும்.  நான் இயல்பாகவே பயந்த பெண் தான். இரவில் தனியாக செல்ல இன்னமும் அச்சம் தான். பயம் பேய் , பிசாசினால் அல்ல. மனித உருவில் திரியும் மிருகங்களால் தான். பெண்களுக்கு எதிராகத் தொடரும் வன்கொடுமைகள் மனதை காயப்படுத்துகிறது. என் மனம் மும்பை பெண்  புகைப்பட நிருபருக்காக அழுகிறது.  என் கருத்தின் படி சினிமா உலகம், பொதுவான சமுதாய உலகை விட பாதுகாப்பானது என்று தான் கருதுகிறே...