
காரைக்கால் அம்மையின் தரிசனம்
கொங்கைதிரங்கி நரம்பெ ழுந்து
குண்டுகண்வெண்பற் குழிவ யிற்றுப்
பங்கிசிவந்திரு பற்கள் நீண்டு
பரடுயர்நீள்கணைக் காலோர் பெண்பேய்
தங்கியலறி யுலறு காட்டில்
தாழ்சடைஎட்டுத் திசையும் வீசி
அங்கங்குளிர்ந்தன லாடும் எங்கள்அப்பனிடந்திரு ஆலங் காடே.---காரைக்கால் அம்மையார் முலைகள் வற்றிசரிந்து, நரம்புகள் எழுந்து, கண்கள் பெரிதாகி பசியினால் ஒட்டிய வயிறு, பரந்ததலைமுடி சிவந்து பற்கள் நீண்டு, பரந்த துயருடன் பெண்பேய்கள் அலறியும் உலறியும்திரியும் காட்டில் – சிண்டு விழுந்த சடைகள் எட்டுதிக்கும் பரவி வீசி அங்கம்குளிர்ந்து நெருப்பில் ஆடும் எங்கள் அப்பனாகிய சிவன் உள்ள இடமே திருஆலங்காடு.காரைக்கால் அம்மையாரின் பாடல்களே இது. இவர் வாழ்ந்தவரலாற்றையும் பின்னணியையும் தெரிந்து கொண்டால் இப்பாடல்களுக்கு இன்னும் உச்சம்கூடும். காரைக்காலில் செழிப்பான வணிகரின் ஒரே மகள் புனிதவதி. மிக செல்லமா...














