Shadow

Author: admin

கந்தசாமி விமர்சனம்

கந்தசாமி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
  நாளை.. நாளை.. என நாட்களை தள்ளி ஒரு வழியாக "கந்தசாமி" -ரசிகர்களை கலக்க களம் குதித்து விட்டார் கடந்த வெள்ளியன்று.எப்படியும் கலக்குவார் என எதிர்பார்ப்பில் எலும்புகள் நொறுங்க டிக்கெட் வாங்கிய ரசிகர்கள்..     களிப்படைந்தனரா? இல்லை..     கடியடைந்தனரா?அதற்கு 'ஆம்', 'இல்லை'யென ஆருடம் வார்த்தைகள் இரண்டுக்குள் வரையுறைக்க முடியாது.எதிர்பார்ப்புகள் அதிகமெனில் ஏமாற்றம். எதிர்பார்ப்பற்று போனால் 'எஞ்சாய்மென்ட்'."கந்தசாமி"- மூன்று வருட உழைப்பு, கிராமங்களை தத்தெடுக்கும் நூதன விளம்பரம், பட பூஜை அழைப்பிதழை திறந்தால் 'ட்ரெய்லர்' என ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பை ஆழமாக விதைத்து விட்டது.ரமணா, அந்நியன், சிவாஜி என மூன்று வெற்றிப் பட கதைகளின் சமச்சீரான கலவை தான் கந்தசாமியின் கரு. பணமும், உழைப்பும் அபிரிதமாக செலவிடப் பட்டிருக்கிறது. ஆ...
இஸ்ரோவின் “புவன்”

இஸ்ரோவின் “புவன்”

தொழில்நுட்பம்
கூகிள் எர்த்தை தொடர்ந்து இந்தியாவின் கிராமங்கள், நகரங்கள், புவியியல் இடங்களை இணையத்தில் காண இஸ்ரோ "புவன்" என்று ஒரு வலைத்தளம் உருவாக்கி உள்ளது. கடந்த மூன்று வருடங்களாக செயற்கைக் கோள்களின் மூலம் எடுக்கப்பட்ட பல்வேறு புகைப்படங்களின் உதவியோடு இச்சேவையை அளிக்கிறது. 55 மீட்டர் உயரத்தில் இருந்து விரும்பிய இடங்களை பார்க்க முடிந்தாலும், பாதுகாப்பு கருதி சில முக்கிய இடங்களை காண முடியாதவாறு தடை செய்துள்ளனர்.- தினேஷ்  ராம்...
வேலுபிரபாகரனின் காதல் கதை விமர்சனம்

வேலுபிரபாகரனின் காதல் கதை விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"வேலுபிரபாகரனின் காதல் கதை" என்ற பெயரைப் பார்த்தவுடன் வேலுபிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம் 'காதல் கதை' என்று நினைத்தால் அது தவறு என்பது படம் பார்த்தவுடன் புரிந்து விடும். படத்தின் முழு பெயரே 'வேலுபிரபாகரனின் காதல் கதை' தான். படத்தில் வேலுபிரபாகரன் ஒரு இயக்குனராகவே வருகிறார். அவர் எடுக்கும் படம் சர்ச்சைக்குள்ளாகி, அந்தப் படத்தை தடை செய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு போடப்படுகிறது. ஆட்டோவில் வந்து கொண்டிருக்கும் வேலுபிராகரனைக் குண்டர்கள் சிலர் வழி மறித்து கத்தியால் குத்தி விடுகின்றனர். வேலுபிராபகரனைப் பற்றி அவருக்கு கடைசியாக ஃபோன் செய்த பெண் பத்திரிகை நிருபரை அழைத்து விசாரிக்கின்றனர். பெண் நிருபர் வேலுபிராபகரனின் சர்ச்சைக்குரிய கதையையும், அவரது சொந்த வாழ்க்கையில் ஏற்பட்ட காதலையும் பற்றி காவல் துறையினருக்குச் சொல்கிறார். 'விஷ்ணுபுரம்' என்ற ஊரில் அவர் பார்த்த உண்மைச் சம்பவங்கள் ...
மோதி விளையாடு விமர்சனம்

மோதி விளையாடு விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"மோதி விளையாடு" என்ற பெயரைப் பார்த்தவுடன், மீண்டும் தமிழில் ஒரு அழகான அதிரடிப் படம் வால் பிடித்து தொடர்கிறது என்று எண்ண தோன்றியது. சுவரொட்டிகளும் அதை பிரதிபலித்தன. இயக்குனர் சரணின் முந்தைய படங்கள் ஏற்படுத்திய எதிர்ப்பார்ப்பும் கை கோர்த்து கொண்டது. விஜய்யின் 'விஷ்ணு' படமும் ப்ராஷாந்தின், 'ஸ்டார்' படமும் ஞாபகத்தில் வருகிறது என்றாலும் வித்தியாசப்படுத்தி காட்டியுள்ளார் இயக்குனர். வழவழப்பான ஹெலிகாப்டர்களும், சொகுசு கார்களும், கண்ணாடி மாளிகை அலுவலகமுமாக ஹாலிவுட் அளவிற்கு படம் தொடங்குகிறது. அதன் உரிமையாளராக பணமே லட்சியமென ஓடும் கலாபவன் மணி அறிமுகமாகிறார். கார் ஓட்டுநர், கதவை திறக்கும் காவலாளி, பணி புரியும் பெண் ஊழியரென அனைவரிடமும் தனது கதாபாத்திரத்தின் வில்லத்தனத்தை ரசிகர்களுக்கு புரிய வைக்க மெனக்கெட்டு தனது நேரத்தை ஒதுக்கி, அவரது பாணியில் பேசி மனம் நோக செய்கிறார். கலாபவன் மணிக்கு அது பொருந்தினா...
எங்கள் ஆசான் விமர்சனம்

எங்கள் ஆசான் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
"எங்கள் ஆசான்" என்ற பெயரைப் பார்த்தவுடன், நாட்டுக்கு நீதி சொல்ற கதையாக இருக்குமோ என்ற கிலியாக இருந்தது. ஆனால் இது பேன்ட், ஷர்ட் போட்ட "பெரியண்ணா" பாகம் இரண்டு . விஜயகாந்த் ஊருக்கு நல்லது செய்கிறார். அப்படியே ஒரு காதல் ஜோடியையும் சேர்த்து வைக்கிறார். இதை பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமில்லாமல் சொல்லியுள்ளார் இயக்குனர் கலைமணி. பெரியண்ணாவில் சூர்யா, எங்கள் ஆசானில் சிக்கியது விக்ராந்த். ஒரு ஃபைட்டு, ரெண்டு பாட்டு என்று முதல் பாதியில் வலம் வந்து விட்டு அதோடு பொறுப்பை விஜயகாந்திடம் கொடுத்து விட்டு கடைசியில் நேராக க்ளைமாக்சில் தலையை காட்டுகிறார்.தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு இந்த படம் ஒரு பெரிய உதாரணம். அமர்களமான அறிமுகம் கதாநாயகனுக்கு இல்லை. புது முயற்சியாக சம்பந்தமே இல்லாமல் மிரட்டலான வில்லி அறிமுகம். படம் முழுவதும் வில்லியாக வலம் வந்து, கடைசி நேரத்தில் கதாநாயகியாக மீண்டும் ஸ்டன்...
நாடோடிகள் விமர்சனம்

நாடோடிகள் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
சமுத்திரகனி இயக்கத்தில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நாடோடிகள் திரைப்படத்தில் சசிகுமார் உட்பட நடிகர்கள் நடித்துள்ளனர் இயக்குனர் பாலச்சந்தரிடம் உதவியாளாராக இருந்தவர் படத்திலும் அது தெரிகிறது. நண்பனை அவன் காதலியுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் நண்பர்கள் 3 பேர் தன் வாழ்க்கையே இழக்கின்றனர். ஆனால் திருமணத்திற்கு பிறகு ஏற்படும் சலிப்பால் காதலர்கள் இருவரும் பிரிகின்றனர் அதோடு நண்பர்களையும் அவமானப்படுத்துகின்றனர் இதில் விரக்தியடையும் நண்பர்கள் காதலர்களை பழிவாங்க நினைக்கின்றனர் இறுதியில் காதலர்கள் திருந்தினார்களா, கொல்லப்பட்டார்களா? என்பதுதான் படத்தின் கதை. அனைவரும் நன்றாக நடித்துள்ளனர் (குறிப்பாக அபினயா) . ஒளிப்பதிவு, பாடல்கள் நன்றாக உள்ளன. இந்த படத்தின் மூலம் இயக்குனர் சமுத்திரகனி காதல் திருமணங்கள் தோல்வி அடையும் பெற்றோர் பார்த்துவைக்கும் திருமணம் வெற்றி பெறும் என்று சொல்ல வருகிற...